Monday, December 30, 2013

யாளி என்றொரு இந்திய இதிகாச விலங்கு...

நாம் பலரும் கோயில்களுக்கு சென்றிருப்போம் (வேறு வேறு காரணங்களுக்காக, அது முக்கியமில்லை), அதுபோலவே கோயில் தூண்களையும் பார்த்திருப்போம்.  தமிழகக் கோயில்களில் (தென்னிந்திய கோயில்கள் எனக் கொள்க; கர்னாடகா, ஆந்திராவின் சில பல பகுதிகளும், முழுக்கேரளாவும் தமிழர்களாகவே இருந்தார்கள்) மூலவர் எந்த அளவிற்கு அருளுக்கு முக்கியமோ அந்த அளவிற்கு சிற்பக் கலைத்திறனுக்கும், அழகுக்கும் முக்கியமானவை கோபுரங்களும், மேற்கூரை ஓவியங்களும் (இன்றைய பெயிண்ட் ஓவியங்கள் அல்ல, பழங்கால ஓவியங்கள்) தூண்களும்.  ஆனால் நாம் பலரும் கொஞ்சம் கூட கவனிக்காமல் விட்டுவிடுகின்ற ஆனால், மிகவும் கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள் இவை எல்லாம் தான்.  அதில் நம் கோயில் தூண்களுக்கு ஒரு தனிச் சிறப்பான இடம் உண்டு.  சரி தூண்களை ஏன் கவனிக்க வேண்டும் என்பதற்கு முன்

நாம் எது எதற்காகவெல்லாம் தூண்களை பயன்படுத்துவதுகிறோம் என்று பார்ப்போம்
1. கையில் மீதமிருக்கும் கோயில் பிரசாதங்களான விபூதி, குங்குமம் ஆகியவற்றை கொட்டிவிட்டு, அதற்கு மேலும் கையில் ஒட்டியுள்ளதை தேய்க்க
2. சாய்ந்து உட்கார்ந்து பேச
3. நெய் விளக்கோ, எண்ணெய் விளக்கோ ஏற்றிவிட்டு பிறகு கையின் எண்ணெய்ப் பசையை தேய்த்து நீக்க
இன்னும் பல காரணங்கள் இருக்கின்றன இங்கே இதை நிறுத்திக்கொள்வோம்.  இப்போது நமது தலைப்பிற்கு வருவோம்.

நம்மில் எத்தனைப் பேருக்கு யாளி என்றால் என்னவென்று தெரியும்?  சரி விடுங்கள் டிராகன் என்றால்..?

ஆகா, டிராகன் தெரியாதா எங்களுக்கு..?
வாயிலிருந்து நெருப்பைக் கக்கிகொண்டே பறக்கும் ஒரு Gigantic சீனாக்கார இதிகாச விலங்கு தானே அது. 

சிவகங்கை கோயிலில் யாளி சிற்பம்
சிவகங்கை கோயிலில் யாளி சிற்பம்
By Manjeshpv [CC-BY-SA-3.0]
ஆம், அதேதான், அப்படியே அதற்கு இணையான ஒரு இந்திய இதிகாச விலங்கை தான் யாளி என்பார்கள்.   பெரும்பாலும் கோயிலின் தூண்களிலும், சில இடங்களில் கோயில் கோபுரங்களிலும் இதன் வடிவத்தை நீங்கள் பார்த்திருக்கலாம்.  தூண்களில் இருகாலில் நின்று, இருகால் தூக்கி கூரான பற்கள் தெரிய தும்பிக்கைப்போன்ற ஒன்று தொங்கிக்கொண்டிருக்க, தும்பிக்கையின் அடியில் ஒரு யானை இருக்கும் அமைப்பில் இருக்கும் அந்த இதிகாச விலங்குதான் யாளி.  சில இடங்களில் யாளியின் மீது ஒரு வீரன் அமர்ந்திருப்பது போலவும் சிலைகள் இருப்பதுண்டு (காலத்தால் பிந்திய கோயில்களாக இருக்கக் கூடும்)




யாளி:

முகம் யானை வடிவில் இருந்தால் - யானை யாளி
முகம் சிங்கம் வடிவில் இருந்தால் - சிங்க யாளி
முகம் குதிரை போன்று இருந்தால் - குதிரை யாளி

இந்த மூன்றையும் நான் பல கோயில்களில்/ஓரே கோயிலில் வேறு வேறு இடங்களில் பார்த்திருக்கிறேன், இந்த மூன்றும் தான் மிக அதிக அளவில் காணக்கிடைக்கக் கூடியதும் ஆகும்.  இது தவிர வேறு வடிவங்களிலும் உண்டென்று அங்கொன்றும், இங்கொன்றுமாக படித்துள்ளேன். 



யாளியை எங்கே பார்க்கலாம் என்று கேட்காதீர்கள், ஓரலவிற்கு பழமையான, தூண்கள் உள்ள எல்லா கோயில்களிலும் யாளியின் உருவத்தைப் பார்க்கலாம்.  சிற்பங்களுக்கென்றே மிகப் பெரிதாகப் பேசப்படும் கோயில்களில் நிச்சயமாகப் பார்க்கலாம், உங்களுக்காக சில முக்கிய கோயில்கள்
1. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்
2. இராமேஸ்வரம் கோயில்
3. சிதம்பரம் நடராசல் கோயில்
4. காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில், ஏகநாதர் கோயில்
5. ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில்
6. தென்காசி விஸ்வநாதர் கோயில்
இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்... நீங்கள் உங்கள் வீட்டிற்கு பக்கத்தில் இருக்கும் கோயிலில் தேடுங்கள், கண்டடைவீர்கள்.  இன்னும் ஒரு விஷயம் யாளியின் உருவம் சிவன், விஷ்ணு, முருகன் கோயில்கள் என்ற பாகுபாடின்றி எல்லா கோயில்களிலும் காணக் கிடைக்கக் கூடியது, ஆகவே யாளியை சமய சார்பில்லா ஒரு இதிகாச விலங்கென்றும் சொல்லலாம். [கருடன், நந்தி போன்றோரெல்லாம் என்னை மன்னிப்பாராக..]

முன்பு எப்போதோ ஒரு இணையப்பக்கதில் யாளியானது யானையை உணவாக உட்கொள்ளும் என்று படித்திருந்தேன்.  அந்த பக்கத்திற்கான உரலியை தவறவிட்டுவிட்டேன், கண்டறியும்போது உங்களுக்கு update செய்கிறேன். நிற்க

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலில் யாளி
திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலில் யாளி
by  P.K.Niyogi
டிராகனுக்கு சீனாவிலோ, ஹாங்காங்கிலோ வேறு எங்குமோ சிலைகள் உண்டா என்று நானறியேன் ஆனாலும் அதைத் தெரிந்த நமக்கு, நாம் தினந்தோறும்...!? சரி அடிக்கடி...!? சரி விடுங்கள் திருவிழா சமயங்களில் போகும் எல்லா கோயில்களிலும் கிட்டத்தட்ட காணக்கிடைக்கும், அதுவும் தூணுக்குத் தூண் காணக் கிடைக்கும் யாளியை தெரியவில்லை என்பது உறுத்தலாகத்தான் இருக்கிறது.  இதை இன்னொரு விதமாகப் பார்க்க வேண்டுமென்றால், அதாவது பொது மக்களிடத்தில் இளைஞர்களிடத்தில் யாளியை கொண்டு சேர்க்கவேண்டுமென்றால் அவர்கள் புழங்கக்கூடிய இடத்தில் யாளியை உலவ விடவேண்டும் (அட, கிராபிக்ஸ், புத்தக, கதை வடிவில்தான் சொல்கிறேன், ஃபேஸ்புக், டிவிட்டரில்தான் சொல்கிறேன் ).  சீனர்கள் அதை செய்தனர், சினிமாவின் உதவியோடு, அதை ஹாலிவுட்டும் பற்றிக்கொண்டது, டிராகன் மக்கள் மனதில் வாழ ஆரம்பித்துவிட்டது.  முடிந்தவரை நாமும் தற்போது மக்கள் புழங்கும் இடங்களான facebook, twitter, g+ போன்ற இடங்களில், திரைப்பட அரங்குகளில் இதை செய்தால் யாளி மறு பிறப்பெடுக்கும் !?

டிராகன் Vs யாளி

இந்தியாவும் சீனாவும் கலை, கலாச்சாரம், வரலாறு, புராண இதிகாசம் தொன்மம் என்று பல விதங்களிலும் மிக மிக பழமையானவை.  ஆனால், டிராகன் இன்றும் மக்கள் மனதில் இருக்கிறது ஆனால் யாளி இல்லை ஏன் என்ற கேள்வி கேட்டால், பதில்

சீனாக்காரன் தனது மார்கெட்டிங் திறமையால்(கேரளத்து அரசாங்கம்/மக்களைப் போல, இதைப்பற்றி இன்னொருப் பதிவில் எழுதுகிறேன்) டிராகனை உலகம் பூராவும் உலவ விட்டுவிட்டான், அதுவும் இன்றுவரை கிராபிக்ஸ் துணையோடு உலவிக்கொண்டே இருக்கிறது.  நாமும் பெப்பரப்பேனு வாயப் பொளந்துகிட்டு பாத்துகிட்டுருக்கோம்.  இன்னிக்கிவரைக்கும் சீனாவப் பத்தி வர்ற(நாம பாக்குற) படத்துல 50% ஒன்னு டிராகன் படத்தோட கதைல இருக்கும், கதைல இல்லனா படத்தோட டைட்டில்ல இருக்கும் சாம்பிள் பாக்கறீங்களா?

குரோச்சிங் டைகர், ஹிட்டன் டிராகன்
என்டர் த டிராகன்
தி வே ஆஃப் த டிராகன்
ரிட்டன் ஆஃப் த டிராகன்
ரெய்ன் ஆஃப் ஃபயர்
டிராகன் ஹார்ட்
டிராகனுடன் தொடர்புடைய படங்களின்/தொலைக்காட்சித் தொடர்களின் பட்டியல் இந்த சுட்டிகளில் உள்ளது
https://en.wikipedia.org/wiki/List_of_dragons_in_film
https://en.wikipedia.org/wiki/List_of_dragons_in_film_and_television
http://www.ranker.com/list/best-dragon-movies-list/all-genre-movies-lists

ஆனா, யாளியப் பத்தி நாம படமும் எடுத்ததில்ல, படத்துக்கு டைட்டிலும் வச்சதில்ல.. அட அதவிட ஒரு கத புத்தகங்கூட அதப்பத்தி வந்ததில்லை அப்பறம் எங்கேருந்து யாளினா என்னானு நமக்கு தெரியும்.  கோயிலுக்கப் போறப்ப ஒரு சின்ன கொழந்த இந்த செலையலாம் பாத்துட்டு அது என்னா, இது என்னானு கேட்டா பதில் சொல்ல அப்பா, அம்மாவுக்கும் தெரியல, பொத்தாம் பொதுவா அது ஒரு சாமி, அது ஒரு animal அப்டினு சொல்லி சமாளிக்கிறாங்க என்னத்த சொல்ல...?

கொறஞ்சபட்சம் இதப் படிக்கிறதுல ஒரு நாலு பேராவது(மொதல்ல 4 பேராவது இதப் படிப்பாங்களா?  உங்க மைண்ட் வாய்ஸ நான் கேட்ச் பண்ணிட்டேன் ;P) இனிமே கோயிலுக்குப் போகும்போது சாமியோட சேர்த்து கோயில் தூணையும், கோபுரத்தையும், யாளியையும் சும்மானாச்சுக்கும் அப்புடியே வேடிக்க பாத்துட்டு வந்தா சந்தோஷம்.

குறிப்பு 1:
இதை எழுதும்போது கொஞ்சம் கூகுள் செய்தபோது யாளியை மையமாக வைத்து ஒரு தமிழ் நாவல் வந்துள்ளதை அறிந்தேன். 
அதனு சுட்டிகள் விருபா இணையதளத்தில் & சாய்ராம் வலைபூவில்

குறிப்பு 2:
நேற்று நண்பன் கோகுலுடன் அவனுடைய ராயல் என்பீல்டில் திருக்கழுக்குன்றம் வேதபுரீஸ்வரர் கோயிலுக்குச் சென்றிருந்தேன்.  அப்பொழுது அவனுடைய யாளி பற்றிய சந்தேகத்திற்குப் பதில் சொல்லிக் கொண்டிருந்த போதுதான் யாளி பற்றி நிறைய பேருக்கு தெரியவில்லை என்கிற ஆதங்கம் வந்தது.  அந்த ஆதங்கத்தின் வெளிப்பாடே இப்பதிவு.

யாளி குறித்து விக்கிப்பீடியாவில் தமிழ்  மற்றும் ஆங்கிலம்

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை(22-12-13 முதல் 28-12-13வரை)

தகவல் மைய(Data centre) பாதுகாப்பு என்பது 2014 -ம் ஆண்டின் அதிக முன்னுரிமை வாய்ந்ததாக இருக்கும் மெக்அஃபே நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆரக்கிள் நிறுவனம் மற்றொரு மென்பொருள் நிறுவனமான ரெஸ்பான்சிஸ் (Responsys) நிறுவனத்தை 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு கையகப்படுத்தியுள்ளது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது விண்டோஸ் அலைபேசி பயனர்களுக்கு 20 GB மேகக் கணிமை சேமிப்பு இடத்தை இலவசமாக வழங்கியுள்ளது.

அமேசான் நிறுவனம் கிறிஸ்துமஸ் சமயத்தில் பொருட்களை விநியோகிக்க ஆன காலதாமதத்திற்கு பரிகாரமாக $20  பரிசுக் கூப்பனையும், பொருட்களை விநியோகிக்க ஆகும் செலவையும் தானே ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது.

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை முந்தைய வாரப் பதிவு



தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை(15-12-13 முதல் 21-12-13வரை)

சாப் நிறுவனம் தனது சப்ளை செயின் தயாரிப்பான கங்கை (Ganges) -ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

கூகுள் நிறுவனம் ரோபோக்களை உருவாக்கும் போஸ்டன் டைனமிக்ஸ் (Boston Dynamics) என்கிற நிறுவனத்தைக் கையகப்படுத்தியுள்ளது.

பேஸ்புக், டிவிட்டர் போன்று இந்தியாவில் இருந்து ஒரு புதிய மைக்ரோ பிளாகுகிங் சமூக வலைதளம் வெப்லர் (vebbler) என்கிற பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது.

