Monday, April 29, 2013

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை(21-04-13 முதல் 27-04-13வரை)

கூகுளின் street view சேவை தற்போது மேலும் 50 உலக நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இல்லியனாஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் புதிய லித்தியம்-அயன் பேட்டரி தொழில்நுட்பம் ஒன்றை கண்டறிந்துள்ளனர்.  இத்தொழில்நுட்படத்தின் மூலம் அதிக மின்திறனை குறைந்த அளவுடைய மின்கலத்தில் சேமிக்க முடியும் என்றும், இது மிக விரைவாக மின்னேற்றம்(charge) ஆகிவிடுவதோடு, நீண்ட நேரத்திற்கு அதைத் தேக்கி வைத்திருக்கும் திறனுடையதாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அமேசான்.காம் இந்த வருட கடைசியில் ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் TV-க்குப் போட்டியாக ஒரு செட்-டாப் பாக்சை அறிமுகப்படுத்தவுள்ளது.  இது இணைய்யிதிலிருந்து நிகழ்படம்/கணொளியை ஓடை(Streaming) தொழில்நுட்ப முறையில் காட்டும்.

ஆப்பிள் நிறுவனம் அதன் வருடாந்திர் உலகலாவிய உருவாக்குனர்(Developers) கலந்தாய்வு/மாநாட்டை ஜூன் மாதத்தில் சான் பிரான்சிஸ்கோ நகரில் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

பார்தி ஏர்டெலும், மைக்ரோசாஃப்டும் கூட்டாக இணைந்து அதன் வாடிக்கையாளர்களுக்கு எக்ஸ்பாக்ஸ்(Xbox) விளையாட்டு சாதனம் மற்றும் ஏர்டெல்லின் அதிவேக இணைய இணைப்புக்கான சாதனத்தை வாக்குவதில் சலுகை அறிவித்துள்ளது.  இதன்முலம் வாடிக்கையாளர்கள் சுமார் இந்திய ரூபாய் 15000 வரை மிச்சப்படுத்தலாம் எனத் தெரிவித்துள்ளது.

இந்திய மென்பொருள் நிறுவனமான டெக் மகிந்திரா(Tech Mahindra) ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த டைப் அப்ரூவல் லேப்(Type Approval Lab) எனும் நிறுவனத்தை கையகப்படுத்தியுள்ளது. 

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மொபைல்களில் சாம்சங் நிறுவனம் நோக்கியாவைப் பின்னுக்குத் தள்ளி, முதலிடம் பிடித்துள்ளதாக ஜிஎஃப்கே-நீல்சன்(Gfk-Nielsen) கருத்துக்கணிப்பு/மதிப்பீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்டெல் நிறுவனம் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தைக் கொண்டு இயங்கும் குறைந்த விலை மடிக்கணினிகளை உருவாக்கி வருவதாகவும் இவற்றின் விலை சுமார் $200-ஆக இருக்கும்(இந்திய ரூபாயில் சுமார் 10,800) என்றும் இருக்கும் என்றும் அந்நிறுவனத்தின் சிஇஓ பால் ஒடெல்லினி(Paul Otellini) தெரிவித்துள்ளார்.

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி S4 தயாரிப்பு விற்பனைக்கு ஈடு கொடுக்க முடியாமல் பற்றாக்குறையுடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

சாம்சங், ஆப்பிள் நிறுவனத்திற்குப் பிறகு அதிக அளவில் மொபைல் போன்களை உற்பத்தி, ஏற்றுமதி செய்யும் நிறுவனமான ஹூவாய்(Huawei) தன்னுடைய வணிக அடையாளத்தின்(Brand Image) பரவலை அதிகரிக்கும் பொருட்டு சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் செலவிட உள்ளதாகத் தெரிகிறது.

யுனிநார் நிறுவனம் தனது சிம் கார்டுகள், ரீசார்ஜ் வவுச்சர்களை ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுனர்கள், பால் பாக்கேட், செய்தித்தாள் போடுவோர் மூலமாக விற்பனை செய்யும் ஒரு புதிய யோசனை வைத்திருப்பதாகக் கூறியுள்ளது.