2014-ம் வருடம் 16,000 இளநிலைப் பட்டதாரிகளை பணியமர்த்தவுள்ளதாக இன்போசிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சமூக வலைதளங்கள் மற்றும் மைக்ரோ பிளாகுகிங் தளங்களைப் பயன்படுத்தி நிறுவனத்திற்கு ஆட்களை பணியமர்த்தும் முறை அதிகரித்து வருவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

டிவிட்டர் விரைவிலேயே தனது கீச்சுக்களை மாற்றி/திருத்தி எழுதும் சிறப்பம்சத்தை அறிமுகப்படுத்த உள்ளது.  இது போன்ற சிறப்பம்சம் பேஸ்புக் கமெண்டுகளில் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

சாம்சங் மற்றும் எல்ஜி இரண்டு நிறுவனங்களும் 105 இன்ச் உடன் வளைந்த திரையுடைய ஒஎல்இடி(OLED) தொலைகாட்சிப் பெட்டிகளை அறிமுகப்படுத்தவுள்ளது.

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை முந்தைய வாரப் பதிவு

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை(08-12-13 முதல் 14-12-13வரை)

எல்ஜி நிறுவனம் தனது வளைவான திரையுடைய நுண்ணறிபேசிகளை இந்தியாவில் டிசம்பரில் அறிமுகப்படுத்தவுள்ளது.

ஃபிளிப் கார்ட் நிறுவனம் செயல்படுத்திவரும் அதேநாளில் விநியோகம் (Same day delivery) அதற்கு நற்பெயரை ஈட்டித்தந்ததைத் தொடர்ந்து தற்போது அமேசான் நிறுவனமும் இதைப் பின்தொடரந்து அதேநாள் விநியோக முறையை அறிமுகப்படுத்தவுள்ளது.

யாகூ நிறுவனம் நிகழ்பட ஓடை சேவையை (Video Streaming) வழங்கும் புதிதாய் தொடங்கிய நிறுவனமான குயிக்ஐஓ(QuikIO) நிறுவனத்தினை கையகப்படுத்தியுள்ளது.

இன்டெர்நெட் ஆஃப் திங்ஸ் (Internet of Things (IoT) பற்றிய விளக்கத்திற்கு ) 2020 வாக்கில் 30 மடங்கு அதிகரிக்கும் என்று கார்டனர் நிறுவனம் கூறியுள்ளது.

இன்ஸ்டாகிராம் தனிப்பட்ட முறையில் புகைப்படங்கள் மற்றும் செய்திகளைப் பகிர்ந்துகொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

நுண்ணறிபேசிகளில் சக்கைப் போடு போட்ட விளையாட்டு செயலியான ஆங்கிரிபேர்ட்ஸ் விளையாட்டை உருவாக்கிய ரோவியோ நிறுவனம் தற்போது ஆங்கிரிபேர்ட்ஸ் கோ (angrybirds go)என்கிற பெயரில் கார் ரேஸ் விளையாட்டுச் செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

ட்ருகாலர் தனது பயனர்களை அதிகரிக்கவும் அவர்களின் ஆதரவைப்பெறும் வகையில் தற்போது டுவிட்டருடன் இணைந்து செயல்படவுள்ளது.

கூகுள் நிறுவனம் தனது வழங்கிக் கணினிகளுக்கான(Server computer) இயக்கிகளை (Processor) தானே தயாரிக்கவுள்ளதாக செய்திகள் கசிகின்றன.

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை முந்தைய வாரப் பதிவு


Sunday, December 29, 2013

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை(01-12-13 முதல் 07-12-13வரை)

ஸோலோ நிறுவனம் Q500 என்கிற பெயரில் ஒரு புதிய நுண்ணறி அலைபேசியை அறிமுகப்படுத்தவுள்ளது.

ஸ்னாப்சாட் என்கிற குறுஞ்செய்தி பேச்சுச் செயலி மிகவும் பிரபலமடைந்து வருகிறது.  மற்ற பேச்சு செயலிகளைப் போலின்றி இதில் அனுப்பும் செய்திகள் குறிப்பிட்ட கால அளவுக்குப் பிறகு (சில வினாடிகள்) பெறுநரின் பக்கத்திலிருந்து மறைந்து விடுவதோடு, வழங்கிக் கணினியிலிருந்தும் அழிந்துவிடம்.

இதுவரை கணினிகளைக் குறிவைத்து தாக்கிக் கொண்டிருந்த கொந்தர்கள், தற்போது நுண்ணறி தொலைக்காட்சி, பாதுகாப்பு கேமராக்கள் போன்றவற்றை தங்கள் கட்டளைக்கு ஏற்றவாறு செயல்படவைக்க ஆரம்பித்துள்ளார்கள்.

ஒரு நபர் tag செய்யப்படாத புகைப்படங்களிலும் அவரை அடையாளும் காணும் வகையில் ஒரு புதிய அல்காரிதத்தை (Algorithm)  டோரண்டோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள்/பேராசிரியர்கள் உருவாக்கியுள்ளனர்.

ஃபேஸ்புக் நிறுவனம் இந்தியாவைச் சேர்ந்த பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்ட லிட்டில் ஐ லேப்ஸ் (Litte Eye Labs) நிறுவனத்தை கையகப்படுத்தவுள்ளதாக அறியப்படுகிறது.

அமேசான் தனது கின்டில் ஃபயர் பலகைக் கணினிகளின் விலையைக் குறைத்துள்ளது.  தன்னுடைய 16 GB பலகைக்கணினியை ரூ. 18,000 மற்றும் 32 GB பலகைக்கணினியை ரூ 26,000 -க்கும் விற்கவுள்ளது.  இது அவற்றின் பழைய விலையை விட ரூ. 4000 குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகாஷ் பலகைக்கணினிகளை உருவாக்கும் டேட்டா வைண்டு நிறுவனம் தனது யுபிஸ்லேட் சிலேட்டு கணினிகளுக்கு செயலிகளை உருவாக்குவதற்காக  ஹேப்பியஸ்ட் மைண்ட்ஸ் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது.

அமேசான் நிறுவனம் இந்தியத் தபால் துறையுடன் இணைந்து விநியோகத்தின்போது பணம் பெறுதல் (கேஷ் ஆன் டெலிவரி -Cash on Delivery) முறையில் தனது பொருட்களை விநியோகிக்க முயற்சித்து வருகிறுது.  இது நடைமுறை சாத்தியமானால் அமேசான் இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் தனது எல்லைகளை விரிவுபடுத்தி இந்தியாவில் தனது இருப்பை நிலைநிறுத்தி ஃபிளிப் கார்ட், ஸ்னாப்டீல் போன்ற இந்தியக் நிறுவனங்களுடன் விற்பனையில் மல்லுக்கட்டும்.

நௌக்ரி.காம்(Naukri.com) நிறுவனப் புகழ் இன்ஃபோ எட்ஜ்(InfoEdge) நிறுவனம் 10 கோடி ரூபாயை இணைய வழி கல்வி மற்றும் மதிப்பீட்டு நிறுவனமான ஆப்லெக்ட் லெர்னிங் சிஸ்டம்ஸ் (Applect Learning Systems) நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது.

கூகுள் நிறுவனம் அமேசான் நிறுவனத்துடன் போட்டியிடும் விதமாக தனது மேகக் கணிமைச் சேவைக்கான விலையை குறைத்துள்ளது.  இது அமேசானுக்கு நெருக்கடி தரக்கூடிய நிகழ்வாக தொழில்நுட்ப உலகில் பார்க்கப்படுகிறது.

ஏர்செல் நிறுவனம் அடுத்த 3-6 மாதங்களில் இந்தியாவில் தனது 4G சேவைகளைத் தரவுள்ளதாக அறிவித்துள்ளது.  பார்தி ஏர்டெல் நிறுவனத்திற்கு அடுத்ததாக இந்தியாவில் 4G சேவைகளை இந்தியாவில் வழங்கவுள்ள 2-வது நிறுவனம் இதுவாகும்.

கூகுள் நிறுவனம் தனது குரோம் புக் (சாம்சங் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது) இந்தியாவில் வெளியிடவுள்ளது, இதன்விலை இந்திய ரூபாய் சுமார் 27,000 ஆக இருக்கும் எனத் தெரிகிறது.

சாம்சங் நிறுவனம் தனது இருபுறமும் ஒளிபுகக்கூடிய திரைக்கு(transparent dual side screen) காப்புரிமைப் பெறவுள்ளது.

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை முந்தைய வாரப் பதிவு

Monday, December 16, 2013

மினி கதைகள்-2 - பேங்க் லோன்

"டேய், பிரகாஷ் எப்படிடா இருக்க...? தொப்பலாம் போட்டுடிச்சி... ஹூம் கல்யாணம் பண்ணிட்டியாடா?" ஏழு வருட இடைவெளிக்குப் பின்னால் நண்பனைக் கண்ட சந்தோஷத்தில் கண்ணடித்து கேட்டான் நாகராஜன்.

"மாப்ள.. நல்லாருக்கேன் டா..., நீ எப்டி இருக்க?" என்றான் பிரகாஷ் கையிலருந்த பைலை பின்னால் மறைத்தபடியே..

"அப்றம், பேங்குக்கு வந்திருக்க..."

"ஆமான்டா ஒரு லோன் விஷயமா வந்தேன்.."

"நான் தான்.." என்ற நாகராஜன் முடிப்பதற்குள்..

பிரகாஷ் தொடர்ந்து.. " என்னடா பேங்கு இது... ஒரு A.C இல்ல.. எப்டி sweat ஆகுது பாரு..  சென்னைல எங்க ஆபிஸ்ல பாத்ரூம் கூட A.C"

"விடுடா இது என்ன சென்னையா? இல்ல உன் ஆபீஸா? நம்மூருதான... ஆமா நீ ஏன் இப்டி feel-பண்ற... நாமலாம் ஸ்கூல் கிரவுண்டல லீவுநாள்ல மதியமானா 12, 1 மணினு கூட பாக்காம வேகாத வெயில்ல.." என்று நாகராஜன் முடிப்பதற்குள்,

"டேய் நாகு, உன் கலர் பாரு என் கலர் பாரு,  இப்ப நான் போட்ருக்க சட்ட arrow brand.. 1600 Rupees தெரியுமா? இதுல (இவன் வேற.. )இந்த sweating வேற.."

நாகராஜன், "சரி விடு அது என்ன கைல? Form 16.. Gross Total Inco.."

"டேய் அதுலாம் உனக்கு புரியாது... நீ என்ன பணம் எடுக்க வந்தியா.. ? உனக்கு எப்படியும் ஏடிஎம் கார்டு இருக்காது... செல்லான் ஃபில் பண்ணிட்டு போய் க்யூல நில்லு...
ஆமா, ஸ்கூல் அப்புறம் நான் B.E முடிச்சிட்டு சென்னைல Software Engineer ஆயிட்டேன்.. நீ என்ன BA தமிழா? B.Sc பாட்டனியா? இல்ல +2 வோட நின்டியா?" நக்கலாக கேட்டான் பிரகாஷ்.

சிரித்துக்கொண்ட நாகராஜன், "ஏன்டா Enginnering படிச்சு Software Engineer ஆனவன் மட்டுந்தான் மனுசனா? இல்ல BA தமிழ், பாட்டனிலாம் படிப்பே இல்லேங்கறியா...?"

"அப்டி இல்லடா... நான் என்ன சொல்ல.." என்று பிரகாஷ் முடிப்பற்குள்.

"சரிடா வீட்ல எல்லாரையும் விசாரிச்சதா சொல்லு, வரேன்" என்று சொல்லிவிட்டு நாகராஜன் பேங்குக்குள் நுழைந்தான்.

AC இல்லாத வங்கியையும், வியர்வையையும் சில நிமிடம் சபித்துவிட்டு, தன் Arrow brand சட்டையை சரிசெய்து கொண்டு பிரகாஷும் உள்ளே நுழைந்தான். காலியாக இருந்த "May I Help You " டெஸ்கில் சிறிது நேரத்தில் ஒரு நடுத்தர வயது பெண்மணி வந்து உட்கார்ந்தாள்.

"Excuse me, I am Prakash.  I want to meet Manager regarding Home Loan"

"Yes, Please.  ஆங்.. மேனேஜர் இப்ப தான் வந்தாரு, நீங்க மீட் பண்ணலாம் போங்க.... First right then stright" விரலில் அபிநயம் பிடித்தாள்.

"டொக் டொக்.. May I come in sir?"

"Yes, come in.." கதவு திறுந்து உள்ளே நுழைந்தான் பிரகாஷ்...

டேபிள் மேலிருந்த போர்டு
" நாகராஜன் M.Com.,
  மேலாளர்.  "  என்று வரவேற்றது.



Tuesday, November 19, 2013

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை(17-11-13 முதல் 23-11-13வரை)

பயனர்களின் தகவல்களைத் தரக்கேட்டு 2013-ம் ஆண்டின் முதல் அரையாண்டில் மட்டும் இந்தியாவிடமிருந்து 2691 கோரிக்கைகள் தங்களுக்கு வைத்துள்ளதாக கூகுள் கூறியுள்ளது.  இவ்வித கோரிக்கைகளில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.

கேண்டி கிரஷ் சாகா விளையாட்டு 1/2 பில்லியன் (500 மில்லியன் அதாவது 50 கோடி) பயனர்களால் தரவிறக்கி/நிறுவப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.  இவ்விளையாட்டானது ஐஓஎஸ், ஆண்ட்ராய்டு இயங்குதளங்கள் மட்டுமின்றி முகநூல்(facebook)-லும் விளையாட ஏதுவான ஒன்றானதால் இது சாத்தியப்பட்டுள்ளது.

கூகுளின் நெக்சஸ் 5, இந்தியாவில் அடுத்த வாரத்தில் கிடைக்கும்.  இதன் விலை இந்திய ரூபாய் சுமார் 30,000 ஆக இருக்கும் என்றும் அறியப்படுகிறது.

சமூக வலைதளமான டிவிட்டரைப் பயன்படுத்துவதில் சவுதி அரேபியா முதலிடத்தில் உள்ளது.  இந்தியா 21-வது இடத்தில் உள்ளது.

சச்சின் டெண்டுல்கர் அனைத்துவிதமான துடுப்பாட்டங்களிலிருந்தும் கடந்த 16 நவம்பரன்று முடிந்த மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான தேர்வுத் துடுப்பாட்டத்தோடு ஓய்வு பெற்றார்.  இதையொட்டி பிசிசிஐ(BCCI) #ThankYouSachin என்கிற அடையாளச் சொல்லோடு கூடிய டிவிட்டர் பரப்புரை ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.  இது 3 மில்லியனுக்கும் அதிகமான கீச்சுகளைப் பெற்றது.

புதிய நுண்ணறி அலைபேசி இயங்குதளங்களில் ஒன்றான டைசன்(Tizen) என்கிற இயங்குதளத்தை சாம்சங் நிறுவனம் பயன்படுத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனாவின் தியான்கே-2 உலகின் மிக வேகமான மீகணினி(Super Computer) என மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.  இதன் வேகம் 33.86 பெடாஃபிளாப்/வினாடி ஆகும்.

இந்தியா, உலளவில் முகநூல் பயனர்களின் எண்ணிக்கையில் 2016-ம் ஆண்டு வாக்கில் முதலிடம் பெறும் என தெரிவிதாக கூறப்பட்டுகிறது.

கூகுள் நிறுவனம் தனது அணிகணினியான கூகுள் கிளாஸ்(Google Glass)-க்கான செயலி உருவாக்க கிட் (App Development Kit)-ஐ வெளியிட்டுள்ளது

இந்திய இரயில்வேயின் ஐஆர்சிடிசி, ஈ-வேலட் எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.  இதன் மூலம் பயனர்கள் தங்கள் முன்பதிவு சீட்டைப் பெறுவது எளிதாகம் என கூறப்படுகிறது.  இதுவரையில் பயனர் தங்கள் பயணச்சீட்டுக்கான பணத்தை கடன் அட்டை(Credit card)/இணைய வங்கி சேவை(internet banking)/பற்று அட்டை(Debit card) மூலமே செலுத்திவந்தனர்.  இப்புதிய திட்டத்தில் பயனர் ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை ஐஆர்சிடிசி-யில் தனது பயனர் கணக்கில்  முன்னரே செலுத்தி அதிலிருந்து பயணச்சீட்டுக்கான பணத்தை கட்டலாம்.

ஆன்ட்ராய்டு, ஆப்பிள், விண்டோஸ் போன்ற நுண்ணிறி பேசிகளில் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வரும் வாட்ஸ்ஆப் எனும் பேச்சு செயலி தற்போது நோக்கியாவின் ஆஷா 501 அலைபேசிகளிலும் பயன்படுத்தமுடியும்

எச் டி சி நிறுவனம் தனது ஒன் மேக்ஸ் (One Max) வகை நுண்ணறிபேசியை இந்தியரூபாய் சுமார் 61,490 -க்கு வெளியிட்டுள்ளது.

டேனியல் மோரெல் எனும் புகைப்பட பத்திரிக்கையாளர், தனது அனுமதியின்றி தன் புகைப்படங்களைப் பயன்படுத்திய இரண்டு நிறுவனங்களின் மீது வழக்கு தொடர்ந்து சுமார் $1.2 மில்லியன் நஷ்ட ஈடாகப் பெற்றுள்ளார்.

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை முந்தைய வாரப் பதிவு

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை(24-11-13 முதல் 30-11-13வரை)

சோனி நிறுவனம் தனது எக்சுபீரியா(xperia) வகை நுண்ணறிபேசி வகைகளில் புதியதாக இசட்1எஸ்(Z1S) என்கிற பெயரில் புதியதாக ஒரு அலைபேசியை வெளியிடவுள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது எக்சுபாக்சு ஒன்(Xbox One) விளையாட்டுப் பெட்டியின் அறிமுக நாளன்றே 1 மில்லியன் பெட்டிகளை விற்று சாதனைப் படைத்துள்ளது.

கேரள சுற்றுலாத்துறை, முகநூலுடன் இணைந்து  தனது சுற்றலாதலங்களைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் மேம்படுத்த உள்ளது. Kerala Tourism page in facebook

தனது மின்அஞ்சல் பயனர்களின், மின்னஞ்சல்களை அவர்களில் அனுமதியின்றி படிப்பதாக யாகூ நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இன்போசிஸ் நிறுவனம், அயல்நாட்டில் பணிபுரியும் தனது மூத்த பணியாளர்களின் எண்ணிக்கையை குறைக்க முடிவெடுத்துள்ளது.

போர்ப்ஸ்(Forbes) நிறுவனம் உலகின் மிக மதிப்புடைய வணிக நிறுவனமாக ஆப்பிளைத் தேர்ந்தெடுத்துள்ளது.

ஆப்பிள் நிறுவனம் புகைப்படம் எடுத்தப் பிறகு குவிப்பு மையத்தை மாற்றிப் பார்க்கும்(refocusable) ஒரு புதிய தொழில்நுட்படத்தை உருவாக்கியுள்ளது, மேலும் அதற்கான காப்புரிமையையும் பெற்றுள்ளது.

ஐகேன்(ICANN - Internet Corporation for Assigned Names and Numbers) புதியதாக டொமைன் பெயர்களை இணையப் பயன்பாட்டிற்காக சேர்க்கவுள்ளது.  இதில் .clothing, .guru, .bike போன்றவையும் அடக்கம்.

பிளாக்பெரி நிறுவனம் தனது அலைபேசி செயலியான பிபிஎம்(BBM - BlackBerry Messanger)-ஐ இந்தியாவின் சுதேசி அலைபேசி தயாரிப்பு நிறுவனங்களான மைக்ரோமேக்ஸ், ஸ்பைஸ் மற்றும் ஸென் போன்றவற்றின் நுண்ணறிஅலைபேசிகளுடன் இயல்பிருப்பாக(Pre installed) தரவுள்ளது.

மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை, சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் திரு. கபில்சிபல் ட்விட்டரில் தனது பயனர் கணக்கைத்(@KapilSibal) தொடங்கியுள்ளார்.


இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப மற்றும் மென்பொருள் நிறுவனமான விப்ரோவின் மீது சுமாராக 17 கோடி இந்திய ரூபாய் வரி ஏய்ப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

உலகளவில் மிக அதிக பயனர்களை உடைய அலைபேசி சேவை வழங்கு நிறுவனமான சைனா மொபைல் வரும் டிசம்பர் 18 அன்று 4ஜி சேவையை அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.

டிசிஎஸ் நிறுவனம் தனது மிகப்பெரிய விநியோக மையத்தை ஹைதராபாத்தில் நிறுவவுள்ளதாக தெரிகிறது.

2013-ம் ஆண்டின் 3-வது காலாண்டின் மொத்த அலைபேசிகளின் விற்பனையில் நுண்ணறி அலைபேசிகளின் விற்பனை மட்டுமே 55% இருப்பதாக காட்னர் நிறுவனம் கூறியுள்ளது.
தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை முந்தைய வாரப் பதிவு

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை(10-11-13 முதல் 16-11-13வரை)

ஸோலோ தனது Q9000 பேப்லேட்டை இந்திய ரூபாய் 14,999 -க்கு வெளியிடவுள்ளது.  இது 5.5 இன்ச் தொடுதிரை, 13 மெகா பிக்சல் கேமரா மற்றும் 2600 மில்லி ஆம்ப் மின்கலத்துடன் வரவுள்ளது.

ஆப்பிள் நிறுவனம் வளைந்த திரையுடன் கூடிய ஐபோனை உருவாக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

இளைய தலைமுறையினர் குறிப்பாக பதின்ம வயதினர் (அ) விடலைப் பருவத்தினர்(Teen age) பேஸ்புக்கைக் காட்டிலும் வாட்ஸ்ஆப்(WhatsApp), வீசாட்(WeChat)  போன்ற அலைபேசி செயலிகளை அதிகம் பயன்படுத்துவாக அறியப்படுகிறது.

இந்திய அலைபேசி தயாரிப்பு நிறுவனமான மைக்ரோமேக்ஸ் அடுத்த காலாண்டிலிருந்து, தனது அலைபேசி கட்டமைக்கும் தொழிற்சாலையை இந்தியாவுக்குள்ளேயே நிறுவி கட்டமைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

2019-ம் ஆண்டில் நுண்ணறி அலைபேசிகளின் விற்பனை 3 மடங்காகும் என்று எரிக்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கூகுள் நிறுவனம் தனது யூடியூப் நிகழ்பட சேவைப் பயன்பாட்டை மக்களிடம் மேலும் பரவலாகச் செய்ய வெளியிட்ட இந்திய-பாகிஸ்தான் பிரிவினையை அடிப்படையாகக் கொண்ட விளம்பரப்படம் பயனர்களிடம் பலத்த வரவேற்ப்பைப் பெற்றுள்ளது. 
யூடியூபில் அவ்விளம்பரப்படத்தின் காணொளி காட்சி



கூகுளின் பலூன் மூலம் வை-பை(Wi-Fi) இணையத் தொடர்பை தரும் திட்டத்தின் பலூன் பூமியை மூன்று முறை வலம் வரும் என்று கூறப்பட்டுள்ளது.  இதற்கு "திட்டம் லூன் (Project Loon)" என்று பெயரிட்ப்பட்டுள்ளது. 
செயல்பாட்டை விளக்கும் காணொளி காட்சி

வைபர்(viber) எனும் இணைய இணைப்பின் மூலம் தொலைபேச உதவும்(ஸ்கைப்(Skype) போலபிரிங்(Fring) போல)  அலைபேசி செயலி உலகளவில் 200 மில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்களைக் கொண்டுருந்தாலும், இந்தியாவில் இச்செயலி பிரபலமாகவில்லை.  இந்தியர்களை இச்செயலியை பரவலாகப் பயன்படுத்த வைக்கவேண்டும் என்பதே என் விருப்பம் என இந்நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி தெரிவித்துள்ளார்.

வீடியோகான் நிறுவனம் இந்திய ரூபாய் 8999 விலையில் ஒரு 3ஜி மற்றும் அழைப்பு வசதியுடன் கூடிய VT85C என்கிற பலகைக் கணினியை அறிமுகப்படுத்தவுள்ளது.    7 இன்ச் திரை, டூயல் கோர் கார்டெக்ஸ் ஏ9 வகை இயங்க்கியுடன் கூடிய இது ஆன்ட்ராய்டு 4.2.2 (ஜெல்லி பீன்) பதிப்பு இயங்குதளத்துடன் 2013 இறுதியில் வரவுள்ளது.


தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை முந்தைய வாரப் பதிவு


Monday, November 11, 2013

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை(03-11-13 முதல் 09-11-13வரை)

பயனர்களின் பெரும் வரவேற்பை தொடர்ந்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது பாஸ்போர்ட் சேவா அலைபேசி செயலியை ஆன்ட்ராய்டு இயங்குதளத்தை தொடர்ந்து விண்டோஸ் மற்றும் ஆப்பிள் ஐஓஎஸ் இயங்குதளங்களுக்கும் உருவாக்கியுள்ளது.

உணவக வழிகாட்டி இணையதளமான ஸோமாட்டோ(Zomato) ரூ 227 கோடியை இன்போஎட்ஜ்(InfoEdge) மற்றும் Sequoia ஆகிய நிறுவனங்களிடமிருந்து முதலீடாகப் பெற்றுள்ளது.

பாலிவுட்டின் மெகாஸ்டாரான அமிதாப்பச்சன் தனது டிவிட்டர் கணக்கில் 70 லட்சம் பின்பற்றுபவர்களை(followers) அடைந்துள்ளார்.

ஐகேட்(iGATE) நிறுவனம் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த யுபிஎஸ்(UBS) நிறுவனத்திடமிருந்து தொழில்நுட்ப சேவைக்கான ஆணையைப் பெற்றுள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது எம்எஸ் ஆபிஸ் மென்பொருளுக்காக ஒரு மிக அவசர சீரமைப்பு நிரல் ஒட்டு(patch fix) ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்திய நகரங்களின் இணையப் பயன்பாட்டில் மும்பை நகரம் முதலிடம் பிடித்துள்ளது.

விக்கிப்பீடியாவின் நிறுவனரான திரு. ஜிம்மிவேல்ஸ் அமெரிக்காவின் இணைய ஒற்றுபார்க்கும் செயல் இணைய சுதந்திரம் மற்றும் மேகக்கணிமையை மிகவும் பாதிக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

பேஸ்புக், மைக்ரோசாப்ட், கூகுள் ஆகிய மூன்று நிறுவனங்களும் இணைந்து, இணையத் தொழில்நுட்பத்திலிருக்கும் ஓட்டைகளை கண்டறியும் கொந்தர்களுக்கு வெகுமதி அளிக்கவுள்ளன.

பாரத்மேட்ரிமோனி நிறுவனம்(Bharat Matrimony), ஆன்ட்ராய்டு அலைபேசிக்கு தனது புதிய செயலியை வெளியிட்டுள்ளது.  இதன்மூலம் அலைபேசி பயனர்கள், இணையப் பயனர்களைப் போன்றே பாரத் மேட்ரிமோனி தளத்தை அணுக முடியும்.

விண்டோஸ் நிறுவனம் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் உலாவியின் புதிய பதிப்பான 11.0 -ஐ வெளியிட்டுள்ளது.


தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை முந்தைய வாரப் பதிவு



Friday, November 8, 2013

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை(27-10-13 முதல் 02-11-13வரை)

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி கோல்டன்(Galaxy Golden) வகை அலைபேசிகளை இந்தியாவில் வெளியிடவுள்ளதாக தெரிவித்துள்ளது.  இதன் விலை சுமார் 52,000 இந்திய ரூபாய்களாக இருக்கும்.

விப்ரோ(Wipro) நிறுவனம் தனது அலைபேசி குறித்தான ஆய்வு மற்றும் உருவாக்கத்திற்கான மையத்தை ஹைதராபாத் நகரத்தில் நிறுவவுள்ளது.

கூகுள் நிறுவனத்தின் முக்கிய சேவைகளில் ஒன்றான யூடியூப் விலையுடன் கூடிய ஒர் இசைச்சேவையை அறிமுகப்படுத்த தயாராகிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வருட இறுதியில் (2014-டிசம்பர்) மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தனது 4ஜி வசதியுடன் கூடிய அலைபேசிகளை/கருவிகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக கூறியுள்ளது.

அமேசான்(Amazon) நிறுவனம் தற்போது ஒரு லட்சத்திற்கும் அதிகமான பணியாளர்களைக் கொண்டுள்ளது.

உலக அளவில் சமூக வலைதளங்களில் செலவிடப்படும் நேரத்தில் 65% அலைபேசிகளின் வாயிலாகவே நடைபெறுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

30% அமெரிக்க மக்கள், செய்திகளை முகநூலின்(Facebook) வாயிலாகவே பெறுவதாக ஒர் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

கனடாவைச் சேர்ந்த பிளாக்பெரி நிறுவனம் தனது புகழ்பெற்ற பிபிஎம்(BBM) பேச்சு செயலியை(Chat Application)  ஆன்ட்ராய்டு, ஐஓஎஸ் போன்ற மற்ற இயங்குதளங்களுக்கும் உருவாக்கியுள்ளது.  மேலும் இந்த செயலி 10 மில்லியனுக்கும் மேலான தடவை தரவிறக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

சேப்(SAP) நிறுவனத்தின் முதன்மை நிதி அதிகாரி, தாங்கள் பிளாக்பெரியை வாங்குவதற்கான போட்டியில் (விருப்பம்) இல்லை என ஜெர்மன் பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

ஆப்பிள் தனது ஐஃபோன்6-ஐ 2014 வேனில் காலத்தில் வெளியிடவுள்ளதாக அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

கூகுளும் நுண்ணறி கைக்கடிகார தயாரிப்பில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை முந்தைய வாரப் பதிவு



தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை(20-10-13 முதல் 26-10-13வரை)

இணையவழி வணிகச்சேவை அளித்துவரும் ஸ்னாப்டீல்(snapdeal), 30% பொருள் கேட்பு ஆணைகள் (orders) அலைபேசி வாயிலாக நடைபெறுவதாக தெரிவித்துள்ளது.