சாம்சங் தனது கேலக்ஸி S4 நுண்ணறிபேசியை உற்பத்தி செய்யும் பகுதியைத் இந்தியாவிற்குள் அமைக்கவிருப்பதாகக் கூறியுள்ளது.

மைக்ரோசாப்ட் தனது "Blue screen of death" பிரச்சனையை நிவர்த்தி செய்யும் நிரல் ஒட்டினை(Source code patch) மீண்டும் வெளியிட்டுள்ளது. 

ஜாவா நிரல்மொழியின் 8வது பதிப்பு வெளிவருவது மீண்டும் தள்ளிப்போடப் பட்டுள்ளது.  தற்போதைக்கு இப்புதியப் பதிப்பு 2014-ம் ஆண்டு வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:
இதற்கு முந்தைய வார தொழில்நுட்ப செய்திகளைப் படிக்க -> இங்கே சொடுக்கவும்
இதற்கு அடுத்த வார தொழில்நுட்ப செய்திகளை படிக்க ->

Tuesday, April 23, 2013

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை(14-04-13 முதல் 20-04-13வரை)

நோக்கியா நிறுவனம் அதன் லூமியா 720 வகை கைப்பேசிகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது, விலை ரூபாய் 18,999 ஆக இருக்கும்.

ஆப்பிள் மற்றும் சாம்சங்கைத் தொடர்ந்து தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனமும் ஸ்மார்ட் வாட்ச் தயாரிப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

ஆஷ்டன் விருது வென்ற இந்திய விஞ்ஞானியான சன்டிபாடா கோன்சௌத்ரி, மத்திய அரசிடம் சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும்(சிறிய சோலார் பேனல்களின் உதவியால்) சட்டையை உருவாக்குவதற்கான ஆராய்ச்சி முன்மொழிவைக்(Research proposal) கொடுத்துள்ளார்.  இச்சட்டை மூலமாக 400 வாட் மின்சாரம் வரை தயாரிக்கலாம் என்று கூறியுள்ளார்.

1,20,000 ஆண்ட்ராய்டு செல்பேசிகளுக்கான இலவச App-களில் பாதுகாப்பு வழு இருப்பதாக கலிபோர்னியா பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கண்டறிந்துள்ளார்.  இந்த இலவச App-களை கிட்டதட்ட 50 கோடி பயனர்கள் பயன்படுத்துகிறார்களாம்.

யாகூ நிறுவனம் புதிதாக வானிலையை கூறும் ஒரு App-ஐ வெளியிட்டுள்ளது.  மேலும், அதன் மின்அஞ்சல் App-ஐயும் மேம்படுத்தியுள்ளது.

வாட்ஸ்ஆப்(WhatsApp), க்கிக்(kik) போன்று ஒரு தகவல்/செய்தி பரிமாறும் App-ஐ just.me நிறுவனம் வெளியிட்டுள்ளது.  இதன் முக்கிய சிறப்பு மற்ற App-கள் போலில்லாமல், இதில் செய்தி அனுப்புபவரிடம் மட்டும் இந்த App இருந்தால் போதுமானது, இருவரிடமும் இருந்தேயாக வேண்டும் என்கிற அவசிமில்லை.

ஃபேஸ்புக் ஐஓஎஸ்-க்கான(iOS) புதிய SDK-ஐ(Software Development Kit) வெளியிட்டுள்ளது.  புகுபதிகை(login) வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது, உள்ளார்ந்த வரைபட(graph) வசதி சேர்க்கப்பட்டுள்ளது.  இதனால் ஐஓஎஸ்-க்கான ஃபேஸ்புக் App உருவாக்கும் நிரலர்கள் எளிதாக செய்து முடிக்கலாம் என கூறப்படுகிறது.

இந்தியாவைச் சேர்ந்த சுமித் தாகர் என்பவர் பார்வைத்திறன் இல்லாதோர்/குறைபாடுடையோர்களுக்கான ஒரு நுண்ணறிபேசி(Smartphone)யை உருவாக்கியுள்ளார்.  இதனுடைய தொடுதிரை இதற்கு வரும் செய்திகளை பிரெய்லி முறையில் படிக்கும் விதமாக திரையை மேடு பள்ளம் கொண்டதாக(தொட்டு உணரும் பிரெய்லி எழுத்துருக்களாக) மாற்றிவிடும் புதிய தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் சிரி(siri) பேச்சு தொழில்நுட்பம், ஐபோன் பயனர்கள் அதற்கு அளிக்கும் பேச்சுக் கட்டளைகளை(Voice Commands) 2 வருடம் வரை பதித்து/சேமித்து வைத்துக்கொள்ளும் என அந்நிறவனத்தின் தகவல் தொடர்பாளர் கூறியுள்ளார்.  சேமிக்கப்படும் இத்தகவல்கள் சிரி தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்காக மட்டுமே என கூறப்பட்டாலும், பயனர்களிடையே இது சிறு சலனத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஃபேஸ்புக் அதன் App-ல் இருந்து உங்கள் ஃபேஸ்புக் நண்பர்களுக்கு இலவசமாக அ(தொ)லைபேசும் வசதியை தந்துள்ளது.  தற்போதைக்கு இவ்வசதி அமெரிக்கா, கனடாவில் மட்டும் நடைமுறையில் உள்ளது.  விரைவில் மற்ற பகுதிகளுக்கும் அறிமுகப்படுத்தப்படும் என நம்பப்படுகிறது.

இந்தியாவில் சாம்சங் S4 ஏப்ரல் 26 முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.


மேலும் படிக்க:
இதற்கு முந்தைய வார தொழில்நுட்ப செய்திகளைப் படிக்க -> இங்கே சொடுக்கவும்
இதற்கு அடுத்த வார தொழில்நுட்ப செய்திகளை படிக்க -> இங்கே சொடுக்கவும்

Wednesday, April 17, 2013

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை(07-04-13 முதல் 13-04-13வரை)

மொபைல் உலகில் மிகப்பிரபலமான வாட்ஸ்ஆப்(WhatsApp) செய்திப் பரிமாற்றியை(Messanger app) சுமார் 1 பில்லியன் அமெரிக்க டாலருக்கு(100 கோடி * 55 இந்திய ரூபாய் மதிப்பிற்கு, அதாவது 5500 கோடி ரூபாய்) கையகப்படுத்த கூகுள் முயன்றுவருவதாக தகவல்கள் கசிகின்றன.  உங்கள் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனுக்கு வாட்ஸ்ஆப்பை பதிவிறக்க

இந்தியாவின் மிகப்பெரிய தகவல்தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ்(TCS) பிரான்ஸைச் சேர்ந்த அல்டி(Alti) என்கிற தகவல்தொழில்நுட்ப நிறுவனத்தை 530 கோடி இந்திய ரூபாய்க்கு கையகப்படுத்த உள்ளது.

சாம்சங் 20 புதிய ஸ்மார்ட் டிவிக்களை இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளது.

பிஎஸ்என்எல்(BSNL) தனது 4G இணைய சேவையை இந்தூரில் தொடங்கவுள்ளது.

லிங்க்டுஇன் நிறுவனம் 90 மில்லியன் அமெரிக்க டாலருக்கு கைபேசிகளில் பயன்படும் செயிலிகளை உருவாக்கும் மின்படிப்பான்(E-Reader) நிறுவனமான பல்ஸ்-ஐ(Pulse) கையகப்படுத்தவுள்ளது.

டிவிட்டர் இந்த வார இறுதியில் ஒரு இசை அப்ளிகேசனை வெளியிட உள்ளதாக தெரிகிறது.

கூகுளின் நிரலெழுதும் போட்டியான கூகுள் கோட் ஜாம் 2013(Google Code Jam-2013) ஏப்ரல் 12 அன்று துவங்கியுள்ளது.  பரிசுத்தோகை 15000 அமெரிக்க டாலர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாஸ்காம் (National Association of Software and Services Companies (NASSCOM)) 25 லட்சத்திலிருந்து 2 கோடி ரூபாய் வரை 500 புதிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு(Tech Start-ups) ஏஞ்சல் இன்வெஸ்டார்கள்(Angel investors) மூலமாக நிதியுதவி அளிக்கத் திட்டமிட்டுள்ளது.  மேலதிக தகவல்களுக்கு பார்க்கவும் www.10000startups.com.