மைக்ரோசாப்ட்(Microsoft) நிறுவனம் ஆன்ட்ராய்டு போலவே தனது விண்டோஸ் மொபைல் இயங்குதளத்துடன் கூடிய அலைபேசிகளை உருவாக்க எச்டிசி(HTC)  போன்ற அலைபேசி உற்பத்தியாளர்களிடம் கேட்டுவருவதாக அறியப்படுகிறது.

விண்டோஸ் மொபைல் இயங்குதளத்துடன் கூடிய நுண்ணறி அலைபேசிகள் விற்பனையில் 90% சதவீதம் நோக்கியாவின்(Nokia) தயாரிப்புகள் மட்டுமே என அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

மைக்ரோமேக்ஸ்(Micromax) நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி திரு. தீபக் மல்ஹோத்ரா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் சேவை ஏற்றுமதி நிறுவனமான டிசிஎஸ்(TCS) புதிய மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களான பெருந்தகவல்(big data), மேகக்கணிமை(Cloud Computing), அலைபேசி தொழில்நுட்பங்கள் போன்றவற்றில் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்யவுள்ளதாக அந்நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக மேலாளர் திரு. என். சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

இன்போசிஸ் நிறுவனம் தனது பணியாளர்களில் நட்சத்திர திறமையாளர்களுக்கு(Star Performers) போனஸ் வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

நுண்ணறி கைக்கடிகார(Smart Watch) தயாரிப்புப் போட்டியில் ஈடுபட்டுள்ள பல்வேறு பெருநிறுவனங்களைத் தொடர்ந்து தற்போது எச்டிசி நிறுவனம் இப்போட்டியில் இணைந்துள்ளது.  இதன் நுண்ணறி கைகடிகாரம் மற்ற நிறுவனங்களைப் போன்றே ஆன்ட்ராய்டு இயங்குதளத்துடன் இருந்தாலும், கூடவே கேமராவையும் உள்ளிணைத்து வரவிருக்கிறது.

நச்செதிர்நிரல்(Anti-Virus) தயாரிப்பு நிறுவனமான சிமேன்டெக்(symantec), இந்தியா 2013-ம் ஆண்டில் மட்டும் இணைய வழி ஏமாற்றாளர்களால் சுமார் 4 பில்லியன் அமெரிக்க டாலர்களை (கிட்டத்தட்ட இந்திய ரூபாய் 24,630 கோடிகள்) இழந்திருப்பதாக தெரிவிக்கிறது.

ஆப்பிளின் ஆப் ஸ்டோர்(App Store) 1 மில்லியன் (10 லட்சம்) செயலிகளுடன் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

(தொழில்முறை) சமூக வலைதளமான லின்க்டுஇன்(LinkedIn), இந்தியாவில் மிகுதியாக விரும்பப்படும் தொழில்நிறுவனங்களாக அக்சென்சர்(Accenture), விப்ரோ(Wipro), இன்போசிஸ்(Infosys) ஆகிய நிறுவனங்களைக் குறிப்பிட்டுள்ளது.

யாஹூ நிறுவனம் புகைப்படங்களை அடையாளம் (Image recognition) காணும் தொழில்நுட்ப நிறுவனமான லுக்ஃபுளோ(LookFlow) என்கிற புதிய நிறுவனத்தை(startup) தனது புகைப்பட சேவையான ஃபிளிக்கருக்காக(Flickr) கையகப்படுத்தியுள்ளது.


தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை முந்தைய வாரப் பதிவு



தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை(13-10-13 முதல் 19-10-13வரை)

இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப, மென்பொருள் நிறுவனமான டிசிஎஸ்(TCS) தனது ஆள்சேர்ப்பு(hiring) முறைமை திட்டங்களை மாற்றியுள்ளதாக தெரிகிறது.

2013-ம் ஆண்டின் இந்தியாவின் மிக கவர்ச்சிகரமான அலைபேசி வணிக நிறுவனமாக "சாம்சங் " உள்ளதாக Trust Research Advisory (TRA) ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.

ஆன்ட்ராய்டு கிட்கேட்(KitKat) அக்டோபர் இறுதியில் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

நுண்ணறி கைக்கடிகார சந்தையில் புதிய போட்டியாளராக அடிடாஸ்(adidas) நிறுவனமும் களமிறங்கியுள்ளது.  சான் பிரான்சிஸ்கோ நகரில் நடந்த ஒரு அலைபேசி மாநாட்டில் இந்த அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுளத்து.

இந்திய அலைபேசி தயாரிப்பு நிறுவனமான மைக்ரோமேக்ஸ் தனது பிராண்டை(Brand) மேலும் பிரபலபடுத்துவதற்காக ஹாலிவுட் நடிகரான ஹக் ஜேக்மேனை(Hugh Jackman) தனது வணிகத் தூதராக(Brand Ambassador) நியமித்துள்ளது.  இவர் X-Men series திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசு நிறுவனமான சிடாக்(CDAC - Centre for Development of Advanced Computing) ஐகேன்(ICANN - Internationl Corporation for Assigned Names and Numbers) உடன் இணைந்து இணைய வழி தாக்குதல்களை எதிர்கொள்ளும் தொழில்நுட்பத்தை வளர்க்க ஒரு மையத்தை உருவாக்கவுள்ளது.


தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை முந்தைய வாரப் பதிவு


தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை(06-10-13 முதல் 12-10-13வரை)

இணையதளத்தில் வெளியிடப்படும், எளிதில் விளைவுகளை ஏற்படுத்தும்(sensitive) தகவல்களை கவனிப்பதற்காக சீனா சுமார் 2 மில்லியன் நபர்களை நியமித்துள்ளதாக அறியப்படுகிறது.

தகவல் பரிமாற்ற செயலியான லைன்(Line) 2013-ம் ஆண்டில் தனது இந்திய பயனர்களின் எண்ணிக்கை 20 மில்லியனைத் தாண்டும் என்று கூறியுள்ளது.

எல்ஜி(LG) நிறுவனம் தனது முதல் குளிகைக் கணினியை(Tablet pc) 8.3 இன்ச் அளவில் ஜி பேட்(G Pad) என்கிற பெயரில் அறிமுகப்படுத்தவுள்ளது.

கூகுள் நிறுவனம் தனது நிகழ்பட சேவையான யூ-டியூப்-ஐ மேலும் பிரபலப்படுத்தும் விதமாக டிடிஎச்(DTH) வாயிலாக இந்திய தொலைக்காட்சி பயனர்களிடம் யூடியூபை(Youtube) கொண்டு சேர்க்க முயன்று வருகிறது.

கூகுள் தனது குரோம் இயங்குதளத்தின் மூலம் இயங்கும் மடிக்கணிகளை எச்பி நிறுவனத்துடன் சேர்ந்து தரவிருக்கிறது.  இது எச்பி குரோம்புக் 11 என்று பெயரிடப்பட்டுள்ளது.

கூகுளின் ஹேங்அவுட்(Hangout) தனது புதிய மேம்பட்ட பதிப்பில் குறுஞ்செய்தி, பல்லூடக செய்தி(MMS) போன்ற சேவைகளையும் தரவுள்ளது.

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ரவுண்ட்(Galaxy Round) அலைபேசியை வளையக்கூடிய திரையுடன் தயாரித்துள்ளது.

இன்போசிஸ் நிறுவனம் தனது ஆராய்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவில் பணிபுரியும் நபர்களின் எண்ணிக்கையை குறைக்க திட்டமிட்டுள்ளது.  மேலும், அப்பணியாளர்களை சேவைத்துறைக்கு மாற்றவுள்ளதாகவும் தெரிகிறது.

சாம்சங் இந்திய ரூபாய் சுமார் 28 லட்சத்தில் தனது 85 இன்ச் அல்ட்ரா எச்டி தொலைக்காட்சியை அறிமுகப்படுத்தியுள்ளது.  இவ்வகை தொலைக்காட்சிகள் சாதாரண எச்டி தொலைக்காட்சிகளைவிட 4 மடங்கு சிறந்த காட்சிகளைத் தரவல்லது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எச்டிசி(HTC) லெனோவா(lenovo) நிறுவனத்தால் கையகப்படுத்தப்படலாம் என தகவல்கள் கசிகிறது.


தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை முந்தைய வாரப் பதிவு


தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை(29-09-13 முதல் 05-10-13வரை)

இன்டெல் நிறுவனம் கூகுளின் கிளாஸ் (Google glass)-க்குப் போட்டி நிறுவனமான ரெகான்(Recon) இன்ஸ்ட்ருமென்ட்ஸ் நிறுவனத்தில் அணிந்துகொள்ளும் கேட்ஜெட்(Gadget) ஆராய்சியில் முதலீடு செய்துள்ளது.

பேனாசோனிக்(Panasonic) நிறுவனம் 5000 இந்திய ரூபாய் விலையுள்ள அலைபேசிகளை வெளியிடத் திட்டமிட்டுள்ளது.

இந்திய அரசு மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் கேட்டிருந்த தகவல்கள்(ஸ்கைப், ஹாட்மெயில் போன்ற கணக்குகளின் குறிப்பிட்ட பயனர்களின்), அந்நிறுவனத்தால் இந்திய அரசிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஐபிஎம் நிறுவனம் தனது ஆளெடுப்பு செயல்பாட்டில்(Recruitment Process) மறுமாற்றம் செய்துள்ளது.

அல்-கொய்தா டிவிட்டரில் கணக்கை துவங்கியுள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனம் தன்னுடைய 2014-ம் ஆண்டிற்கான இமேஜின் கப் (Imageine Cup) போட்டியை அறிவித்துள்ளது.

கொல்கத்தாவைச் சேர்ந்த எம்.டெக் மாணவர் கூகுளிடமிருந்து $1,00,000 (இந்திய ரூபாய் சுமாராக 62.7 லட்சம்)சம்பளத்தில் பணியாணைப் பெற்றுள்ளார்.

கூகுள் நிறுவனம் இந்திய புது (அ) அறிமுக தொழில்நுட்ப நிறுவனமான ஃப்ளட்டர்(Flutter)-ஐ கையகப்படுத்தியுள்ளது.  இந்நிறுவனம் சைகைகளை அறிந்துகொள்ளும் தொழில்நுட்பவியலில் தனது பணிகளை செய்துவருகிறது.

எல்ஜி நிறுவனம் வளைவான திரையுடன் கூடிய நுண்ணறிபேசிகளை அறிமுகப்படுத்தவுள்ளது.

கூகுளின் தேடல் வசதியானது மக்களை மறதிமிக்கவர்களாக மாற்றிவருவதாக ஆராய்சி முடிவு ஒன்று கூறுகிறது.

நோக்கியா தனது லூமியா 1020 வகை அலைபேசிகளுக்கான முன் பதிவை இந்திய ரூபாய் 49,999 என கூறியுள்ளது.

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை முந்தைய வாரப் பதிவு

Wednesday, September 25, 2013

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை(22-09-13 முதல் 28-09-13வரை)

தென்கொரிய அலைபேசி தயாரிப்பு நிறுவனமான எல்ஜி இந்தியச் சந்தையில் அதன் ஜி2 வகை நுண்ணறிபேசியை வரும் செப்டம்பர் 30-ம் தேதி வெளியிடவுள்ளது.

சீன தொலைதொடர்பு மற்றும் அலைபேசி தயாரிப்பு நிறுவனமான ஹூவாய் புதியதாக 5,500 வேலைகளை ஐரோப்பாவில் உருவாக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகமதாபாத்தைச் சேர்ந்த முதுகலை பொறியல் பட்டதாரி மாணவர் அமெரிக்க டாலர் $1,80,000 (இந்திய ரூபாயில் தோராயமாக 1கோடியே 10 லட்சம்) சம்பளத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனத்திடமிருந்து பணியாணை பெற்றுள்ளார்.

மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது (கிட்டத்தட்ட) தோல்வி தயாரிப்பான சர்ஃபேஸ்(Surface) குளிகைக்கணினியை மேம்பாடுகளுடன் சர்ஃபேஸ் 2, சர்ஃபேஸ் புரோ 2 என்ற பெயரில் மீண்டும் அறிமுகப்படுத்தவுள்ளது.

குஜராத்தைச் சேர்ந்த ஒரு நுண்ணறிபேசி நிறுவனம் நரேந்திரமோடியை கருப்பொருளாகக்(Theme) கொண்டு இரண்டு நுண்ணறிபேசிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.  ஸ்மார்ட்நமோ சஃபரான் ஒன்(Smar NaMo Saffaron One), ஸ்மார்நமோ சஃபரான் டூ(Smart NaMo Saffron two) என்று பெயரிடப்பட்டுள்ள இவ்விரு அலைபேசிகளும், மின்-வணிக(சந்தை) இணையதளமான ஸ்னாப்டீல்(SnapDeal)-ல் கிடைக்கிறது.

ஆப்பிள் நிறுவனம் தனது ஐமேக்-ஐ இன்டெலின் இயக்கிகளைக்(Processors) கொண்டு மேம்படுத்தியுள்ளது.

ஆரக்கிள் நிறுவனம் 10 புதிய மேகக்கணிமை சார்ந்த சேவைகளைப் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது.

காணொளி விளையாட்டு உருவாக்க நிறுவனமான வால்வ், ஸ்டீம்ஓஎஸ்(SteamOS) என்கிற பெயரில் பிளே ஸ்டேஷன்(Play Station), எக்ஸ்பாக்ஸ்(Xbox) போன்று ஒரு விளையாட்டு மென்பொருளை உருவாக்கியுள்ளது.  முக்கியமான விஷயம் இதன் மூலநிரலை கட்டற்ற/திறந்த உரிமத்தில் வெளியிடவுள்ளதாக கூறியுள்ளது.

சாம்சங், மைக்ரோமேக்ஸ் நிறுவனங்களைப் போல எச்டிசி நிறுவனமும் குறைந்த விலை நுண்ணறிபேசிகளை (இந்திய ரூபாய் 10,000 அல்லது அதை விடக் குறைவாக) உருவாக்க திட்டமிட்டுள்ளது.

தொடர்ந்து 5ஜி(5G) தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணியில் ஆராய்சிகளை மேற்கொண்டுவரும் சீனா, 2020 வாக்கில் தன்னுடைய 5ஜி தொழில்நுட்பத்தை சோதனை செய்துபார்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போர்டு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி(CEO) ஆலன் முல்லே மென்பொருள் பெருநிறுவனமான மைக்ரோசாஃப்டின் அடுத்த தலைமைச் செயலதிகாரிப் பதவிக்கான போட்டியில் முன்னணியில் உள்ளார்.

நுண்ணறி அலைபேசி நிறுவனமான பிளாக்பெரி தனது இரண்டாவது காலாண்டில் சுமார் $965 மில்லியன் இழப்பைச் சந்தித்துள்ளது.

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை முந்தைய வாரப் பதிவு

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை(15-09-13 முதல் 21-09-13வரை)

ஆன்ட்ராய்டு நுண்ணறிபேசிகளில் பிளாக்பெரி மெசஞ்சர் (BlackBerry Messenger) செயலி(App)-ஐ செப்டம்பர் 20 தரவுள்ளதாக சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்னணி மின்வெளி பாதுகாப்பியல் நிபுணர்(Cyber security expert) ஒருவர், முன்னணி பங்குச்சந்தையான நாஸ்டாகின்(Nasdaq) இணையதளத்தை hack செய்ய தனக்கு 10 நிமிடங்கள் மட்டுமே ஆனதாக தெரிவித்துள்ளார்.

கூகுள் நிறுவனம் நுண்ணறிபேசிகளுக்கான செயலிகளை உருவாக்கும் நிறுவனமான Bump -ஐ கையகப்படுத்தியுள்ளது.  இந்நிறுவனம் நுண்ணறிபேசிகளை ஒன்றோடொன்று அசைப்பதன்மூலம் தொடர்பிற்கு கொண்டுவந்து தகவல்களைப் பரிமாறிக்கொள்ள உதவும் ஒரு செயலியை Bump(ப(அ)ம்ப்) என்கிற பெயரில் வெளியிட்டுள்ளது.  Bump செயலியை கூகுளின் பிளே ஸ்டோரிலிருந்து பெற இங்கே சொடுக்கவும்.  Bump பயன்பாடு குறித்தான யூடியூப் காணொளி காட்சி



மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தனது கேன்வாஸ் வரிசை குளிகைக்கணினியின் முதலாவதான கேன்வாஸ் குளிகைக் கணினியை(Canvas Tab P650) இந்திய ரூபாய் சுமார் 16,500 விலையில் வெளியிட்டுள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது இணைய உலாவியான இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் இருந்த பாதுகாப்பு ஓட்டைக்கான(இது கொந்தர்களால்(hacker) கண்டறியப்பட்டு தவறான வழிகளில் பயன்படுத்தப்பட்டது) ஒரு புதிய சரிசெய்யும் நிரல் துண்டை(patch) வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய மென்பொருள் சேவை ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸ் நிறுவனம் தனது வங்கிச்சேவை தீர்வு மென்பொருளான ஃபின்னாக்கிளின் புதிய பதிப்பை (Finacle 11E) வெளியிட்டுள்ளது.  இதன்மூலம் பன்னாட்டு வங்கிச்சேவை மென்பொருள் வணிகத்தில் முக்கிய இடத்தை பிடிக்குவுள்ளதாக தெரிவித்துள்ளது.

முன்னணி கேமரா தயாரிப்பு நிறுவனமான நிகான் நீர் புகாத ஒரு புதிய AW1 கேமராவை அறிமுகப்படுத்தியுள்ளது.  இது நீருக்குள் 15 மீட்டர் ஆழம் வரையான அழுத்தத்தை தாங்கி நீர் புகாவண்ணம் தயாரிக்கப்பட்டுள்ளது.  மேலும் 2 மீட்டர் உயரத்திலிருந்து விழுந்தாலும் அதிர்வை தாங்கிக்கொள்ளும் வகையிலும் தயாரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கூகுளின் யூடியுப் இணைய இணைப்பின்றி காணொளிக்காட்சிகளை காணும் வசதியை அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.  மேலும், இந்த வசதி 48 மணிநேரம் பார்க்கக்கூடிய அளவிற்கு(இணைய இணைப்பின்றி) இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

மைன்ட்ரீ நிறுவனம் காணொளி கடுங்கண்காணிப்பு(Video Surveillance) மென்பொருள் ஒன்றை வெளியிட்டுள்ளது.

கூகுள் நிறுவனம் ஆன்ட்ராய்டு நுண்ணறிபேசிகளுக்கென்று பிரத்தியேகமாக ஒரு தேடல் இடைமுகப்பை(Interface) உருவாக்க திட்டமிட்டுள்ளது.

சிக்ஸ்த்சென்ஸ் என்கிற மென்பொருள் உருவாக்கத்தினால் உலகளவில் மிகப்பரவலாக அறியப்பட்ட பிரணவ் மிஸ்ட்ரி தற்போது சாம்சங் அமெரிக்கா நிறுவனத்தின் ஆராய்ச்சிப் பிரிவில் பணியாற்றிவருகிறார்.  மேலும், சாம்சங் நிறுவனத்தின் நுண்ணறி கைக்கடிகாரமான சாம்சங் கியர்(Samsung Gear) தயாரிப்பிலும் தற்போது பங்களித்து வருகிறார்.


தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை முந்தைய வாரப் பதிவு

Tuesday, September 17, 2013

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை(08-09-13 முதல் 14-09-13வரை)


சாம்சங் தனது கேலக்சி நோட் 3-ஐ இம்மாத இறுதில் இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளது.



இணைய உலகில் கட்டுரைகள், செய்திகள் போன்ற பலவற்றிலும் கமெண்ட்(comment) எழுதும் இணைய பயனர்கள்(இளைஞர்கள்) 40% சதவீதம் பேர் தங்கள் அடையாளங்களை
மறைத்து அனானியாக(Anonymous) தான் எழுதிகிறார்கள் என Pew Research Centre study கூறியுள்ளது.

மத்திய அரசு இந்திய ரூபாய் 9,822 கோடி செலவில், ஏழை எளிய மக்களுக்கு 2.5 கோடி அலைபேசி மற்றும் 90 லட்சம் குளிகைக் கணினிகளை இலவசமாக தரவுள்ளதாக கூறியுள்ளதாக தெரிகிறது. (டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியில் இருந்து)

சோனி நிறுவனம் வளைவான திரையுடன் கூடிய எல்ஈடி டிவியை அறிமுகப்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் நாசா(NASA) நிறுவனம் இன்ஸ்டாகிராமில்(Instagram) ஒரு பயனர் கணக்கைத் தொடங்கி இணைந்துள்ளது.  தனது புகைப்படங்களைப் பதிவேற்றி சில லட்சம் பயனர்கள் பின்தொடர்பவர்களாப் பெற்றுவிட்டது.

பேஸ்புக் நிறுவனம், டிவிட்டர் போல நிஜ நேர(Real Time) தகவல்களைத் தரும்வகையில் தனது வடிவமைப்பை மாற்றி வெற்றி பெற்ற பிறகு, தற்போது லின்க்டுஇன் போன்று தொழில்முறை சார்ந்த(Professional) தகவல்களைக் கொண்டதாக தனது வடிவமைப்பை மேலும் மெருகேற்ற உள்ளதாக தெரிகிறது.

மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது மிக முக்கிய, நீண்ட நாட்களாக புழக்கத்தில் இருந்து வருகிற மற்றும் அதிகம் பயன்படுத்தப்படுகிற தனது விண்டோஸ் எக்ஸ்பி இயங்குதளத்திற்கான support(மற்றும் update)-ஐ அடுத்த ஆண்டிலிருந்து(2014) நிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.  இதற்கு முன்னரே மத்திய அரசு நிறுவனமான சிடாக் தனது பாஸ் குனூ/லினக்சு இயங்குதளத்தை தமிழ்நாட்டின் பல அரசு அலுவலகங்களில் விண்டோசுக்கு மாற்றாக நிறுவிய நிலையில், மைக்ரோசாப்டின் இம்முடிவு பாஸ் லினக்ஸை மேலும் பரவலாக(இந்தியா முழுவதும் கூட) நிறுவ வழிவகுக்கும் எனலாம்.

ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐ-போன்கள் 5s மற்றும் 5c ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது.  இந்தியாவும் சீனாவும் இதன் முக்கிய விற்பனை சந்தைகளாக/மையங்களாக இருக்கும் எனக் கூறியுள்ளது.

எச்பி நிறுவனம் HAVEn என்ற பெயரில் பெருந்தகவல்(BigData) பகுப்பாய்வியல் களம்/தளம்/மேடையை(Platform) அறிமுகப்படுத்தியுள்ளது.

நிசான் நிறுவனம் நிசான் நிஸ்மோ(Nissan Nismo) என்ற பெயரில் நுண்ணறி கைக் கடிகாரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.


ஒலிம்பஸ் நிறுவனம் முதன்முறையாக ஆடிகள்(லென்சுகள்) இல்லாத "OM-D E-M1" என்கிற கேமராவை அறிமுகப்படுத்தியுள்ளது, அத்தோடு இது DSLR கேமராவுக்கு இணையான தரத்துடன் புகைப்படத்தை எடுக்க முடியும் என்றும் கூறியுள்ளது.

ஆப்பிள் நிறுவனம் தனது ஐ-போனில் பயோமெட்ரிக்(Biometric) முறையில் கைரேகையை வைத்து பூட்டவும்(lock) திறக்கவும்(unlock) கூடிய வகையில் வடிவமைக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.


சாம்சங் நிறுவனம் தனது நுண்ணறிபேசிகளில் 64-பிட்டு (64-bit) நுண்செயலிகளை(microprocessor) பயன்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக், குரூப்ஆன் போன்று தற்போது டிவிட்டர் நிறுவனமும் தனது பங்குகளை வெளியிட்டு பங்குச்சந்தைக்கு வர இருப்பதாக தெரிவித்துள்ளது.


தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை முந்தைய வாரப் பதிவு

வல்லிக்கேணி பார்த்தனும், வழியோரப் புத்தகங்களும்... :)

திருவல்லிக்கேணியில் சில மாதங்கள் தங்கியிருந்த மேன்ஷனைவிட்டு வந்த பிறகு கிட்டத்தட்ட சில வருடங்கள் உருண்டோடிவிட்டன நான் திருவல்லிக்கேணிக்கும், பார்த்தசாரதி கோயிலுக்கும் சென்று.  நேற்று, என் பால்யத்திலிருந்து இன்றுவரை மாறாத அன்புடன் இருக்கும் (என் ரசனையோடும், எண்ணங்களோடும் பெருமளவில் ஒத்துப்போகும்) நண்பன் ஒருவன் தன் சொந்த வேலைக்காக சென்னை வந்திருந்தான்.  அவனுக்கு சில புத்தகம் வாங்க வேண்டி இருந்ததால்(சுஜாதாவின் கடவுளின் பள்ளத்தாக்கு மற்றும் சில போட்டித்தேர்வுக்கான புத்தகங்கள்) திருவல்லிக்கேணிக்குப் போகவேண்டும் என்று அழைத்தான்.  நீண்ட நாட்களுக்குப் பிறகு திருவல்லிக்கேணிக்கு நேற்று பயணப்பட்டேன். 

திருவல்லிக்கேணி என்றதுமே எனக்கு (பலருக்கும் கூட) நினைவுக்கு வருவது வழியோரப் புத்தக(ங்களும்) கடைகளும், வல்லிக்கேணிப் பார்த்தனும்தான்.  இரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்து கண்ணில் தெரிந்த முதல் கடையில் ஆரம்பித்து எல்லா கடைகளிலும் ஏறி இறங்கி விசாரித்துவிட்டோம் போட்டித்தேர்வுக்கான புத்தங்கள் கிடைத்துவிட்டன(ஆம் வழக்கமான 10% கழிவுடன்(discount), நீங்கள் வாங்கினாலும் மறக்காமல் கேளுங்கள்), ஆனால் கடைசிவரை சுஜாதா மட்டும் கிடைக்கவில்லை :(.  அடுத்த கட்ட நடவடிக்கையாக சாலையோர பழைய(சில சமயம் புதிய புத்தகங்களும் கூட கிடைக்கும்) புத்தகக் கடைகளை ஆராய ஆரம்பித்தோம்.  எங்கள் துரதிஷ்டம் படித்து முடித்த பல சுஜாதா புத்தங்கள் கிடைத்தன ஆனால் "கடவுளின் பள்ளத்தாக்கு" மட்டும் கிடைக்கவில்லை. 

நண்பனுக்கும் எனக்கும் ரசனை ஒற்றுமை உண்டென்று சொன்னேனில்லையா.. இருவருமே பார்த்தசாரதி கோயில் செல்லலாமென்று புறப்பட்டோம்.  நாங்கள் இருவரும் சேர்ந்தோ/தனித்தனியாகவோ கோயிலுக்கு செல்வதற்கு நிறைய காரணங்கள் உண்டென்றாலும் மிக முக்கியமாக மூன்று காரணங்கள்
1. சிற்ப(ங்கள்)க்கலை
2. சராசரியான இறைபக்தி (மூட நம்பிக்கைகள் எல்லாம் கிடையாது)
3. கலாச்சாரத்தின் மேலிருக்கும் விருப்பம்/நம்பிக்கை so & so (இன்ன பிற முக்கிய காரணங்களும் உண்டு ;-))

திவ்ய தரிசனம் என்பார்களே அது கிடைத்தது.  ஆம், நாங்கள் எந்த வித திட்டமும் இல்லாமல் தான் போனோம், நேற்று திருவோணம் என்பதாலும் பெருமாளுக்கு திருவோண நட்சத்திரம் விசேஷம்  (சிவனுக்கு திருவாதிரை நட்சத்திரம் போல) என்பதாலும் ஹோமங்களும், பிரபந்த படித்தலும் நடந்தன.  அலங்காரப் பிரியரான திருமாலை அதுவும் பார்த்தசாரதிப்பெருமாளை அருகில் நின்று பார்க்கும்போது அவ்வளவு அற்புதமான ஒரு தேஜசுடன் பிரும்மாண்டமாக இருக்கிறார்.   எவ்வித தள்ளு முள்ளுகள் இல்லாமலும் பொறுமையாக பெருமாளை தரிசிப்பது என்பதென்பதே மிக அழகானதொரு அனுபவம். 

பெரும்பாலும் கோயிலுக்கு நண்பர்களோடு போனால் கோயில் பிரசாதக் கடையை ஒரு ரவுண்டு வருவோமில்லையா, அதனால் வழக்கம்போல காரதட்டை மற்றும் புளியோதரை வாங்கி சாப்பிட்டுவிட்டு இரயிலேறி கிளம்பினோம். 


குறிப்பு: திருமாலின் 108 திவ்ய தேசக்கோயில்களில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலும் ஒன்று.   சென்னை மற்றும் சென்னையின் சுற்றுப்புறத்திலிருக்கும் மற்ற திவ்யதேச பெருமாள் கோயில்களாவன பல்லாவரத்திற்கு அருகில் திருநீர்மலையிலுள்ள நீர்வண்ணப்பெருமாள் கோயில், கிழக்குக் கடற்கரை சாலையில் திருவிடந்தையில் உள்ள நித்ய கல்யாணப் பெருமாள் கோயில், மாமல்லபுரத்திலுள்ள தரை கிடந்த பெருமாள்(ஸ்தல சயனப் பெருமாள் கோயில்) ஆகியனவாகும்.

Thursday, September 12, 2013

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை(01-09-13 முதல் 07-09-13வரை)


இந்திய தகவல் தொழில்நுட்பத்துறையின் முக்கியப் பெரு நிறுவனமான விப்ரோ, இளங்கலை மாணவர்கள் தங்கள் தொடர்பு மற்றும் மென் திறமைகளை(Communications & Soft skills) வளர்த்துக்கொள்ள ஒரு திட்டத்தினை உருவாக்கியுள்ளது.  விப்ரோ ஒருங்கிணைந்த திறமை வளர்ப்பு திட்டம்(WISEPro - Wipro Integrated Skill Enhancement Programme) எனப்பெயரிடப்பட்டுள்ள இத்திட்டம் ஒரு நாடு தழுவிய திட்டம் ஆகும்.

வங்கியிடம் இருந்து வந்த ஈ-மெயில் போன்ற பொய்யான/போலி மெயில்களுக்கு 30% பேர் பலியாவதாக எதிர்-நச்சுநிரல் தயாரிப்பு நிறுவனமான காஸ்பர்ஸ்கை(Kaspersky) கருத்துக்கணிப்பு தெரிவிட்டுதுள்ளது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முன்னணி(ஓரு காலத்தில் என்று கூட சொல்லலாம் :P )கைப்பேசி தயாரிப்பு நிறுவனமான நோக்கியாவை கையகப்படுத்தியுள்ளது.

99.9% சதவீத மால்வேர்(malware)கள் கூகுளின் ஆண்ட்ராய்டு நுண்ணறிபேசி இயங்குதளத்தை குறிவைத்து தயாரிக்கப்படுவதாக காஸ்பர்ஸ்கை தெரிவித்துள்ளது.

சாம்சங் நிறுவனம் அதன் நுண்ணறி கடிகாரமான கேலக்ஸி கியரில் (Galaxy Gear) அனைத்து முக்கிய இந்திய மொழிகளையும் சேர்க்க இருப்பதாக அறிவித்துள்ளது.

நுண்ணறி அலைபேசிச் சந்தையை அடுத்து அனைத்து முன்னணி நிறுவனங்களும் தற்போது நுண்ணறி கைக்கடிகாரம் தயாரிப்பில் முழுமூச்சாக இறங்கியுள்ளன.  அந்த வரிசையில் குவால்காம்(Qualcomm) நிறுவனம்  டாகு(Toq) என்ற பெயரில் ஒரு கடிகாரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

சோனி இந்தியா நிறுவனம் அதன் அலைபேசி மற்றும் புகைப்படக் கருவிகளின் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இந்திய உருவாக்குனர்களுக்காக(developers) ஒரு தனிப்பட்ட இணைய வலைவாசலை(web portal) உருவாக்கியுள்ளது.

சாம்சங் நிறுவனம் 3.25 லட்சம் விலையில் அல்ட்ரா-எச்டி(Ultra-HD) தொலைக்காட்சிப் பெட்டிகளை வெளியிட்டுள்ளது.

கூகுள் குரோம் உலாவியில் செயல்படும் செயலிகள் [ஆப்கள்(Apps)] இனி மேசைக்கணினியின் பணிமேடையிலும் செயல்படும் வகையில் எழுதப்படவுள்ளது. லைப்ஹேக்கர் இணையதளததில் இது குறித்தப் பதிவு

ஆன்ட்ராய்டு இயங்குதளத்தின் புதிய பதிப்பு 4.4 கிட்கேட் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

எச்டிசி நிறுவனம் இந்திய ரூபாய் 52,428 விலையில் பட்டர்பிளை S நுண்ணறி அலைபேசியை அறிமுகப்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் சமூக வலைதளங்களில் நுண்ணறிபேசி மூலம் பங்கெடுக்கும் பயனர்களின் எண்ணிக்கையில் முதலிடத்தில் உள்ளதாக சமூக வலைதள கணக்கெடுப்பு நிறுவனம் ஒன்று கூறியுள்ளது.

பிளாக்பெரி இந்தியாவின் புதிய தலைவராக சுனில் லால்வனி பொறுப்பேற்கிறார்.

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை முந்தைய வாரப் பதிவு 

Wednesday, September 4, 2013

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை(25-08-13 முதல் 31-08-13வரை)


மனித கண்ணின் ரெட்டினாவைப்போல் அதிவேகமாக செயல்படும் ஒரு கேமராவினை சுவிஸ் நாட்டைச்சேர்ந்த இனிலேப்ஸ்(iniLabs) எனும் நிறுவனம் தயாரித்துள்ளது.  இது டைனமிக் விஷன் சென்சார்(Dynamic Vision Sensor- DVS) எனும் தொழில்நுட்பத்தால் இயங்குகிறது.

இந்தியாவின் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இதுவரை வெளியிட்ட நுண்ணறிபேசிகளைவிட மிகப்பெரியதும், விலை அதிகமானதுமான ஒரு புதிய நுண்ணிறிபேசியை வெளியிட்டுள்ளது.  கேன்வாஸ் டூடுல் 2(Canvas Doodle 2) என்று பெயரிடப்பட்டுள்ள இது 5.7 இன்ச் திரையுடனும், 1.2 GHz குவாடு-கோர் புராசசருடனும், 1GB RAM நினைவகத்துடனும், 12 GB உள்ளார்ந்த நினைவகத்துடனும் வருகிறது.  விலை சுமாராக 20,000.

இந்தியாவின் ஸ்பைஸ் நிறுவனம்  பின்னாக்கிள் எஃப்எஃச்டி(Pinnacle FHD) என்ற பெயரில் மலிவுவிலை முழு எஃச்டி(HD) நுண்ணிறிபேசி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.  விலை சுமாராக 16,500.

இன்போசிஸ் நிறுவனத்தின் புதிய துணைத்தலைவராக திரு என். ஆர். நாராயணமூர்த்தியின் மகன் ரோஹன் மூர்த்தி பதவியேற்க உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

தன்னுடைய நிதி மேலாண்மை திட்டத்தின் ஒரு பகுதியாக இன்போசிஸ் நிறுவனம் அயல்நாட்டில் பணிபுரியும் பணியாளர்களின் எண்ணிக்கையை குறைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

கூகுள் நிறுவனம் ஓட்டுனர் இல்லாமல் ரோபோக்களின் உதவியுடன் இயங்கும் வாகனங்களை பரிசோதனை அளவில் தயாரித்து, சோதனை மற்றும் வெள்ளோட்டம் விட்டது நாமறிந்ததே.  இப்போது இத்தொழில்நுட்பத்துடன் கூடிய பயணியர் டாக்சியை கூகுள் அறிமுகப்படுத்துவுள்ளதாகத் தெரிகிறது.

மலிவான ஆனால் தரமான நுண்ணிறபேசிகளின் தேவை அதிகரித்துள்ளதால் இந்தியாவின் மைக்ரோமேக்ஸ் மற்றும்  கார்பன் நிறுவனங்களின் அலைபேசிகள் இந்தத்துறையில் சக்கைப்போடு போடுகின்றன.  இப்பொழுது இவ்விரு நிறுவனங்களும் சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களைப் பின்னுக்குத் தள்ளி விற்பனையில் முன்னுக்கு வந்துள்ளன.


ஃபேஸ்புக் shared albums எனும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இதன்மூலம் நண்பர்கள் தங்கள் புகைப்படங்களைப் குழுவாக புகைப்படங்களைப் பகிர்ந்துகொள்ளளாம்.

ஆப்பிளின் ஐஃபோன் 5S(iPhone 5S) மிக அதிகமான செயலாக்குத்திறனுடன்(Processing power) கூடிய A7-சிப்புடன் வெளிவரக்கூடும் என நம்பப்படுகிறது.  இது இந்த நுண்ணிறிபேசியின் செயல்திறனை 31% வரை அதிகரிக்கக்கூடும் என நம்பப்படுகிறது.

யாகூ தேடியந்திர நிறுவனம் புகைப்படங்களை தேடித்தரும் பணியினைச் செய்யும் சிறுநிறுவனமான IQ Engines எனும் நிறுவனத்தை கையப்படுத்தியுள்ளது.

சாம்சங் நிறுவனம் குழந்தைகளுக்காக கேலக்ஸ் டேப் 3 (Galaxy Tab 3) என்கிற டேபை அறிமுகப்படுத்தவுள்ளது.

சிரிய(Syria) நாட்டைச் சேர்ந்த கொந்தர்களால்(hacker) நியுயார்க் டைம்ஸ் மற்றும் டிவிட்டர் தளங்கள் முடக்கப்பட்டன.






மைக்ரோசாப்ட் நிறுவனம் நோக்கியாவை கையகப்படுத்தியது

மைக்ரோசாப்ட் நிறுவனம் நோக்கியாவை கையகப்படுத்தியது
மைக்ரோசாப்ட் நிறுவனம் நோக்கியாவை கையகப்படுத்தியது

Wednesday, August 21, 2013

எங்கள் சென்னை.... ஆகஸ்ட் 22-2013 -- 374 வது சென்னை தினம் இன்று


 எங்கள் சென்னை....

Chennai montage
Image By Nashcode (Transfered by RaviC/Original uploaded by Nashcode) [CC-BY-3.0], via Wikimedia Commons

வாழ்வு வளம்பெற
  வையம் உயர்வுற
ஏற்றத் தாழ்விலா
  சமான சமூகமாய்
பழமையும் மாறிவிடாமல்
  புதுமையும் விட்டுவிடாமல்
பொலிவுடன் விளங்கும்
   எங்கள் சென்னை

வைணவ வைதீகர்க்கு
   வல்லிக்கேணி பார்த்தனும்
சைவ சமயத்தோர்க்கு
   மயிலை கபாலீசனும்
கிறித்தவ அன்பர்க்கு
    சாந்தோமும், பரங்கிமலையும்
முசுலீம் நண்பர்களுக்கு
    ஆயிரம் விளக்குமாய்
பொலிவுடன் விளங்கும்
     எங்கள் சென்னை.

வண்டலூரில் வன விலங்கும்
  பள்ளிக்கரணையில் பன்னாட்டு பறவைகளும்
முட்டுக்காட்டில் முதலைப் பண்ணையும்
  வேடந்தாங்களில் வெளிநாட்டுப் பறவையுமாக
இறையும் இயற்கையும்
  ஒன்றெனப் போற்றிப்
பொலிவுடன் விலங்கும்
   எங்கள் சென்னை.

பழையோர்க்கு மயிலையில்
 அறுபத்து மூவர் உலா
புதியோர்க்கு தி.நகரில்
  ஆடைவாங்க வீதி உலா
பழையோர்க்கு கன்னி மாறா
 கன்னிமாரா நூலகம்
புதியோர்க்கு எண்ணில் அடங்கா
  நூலோடு அண்ணா நூலகமென்று
பொலிவுடன் விளங்கும்
  எங்கள் சென்னை.

கற்க ஐஐடி
  சுற்ற தி.நகர்
கலைக்கு கலாக்ஷேத்திரா
 கானத்திற்கு சங்கீத அகாடமி
காண கோளரங்கம்
  கால்நனைக்க மெரினாவென
இன்னும் இன்னும்
 எத்தனையோ பெற்று
பொலிவுடன் விளங்கும்
  எங்கள் சென்னை.

வாழ்வு வளம்பெற
  வையம் உயர்வுற
ஏற்றத் தாழ்விலா
  சமான சமூகமாய்
பழமையும் மாறிவிடாமல்
  புதுமையும் விட்டுவிடாமல்
பொலிவுடன் விளங்கும்
   எங்கள் சென்னை.

Tuesday, August 6, 2013

ரூபாயின் புதிய மீட்பர் திரு. ரகுராம் ராஜன்..

                  திரு D. சுப்பாராவிற்குப் பிறகு RBI ஆளுனராக (ரூபாயின் புதிய மீட்பர்) திரு. ரகுராம் ராஜன் பதவியேற்கிறார்
திரு D. சுப்பாராவிற்குப் பிறகு RBI ஆளுனராக திரு. ரகுராம் ராஜன் பதவியேற்கிறார்


Sunday, August 4, 2013

அரசியல் கட்சிகள் Vs தகவலறியும் உரிமைச் சட்டம்

அரசியல் கட்சிகள் Vs தகவலறியும் உரிமைச் சட்டம்

அரசியல் கட்சிகள் Vs தகவலறியும் உரிமைச் சட்டம்

Thursday, August 1, 2013

அமெரிக்க டாலரும், இந்திய ரூபாயும்... :)

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அரசின் முழு கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது... :)

ரூபாயின் மதிப்பு அரசின் கட்டுக்குள் இருக்கிறது.

மூன்று பேர்.. மூன்று ஸ்டேட்.. (இதுவும் நடக்கலாம்)

மூன்று பேர்.. மூன்று ஸ்டேட்..

இதுவும் நடக்கலாம் மூன்று பேர்.. மூன்று ஸ்டேட்.. (தெலுங்கானா பிரிப்பு)

Monday, July 22, 2013

பாரதம் பாடுதல் கேள்விப்பட்டிருக்கீங்களா..?


  பாரதம் பாடுதல் கேள்விப்பட்டிருக்கீங்களா... கிராமத்துல(சில நகரங்கள்ளயும்) ஆடிமாசம் ஆயிட்டா எல்லா கோயில்கள்ளயும் (குறிப்பா திரௌபதி அம்மன் கோயில்கள்ல) ராத்திரி மக்கள் எல்லாரும் பாய்,தலைகாணி, தண்ணி குடம், சொம்பு, நொறுக்குத்தீனி எல்லாம் எடுத்துக்குட்டுப்போய் உக்காந்துப்பாங்க.  பாரதம் பாடறவங்க மகாபாரதக் கதைய பாட்டா ராகத்தோட ஆங்.. ஆமா.. அப்புடிலாம் சவுண்டு எபெக்ட்டோட விடிய விடிய பாடுவாங்க.  அப்பலாம் டிவி ஊர்லயே ஒருத்தர் 2 பேர் வீட்லதான் இருக்கும், மக்களுக்கு என்டர்டெயின்மென்ட்னா முக்கியமா இந்த பாரதம் கேக்கறதுதான்.  ஊரே திரண்டு போயிடும், ஒரு 10, 11 மணிக்கெல்லாம் பொடிசுக எல்லாம் தூக்கத்துல சாமியாட ஆரம்பிச்சிடும், இளவட்டங்க தனியா ஒரு டிராக் போட்டு வண்டி ஓட்டிகிட்டு இருக்கும்.  பெரிசுங்க எல்லாம் கதைய காதுல கேட்டு அனிமேஷன் வீடியோவ மனசுல ஓடவிட்டு தருமரு, பீமன், துரியோதன், திரௌபதினு காட்சியா பாத்துகிட்டு இருக்கும்.

 எனக்கு ஏழாவது, எட்டாவது சி. நடராஜன்-னு (C.N வாத்தியார், இந்தப் பேரு அப்பிடியே மாறி சீனு வாத்தியார், சீனி வாத்தியார் அப்டினுலாம் மாறிடுச்சி) ஒரு ஆசிரியர் வகுப்பெடுத்தார், அவர் வகுப்புன்னாலே ஒரு கொலைநடுக்கத்தோட தான் நாங்க வகுப்புக்குப் போவோம், கோவப்பட்டாருனா அடி பின்னி எடுத்துடுவாரு.  ஆனா, அவர் வகுப்புகள்ள அவ்வளவு கத்துக்கலாம் பாடம் தாண்டி நிறைய சொல்லுவாரு.. அது திருப்பாவை, திருவெம்பாவை, திருக்குறளாவும் இருக்கும் வாய்ப்பாடு, பொதுஅறிவு, கணக்குப் புதிராவும் இருக்கும், விளையாட்டு, விஞ்ஞானம், நகைச்சுவையாவும் இருக்கும்.

  அவரு ஒரு தடவை பாரதம் பாடுறதப்பத்தி நகைச்சுவையா சொன்ன விஷயம்.
பாரதம் பாடும்போது விடிஞ்சுடிச்சினா உடனே என்ன சொல்லிக்கிட்டிருந்தாலும்/பாடிகிட்டிருந்தாலும் அப்படியே அந்த இடத்துல விட்டுட்டு மறுபடி ஆரம்பிக்கும்போது விட்ட இடத்திலிருந்து ஆரம்பிப்பாங்களாம்.  அப்படி ஒரு முறை பாரதம் படிக்கும்போது "பீமன் மரத்தைப் பிடுங்கினானே" அப்டினு சொல்லவேண்டிய வசனம் வந்துச்சு.  "பீமன் மரத்தைப் பி" அப்டினும்போது விடிஞ்சிடுச்சாம், உடனே பாரதம் பாடுறத நிப்பாட்டிட்டாங்க.. மறுபடி அன்னைக்கு ராத்திரி ஆரம்பிக்கும்போது விட்ட இடத்திலிருந்து ஆரம்பிக்கனுமில்லையா... அதனால எப்புடி ஆரம்பிச்சாங்க தெரியுமா..?

 "டுங்கினானே.. டுங்கினானே.. டுங்கினானே.. டுங்கினானே.." அப்புடினு ஆரம்பிச்சாங்களாம்.. இதை கேட்டதுதான் தாமதம் கிளாஸுல சேக்காளிப் பயளுக எல்லாம் அப்புடி சிரிக்கிறானுவ..

  இதெல்லாம் இப்ப எதுக்கு சொல்றேனு கேக்கறிங்களா?  ஓண்ணுமில்லிங்க இந்த வாரம் ஊருக்குப் போயிருந்தேன், பாரதம் படிக்கிற சத்தம் கேட்டதும் சரி சும்மா ஒரு விசிட் விட்டுட்டு வரலாமேனு போனேன்.  சத்தியமா மனசு கனமாயிடுச்சிங்க... பாரதம் படிக்கிற நாலுபேர தவிர வேற யாருமே இல்லிங்க.. ராத்திரி சாமி ஊர்வலம் இருந்ததால நாயனக்கார கோஷ்டி மட்டும் ஒரு ஓரமா உற்சவர் பல்லக்குப் பக்கத்துல ஓக்காந்திருந்ததுங்க.  இப்ப புள்ளைங்களுக்கு ஆங்கிரி பேர்ட்ஸ் தெரியுது, அனிமேஷன் நாடகம் தெரியுது ஆனா மகாபாரதம் தெரியல.. அப்பா அம்மாவும் அததான் பெருமையா நினைக்கிறாங்க.  "மெல்லத் தமிழ் இனி சாகும்"னு சொன்னாங்க, தமிழ் சாகுறதுக்கு முன்னாடியே இந்த கலையெல்லாம் அழிஞ்சிபோயிடுமோனு பயமாயிருக்கு.  இந்த நெலம பாரதம் படிக்கிறவங்களுக்கு மட்டுமில்ல தோல்பாவைக் கூத்து, பொம்மலாட்டம், பொய்க்கால் குதுர, கரகாட்டம், வில்லுப்பாட்டுனு லிஸ்ட் முடியல நீண்டுகிட்டே இருக்கு.  இந்த கலையெல்லாம் இப்ப வரைக்கும் செஞ்சிகிட்டு இருக்கவங்க வாரிசுகளும் இப்ப இந்த கலைல இல்ல (ஆதரவு இல்லாததுதான் காரணம்) இந்த கலைகளோட அழிவுக்கு ஒருவகைல நாமளும் காரணம் அப்டின்றது மறுக்க மறைக்க முடியாத கசப்பான உண்மை.  அதான் உங்ககிட்டலாம் பகிர்ந்துக்கலாம்னு தோணிச்சு, பகிர்ந்துகிட்டேன்.



Friday, July 12, 2013

விழித்திருப்பவனின் இரவு -எஸ். இராமகிருஷ்ணன் (புத்தகப் பார்வை)


எஸ். ராமகிருஷ்ணன்
விக்கிப்பீடியாவில் எஸ். ராமகிருஷ்ணன்
(நன்றி; புகைப்படம் விக்கிப்பீடியாவிலிருந்து)
 
  எஸ். இராமகிருஷ்ணன் தமிழ் எழுத்தாளுமைகளில் மிக முக்கியமானவர்.  எழுத்தாளர் என்பதைத்தாண்டி அவர் ஒரு தேசாந்திரி (நாடோடி), விமர்சகர், நல்ல படிப்பாளர் இன்னும் எவ்வளவோ... அவர் தான் எழுதும் அளவிற்கு, அதைவிட அதிகமாகப் படிப்பவர் ஆங்கிலத்தில் Voracious Reader என்பார்களே, அப்படிப்பட்டவர்.  எழுத்து, பயணம், படிப்பு ஆகியனதான் அவர், அதுதான் எஸ். ராமகிருஷ்ணன்.  தமிழ் எழுத்தாளர்கள் பலரும் பயணிப்பதில்லை, ரசிப்பதில்லை, எழுத்தைத்தாண்டி வேறெந்த கலைத்துறைகளிலும்(சினிமாவில் தொடங்கி பல துறைகள்) ஈடுபடுவதில்லை என்கிற ஆதங்கம் எஸ். இராமகிருஷ்ணனுக்கு உண்டு.  பலமுறை தன் எழுத்திலும், பேச்சிலும் அவர் அதை வெளிப்படுத்தியுள்ளார், வெளிப்படுத்திவருகிறார்.


 தான் படித்த உலகின் முக்கிய எழுத்தாளுமைகளையும், அவர்களின் எழுத்துகளையும் மற்றவர்களும் படித்தின்புற வேண்டுமென்ற நோக்கத்தோடு அவர் எழுதி உயிர்மை இதழில் தொடராக வெளிவந்த எழுத்தாளுமைகளின் அறிமுகமே இப்புத்தகம்.  190 பக்கத்தில் 28 எழுத்தாளர்களையும், அவர்களின் ஆளுமையையும், சிறந்த எழுத்துப் படைப்புகளையும் அறிமுகப்படுத்தியிருக்கிறார்.  சுருக்கமான ஆனால் முழுமையான அறிமுகம், எழுத்தாளர்களின் வாழ்க்கையும், அவர்கள் எழுத்தில் புகுத்திய புதுமைகளையும், மாற்றங்கள், அவர்களின் தனித்தன்மை, புதிய நடை என பலவற்றையும் அறிமுகப்படுத்துகிறார்.  கூடவே அவர்களின் மிகச்சிறந்த படைப்புகளையும் அதன் அறிமுகத்தையும் சிறந்த மேற்கோள்களையும் காட்டுகிறார்.

 விளாதிமிர் நபகோவில் ஆரம்பித்து, ஓரான் பாமுக் வரை நோபல் பரிசிலிருந்து புக்கர் பரிசுவரை பல பரிசுகளை வென்ற சிறந்த எழுத்தாளர்களின் அறிமுகம், நமக்கும் அவர்கள் எல்லோரையும் படிக்கவேண்டுமென்ற ஆர்வத்தைத் தருகிறது(ஆனால், எஸ். இராமகிருஷ்ணனின் அறிமுகமே நமக்குப் படித்த திருப்தியைத் தரக்கூடும்).

 புயண்டஸ், போர்ஹே, ரிச்சர்ட் பர்ட்டன் போன்றோர் எழுத்தைத் தாண்டி அரசியலிலும் ஈடுபட்டதையும், நாடு அவர்களுக்கு செய்த கௌரவத்தையும், மதிப்பையும் அறியும்போது, நம் நாட்டில் எழுத்தாளர்களின் நிலையும், நாடு அவர்களை நடத்தும் விதத்தையும் எஸ். ரா குமுறலோடு கூறுவது உரைக்கிறது.

 பாப்லோ நெருடாவின் எழுத்துக்கு நாட்டுத் தலைவர்களே அஞ்சியதை அறிகையிலே வாள்முனையைவிட பேனாமுனையின் கூர்மை விளங்குகிறது.  திரைத்துறையில் கோலோச்சிய எழுத்தாளர்கள் உலகம் முழுவதும் இருந்திருக்கிறார்மகள் (இந்தியாவில் தமிழ்நாட்டில் இன்னும் முகப்பெரிய முன்னேற்றம் இல்லை, ஜெயமோகன், எஸ். ரா போன்று சிலர் வசனம் எழுதவும், திரைக்கதை எழுதவும் செய்கிறார்கள்.  இதைவிடக் கொடுமை எழுத்தாளர்களின் கதையைத் தழுவியோ அல்லது முழுமையாகவோ காப்பிசெய்து எடுக்கும் எந்த இயக்குனரும் அதற்கான நன்றியை குறிப்பிடுவதோ credit-ஐ தருவதோ கிடையாது.  அவலம், கேவலத்திலும் கேவலம் நான் அவர் கதையைப் பயன்படுத்தவே இல்லை என்று சாமி மேல் சத்தியம் செய்து மறுப்பது).

  மனச்சிக்கலுக்கு ஆளான எழுத்தாளர்களைப் பற்றியும் அது தற்கொலை வரை போனதையும் அறியும்போது கனக்கிறது மனது.  தங்களுக்கு மனச்சிக்கல் இருந்தது என்பதை ஒப்புக் கொண்ட அவர்களின் நேர்மை மெச்சவேண்டியது.  சாமுராயாக வாழ்ந்த புகியோ மிஷிமா, காமத்தையும் இலக்கியத்தையும் கொண்டாடிய சர் ரிச்சர்ட் பர்ட்டன், பெண் எழுத்தாளர்களென நீள்கிறது பட்டியல்.

 குழந்தை இலக்கியங்களான ஆலிஸின் அற்புத உலகம் (Alice's Adventures in wonderland) எழுதிய லூயி கரோல், நார்னியா(Narnia) எழுதிய சி.எஸ். லூயிஸ், ஹாபிட்(Hobbit), தி லார்ட் ஆஃப்த ரிங்ஸ்(The Lord of the Rings) எழுதிய ஜே. ஆர். டோல்கின் என அறிமுகம் நீண்டு கொண்டே போகிறது.  இப்புத்தகங்கள் குழந்தைகளுக்கானது மட்டுமல்ல, பெரியோர்களின் அறிவுத்தேடல், மெய்த்தேடலுக்கும் கூட இப்புத்தகங்களைப் படிக்கலாம் என்கிறார் எஸ். ரா.

  உலக எழுத்தாளர்களின், எழுத்தின் அறிமுகம் வேண்டுவோர், செவ்விலக்கியத்தில் எதைப்படிப்பது என தேடுவோர் படிக்கவேண்டிய புத்தகம்.

Friday, July 5, 2013

தொழில்நுட்ப உலகம் ஒரு பார்வை 30-06-2013 லிருந்து 06-07-2013 வரை


எல்ஜி நிறுவனம் சாம்சங் நோட் II-க்குப் போட்டியாக ஆப்டிமஸ் G புரோ என்கிற நுண்ணறிபேசி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.  இதன் விலை இந்திய ரூபாயில் சுமார் 43,000 ஆக இருக்கும்.

நாம் அனைவரும் பயன்படுத்தும் கணினி சுட்டெலியைக் கண்டுபிடித்த டக்ளஸ் ஏங்கல்பர்ட்(Douglas Engelbart) சிறுநீரக செயலிழப்பால் மரணமடைந்தார்.

சாம்சங் கேலக்ஸி நோட் III செப்டம்பரில் வெளியிடப்படும் என தொழில்நுட்பம் குறித்து எழுதும் வலைப்பூக்களில் செய்திகள் வெளியாகியுள்ளது.

யாஹூ நிறுவனம் கைப்பேசிகளுக்கான செயலிகளை உருவாக்கும் நிறுவனமான க்யூவிக்கியை(Qwiki) கையகப்படுத்தியுள்ளது.


நுண்ணறிபேசிகள் மற்றும் குளிகைக் கணினிகளில் சக்கைப்போடு போட்ட விளையாட்டான ஆங்கிரிபேர்ட்ஸ் புதிய மேம்பாடுகளுடனும், புதிய விளையாட்டு விதங்களுடனும்(mode), 15 புதிய படிநிலைகளுடனும் வந்துள்ளது.

இணையதளம்/வலைப்பூக்கள், RSS feed-ஐ படிக்கப் பலராலும் பயன்படுத்தப்பட்ட கூகுள் ரீடர் என்கிற சேவையை கூகுள் நிறுவனம் ஜூலை 1-உடன் மூடிவிட்டது.

மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது விண்டோஸ் 8 இயங்குதளத்திற்கு புதிய மேம்பாடுகளை(updates) வெளியிட்டுள்ளது.

ஐகேன்(ICANN - Internet Corporation for Assigned Names and Numbers) எனப்படும் இணையதளப் பெயர்கள் மற்றும் முகவரிகளை நிர்வகிக்கும் நிறுவனம், புதிதாக உயர் கணினி திரள(Domain) பெயர்களை அறிமுகப்படுத்தவுள்ளது. திரளப்பெயர்கள்(Domain Names) உ-ம் .com, .org, .in, .edu போன்றவை.



Tuesday, June 18, 2013

பாப்பா கவிதை..

பிஸ்கட் பேதம்..

'ப்பா.. பப்பி ப்பா...'
'நம்ம வீட்ல இருக்குறதுதான் பப்பி.
இது டாக்(dog) டா செல்லம்'
பிஞ்சுக்கு பிஸ்கட்டுடன்
பேதத்தையும் ஊட்டினார் அப்பா.


பார்த்தால் பசியாறும்..

குட்டிபாப்பாவுக்கு
 குட்டிக் கரண்டியில்
சோறுட்டினாள் அம்மா
 பார்த்தோருக்கெல்லாம்
பசியாறியது.

Monday, April 29, 2013

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை(21-04-13 முதல் 27-04-13வரை)

கூகுளின் street view சேவை தற்போது மேலும் 50 உலக நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இல்லியனாஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் புதிய லித்தியம்-அயன் பேட்டரி தொழில்நுட்பம் ஒன்றை கண்டறிந்துள்ளனர்.  இத்தொழில்நுட்படத்தின் மூலம் அதிக மின்திறனை குறைந்த அளவுடைய மின்கலத்தில் சேமிக்க முடியும் என்றும், இது மிக விரைவாக மின்னேற்றம்(charge) ஆகிவிடுவதோடு, நீண்ட நேரத்திற்கு அதைத் தேக்கி வைத்திருக்கும் திறனுடையதாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அமேசான்.காம் இந்த வருட கடைசியில் ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் TV-க்குப் போட்டியாக ஒரு செட்-டாப் பாக்சை அறிமுகப்படுத்தவுள்ளது.  இது இணைய்யிதிலிருந்து நிகழ்படம்/கணொளியை ஓடை(Streaming) தொழில்நுட்ப முறையில் காட்டும்.

ஆப்பிள் நிறுவனம் அதன் வருடாந்திர் உலகலாவிய உருவாக்குனர்(Developers) கலந்தாய்வு/மாநாட்டை ஜூன் மாதத்தில் சான் பிரான்சிஸ்கோ நகரில் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

பார்தி ஏர்டெலும், மைக்ரோசாஃப்டும் கூட்டாக இணைந்து அதன் வாடிக்கையாளர்களுக்கு எக்ஸ்பாக்ஸ்(Xbox) விளையாட்டு சாதனம் மற்றும் ஏர்டெல்லின் அதிவேக இணைய இணைப்புக்கான சாதனத்தை வாக்குவதில் சலுகை அறிவித்துள்ளது.  இதன்முலம் வாடிக்கையாளர்கள் சுமார் இந்திய ரூபாய் 15000 வரை மிச்சப்படுத்தலாம் எனத் தெரிவித்துள்ளது.

இந்திய மென்பொருள் நிறுவனமான டெக் மகிந்திரா(Tech Mahindra) ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த டைப் அப்ரூவல் லேப்(Type Approval Lab) எனும் நிறுவனத்தை கையகப்படுத்தியுள்ளது. 

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மொபைல்களில் சாம்சங் நிறுவனம் நோக்கியாவைப் பின்னுக்குத் தள்ளி, முதலிடம் பிடித்துள்ளதாக ஜிஎஃப்கே-நீல்சன்(Gfk-Nielsen) கருத்துக்கணிப்பு/மதிப்பீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்டெல் நிறுவனம் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தைக் கொண்டு இயங்கும் குறைந்த விலை மடிக்கணினிகளை உருவாக்கி வருவதாகவும் இவற்றின் விலை சுமார் $200-ஆக இருக்கும்(இந்திய ரூபாயில் சுமார் 10,800) என்றும் இருக்கும் என்றும் அந்நிறுவனத்தின் சிஇஓ பால் ஒடெல்லினி(Paul Otellini) தெரிவித்துள்ளார்.

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி S4 தயாரிப்பு விற்பனைக்கு ஈடு கொடுக்க முடியாமல் பற்றாக்குறையுடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

சாம்சங், ஆப்பிள் நிறுவனத்திற்குப் பிறகு அதிக அளவில் மொபைல் போன்களை உற்பத்தி, ஏற்றுமதி செய்யும் நிறுவனமான ஹூவாய்(Huawei) தன்னுடைய வணிக அடையாளத்தின்(Brand Image) பரவலை அதிகரிக்கும் பொருட்டு சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் செலவிட உள்ளதாகத் தெரிகிறது.

யுனிநார் நிறுவனம் தனது சிம் கார்டுகள், ரீசார்ஜ் வவுச்சர்களை ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுனர்கள், பால் பாக்கேட், செய்தித்தாள் போடுவோர் மூலமாக விற்பனை செய்யும் ஒரு புதிய யோசனை வைத்திருப்பதாகக் கூறியுள்ளது.

சாம்சங் தனது கேலக்ஸி S4 நுண்ணறிபேசியை உற்பத்தி செய்யும் பகுதியைத் இந்தியாவிற்குள் அமைக்கவிருப்பதாகக் கூறியுள்ளது.

மைக்ரோசாப்ட் தனது "Blue screen of death" பிரச்சனையை நிவர்த்தி செய்யும் நிரல் ஒட்டினை(Source code patch) மீண்டும் வெளியிட்டுள்ளது. 

ஜாவா நிரல்மொழியின் 8வது பதிப்பு வெளிவருவது மீண்டும் தள்ளிப்போடப் பட்டுள்ளது.  தற்போதைக்கு இப்புதியப் பதிப்பு 2014-ம் ஆண்டு வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:
இதற்கு முந்தைய வார தொழில்நுட்ப செய்திகளைப் படிக்க -> இங்கே சொடுக்கவும்
இதற்கு அடுத்த வார தொழில்நுட்ப செய்திகளை படிக்க ->

Tuesday, April 23, 2013

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை(14-04-13 முதல் 20-04-13வரை)

நோக்கியா நிறுவனம் அதன் லூமியா 720 வகை கைப்பேசிகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது, விலை ரூபாய் 18,999 ஆக இருக்கும்.

ஆப்பிள் மற்றும் சாம்சங்கைத் தொடர்ந்து தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனமும் ஸ்மார்ட் வாட்ச் தயாரிப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

ஆஷ்டன் விருது வென்ற இந்திய விஞ்ஞானியான சன்டிபாடா கோன்சௌத்ரி, மத்திய அரசிடம் சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும்(சிறிய சோலார் பேனல்களின் உதவியால்) சட்டையை உருவாக்குவதற்கான ஆராய்ச்சி முன்மொழிவைக்(Research proposal) கொடுத்துள்ளார்.  இச்சட்டை மூலமாக 400 வாட் மின்சாரம் வரை தயாரிக்கலாம் என்று கூறியுள்ளார்.

1,20,000 ஆண்ட்ராய்டு செல்பேசிகளுக்கான இலவச App-களில் பாதுகாப்பு வழு இருப்பதாக கலிபோர்னியா பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கண்டறிந்துள்ளார்.  இந்த இலவச App-களை கிட்டதட்ட 50 கோடி பயனர்கள் பயன்படுத்துகிறார்களாம்.

யாகூ நிறுவனம் புதிதாக வானிலையை கூறும் ஒரு App-ஐ வெளியிட்டுள்ளது.  மேலும், அதன் மின்அஞ்சல் App-ஐயும் மேம்படுத்தியுள்ளது.

வாட்ஸ்ஆப்(WhatsApp), க்கிக்(kik) போன்று ஒரு தகவல்/செய்தி பரிமாறும் App-ஐ just.me நிறுவனம் வெளியிட்டுள்ளது.  இதன் முக்கிய சிறப்பு மற்ற App-கள் போலில்லாமல், இதில் செய்தி அனுப்புபவரிடம் மட்டும் இந்த App இருந்தால் போதுமானது, இருவரிடமும் இருந்தேயாக வேண்டும் என்கிற அவசிமில்லை.

ஃபேஸ்புக் ஐஓஎஸ்-க்கான(iOS) புதிய SDK-ஐ(Software Development Kit) வெளியிட்டுள்ளது.  புகுபதிகை(login) வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது, உள்ளார்ந்த வரைபட(graph) வசதி சேர்க்கப்பட்டுள்ளது.  இதனால் ஐஓஎஸ்-க்கான ஃபேஸ்புக் App உருவாக்கும் நிரலர்கள் எளிதாக செய்து முடிக்கலாம் என கூறப்படுகிறது.

இந்தியாவைச் சேர்ந்த சுமித் தாகர் என்பவர் பார்வைத்திறன் இல்லாதோர்/குறைபாடுடையோர்களுக்கான ஒரு நுண்ணறிபேசி(Smartphone)யை உருவாக்கியுள்ளார்.  இதனுடைய தொடுதிரை இதற்கு வரும் செய்திகளை பிரெய்லி முறையில் படிக்கும் விதமாக திரையை மேடு பள்ளம் கொண்டதாக(தொட்டு உணரும் பிரெய்லி எழுத்துருக்களாக) மாற்றிவிடும் புதிய தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் சிரி(siri) பேச்சு தொழில்நுட்பம், ஐபோன் பயனர்கள் அதற்கு அளிக்கும் பேச்சுக் கட்டளைகளை(Voice Commands) 2 வருடம் வரை பதித்து/சேமித்து வைத்துக்கொள்ளும் என அந்நிறவனத்தின் தகவல் தொடர்பாளர் கூறியுள்ளார்.  சேமிக்கப்படும் இத்தகவல்கள் சிரி தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்காக மட்டுமே என கூறப்பட்டாலும், பயனர்களிடையே இது சிறு சலனத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஃபேஸ்புக் அதன் App-ல் இருந்து உங்கள் ஃபேஸ்புக் நண்பர்களுக்கு இலவசமாக அ(தொ)லைபேசும் வசதியை தந்துள்ளது.  தற்போதைக்கு இவ்வசதி அமெரிக்கா, கனடாவில் மட்டும் நடைமுறையில் உள்ளது.  விரைவில் மற்ற பகுதிகளுக்கும் அறிமுகப்படுத்தப்படும் என நம்பப்படுகிறது.

இந்தியாவில் சாம்சங் S4 ஏப்ரல் 26 முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.


மேலும் படிக்க:
இதற்கு முந்தைய வார தொழில்நுட்ப செய்திகளைப் படிக்க -> இங்கே சொடுக்கவும்
இதற்கு அடுத்த வார தொழில்நுட்ப செய்திகளை படிக்க -> இங்கே சொடுக்கவும்

Wednesday, April 17, 2013

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை(07-04-13 முதல் 13-04-13வரை)

மொபைல் உலகில் மிகப்பிரபலமான வாட்ஸ்ஆப்(WhatsApp) செய்திப் பரிமாற்றியை(Messanger app) சுமார் 1 பில்லியன் அமெரிக்க டாலருக்கு(100 கோடி * 55 இந்திய ரூபாய் மதிப்பிற்கு, அதாவது 5500 கோடி ரூபாய்) கையகப்படுத்த கூகுள் முயன்றுவருவதாக தகவல்கள் கசிகின்றன.  உங்கள் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனுக்கு வாட்ஸ்ஆப்பை பதிவிறக்க

இந்தியாவின் மிகப்பெரிய தகவல்தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ்(TCS) பிரான்ஸைச் சேர்ந்த அல்டி(Alti) என்கிற தகவல்தொழில்நுட்ப நிறுவனத்தை 530 கோடி இந்திய ரூபாய்க்கு கையகப்படுத்த உள்ளது.

சாம்சங் 20 புதிய ஸ்மார்ட் டிவிக்களை இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளது.

பிஎஸ்என்எல்(BSNL) தனது 4G இணைய சேவையை இந்தூரில் தொடங்கவுள்ளது.

லிங்க்டுஇன் நிறுவனம் 90 மில்லியன் அமெரிக்க டாலருக்கு கைபேசிகளில் பயன்படும் செயிலிகளை உருவாக்கும் மின்படிப்பான்(E-Reader) நிறுவனமான பல்ஸ்-ஐ(Pulse) கையகப்படுத்தவுள்ளது.

டிவிட்டர் இந்த வார இறுதியில் ஒரு இசை அப்ளிகேசனை வெளியிட உள்ளதாக தெரிகிறது.

கூகுளின் நிரலெழுதும் போட்டியான கூகுள் கோட் ஜாம் 2013(Google Code Jam-2013) ஏப்ரல் 12 அன்று துவங்கியுள்ளது.  பரிசுத்தோகை 15000 அமெரிக்க டாலர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாஸ்காம் (National Association of Software and Services Companies (NASSCOM)) 25 லட்சத்திலிருந்து 2 கோடி ரூபாய் வரை 500 புதிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு(Tech Start-ups) ஏஞ்சல் இன்வெஸ்டார்கள்(Angel investors) மூலமாக நிதியுதவி அளிக்கத் திட்டமிட்டுள்ளது.  மேலதிக தகவல்களுக்கு பார்க்கவும் www.10000startups.com.

மைக்ரோசாப்ட் நிறுவனம் கூகுளின் நெக்ஸஸ், ஆப்பிளின் ஐபாட் மினி போன்றவற்றிற்குப் போட்டியாக சிறிய திரையுடைய(7 இன்ச்) சர்பேஸ் குளிகைக் கணிணிகளை உருவாக்க திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

4 கார்னகி மெல்லன் பல்கலைக்கழக மாணவர்களால் தொடங்கப்பட்ட பேடேங்கோ(PayTango) எனும் நிறுவனம், பண அட்டைகளான கடன் அட்டை(Credit Card), டெபிட் கார்டுகளுக்குப் பதிலாக கைரேகை மூலம் பணப்பரிமாற்றம், தொகை, கட்டணம் செலுத்தும் முறை ஒன்றை உருவாக்கியுள்ளது.  இம்முறை ஏற்றுக்கொள்ளப்பட்டால் விரைவில் நடைமுறைக்கு வந்துவிடும்.

மேலும் படிக்க:
இதற்கு முந்தைய வார தொழில்நுட்ப செய்திகளைப் படிக்க -> இங்கே சொடுக்கவும்
இதற்கு அடுத்த வார தொழில்நுட்ப செய்திகளை படிக்க ->  இங்கே சொடுக்கவும்