மைக்ரோசாப்ட் நிறுவனம் கூகுளின் நெக்ஸஸ், ஆப்பிளின் ஐபாட் மினி போன்றவற்றிற்குப் போட்டியாக சிறிய திரையுடைய(7 இன்ச்) சர்பேஸ் குளிகைக் கணிணிகளை உருவாக்க திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

4 கார்னகி மெல்லன் பல்கலைக்கழக மாணவர்களால் தொடங்கப்பட்ட பேடேங்கோ(PayTango) எனும் நிறுவனம், பண அட்டைகளான கடன் அட்டை(Credit Card), டெபிட் கார்டுகளுக்குப் பதிலாக கைரேகை மூலம் பணப்பரிமாற்றம், தொகை, கட்டணம் செலுத்தும் முறை ஒன்றை உருவாக்கியுள்ளது.  இம்முறை ஏற்றுக்கொள்ளப்பட்டால் விரைவில் நடைமுறைக்கு வந்துவிடும்.

மேலும் படிக்க:
இதற்கு முந்தைய வார தொழில்நுட்ப செய்திகளைப் படிக்க -> இங்கே சொடுக்கவும்
இதற்கு அடுத்த வார தொழில்நுட்ப செய்திகளை படிக்க ->  இங்கே சொடுக்கவும்




Monday, April 8, 2013

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை(31-03-13 முதல் 06-04-13வரை)

  • ஃபேஸ்புக்(Facebook) ஆன்ட்ராய்டை அடிப்படையாகக் கொண்டு ஃபேஸ்புக்கின் அம்சங்கள் நிறைந்த ஒரு செல்பேசியை தயாரித்து வெளியிட திட்டமிட்டுள்ளதாக செய்திகள் கசிகின்றன.
  • இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப துறையைச் சார்ந்த இணையதளங்களே, இணையத் திருடர்களின் முக்கிய இலக்காக இருப்பதாக நச்சு நிரல் எதிர் மென்பொருள் தயாரிக்கும் நிறுவனமான சிமேன்டெக்(Symentec) கூறுகிறது.
  • ஏற்கனவே ஸ்கைப்(skype) போன்ற இணையச் சேவைகளை முடக்க முடிவெடுத்திருந்த சவூதிஅரேபியா(அவர்கள் கேட்ட கட்டுப்பாடுகளை, வரம்புகளை நிறைவேற்றாத பட்சத்தில்), தற்போது அரேபியாவில் மிகப்பிரபலமாக இருக்கும் டிவிட்டர் சேவையிலும் சில முக்கிய முடிவுகளாக, டிவிட்டர் பயனர்கள் தங்கள் அடையாளச் சான்றுகளை(இன்னாருடைய டிவிட்டர் கணக்கு இதுதான் என அவர்கள் அறிய) அரசுக்கு அளிக்கவேண்டும் எனக்கூறியுள்ளது.  இந்த முடிவு டிவிட்டர் அனானிகளைத்(anonymous) தவிர்ப்பதற்காக எடுக்கப்பட்டுள்ளது.
  • முட்டாள்கள் தினத்தன்று தேடுபொறி முன்னோடியான கூகுள் பல காமெடி கலாட்டாக்களை ஏப்ரல் 1-ம் தேதி அரங்கேற்றியது.  1. வாசனை அடிப்படையாகக் கொண்ட தேடல் வசதி(Google nose beta), 2. கூகிளின் வரைபடத்தை(map) அடிப்படையாகக் கொண்ட புதையல் வேட்டை 3. கூகுள் பைபர்(fiber) அதி வேக இணைய இணைப்பிற்கான இலவச வசதி என பட்டியல் நீளுகிறது.  பாவம், எத்தனை பேர் ஏமாந்தார்கள் என்று தெரியவில்லை.. ;)
  • ஒரு சாம்பிள் கூகுள் வாசனைத் தேடல்
  • கூகுள் கிளாஸ்(google glass) 8000 தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களால் பரிசோதிக்கப்படவுள்ளதாக தெரிகிறது.  இதில்  புகழ்பெற்ற முக்கியப் பிரமுகர்கள், தொழில்நுட்பம் சார்ந்து எழுதும் நபர்கள், தொழில்நுட்ப விமர்சகர்கள் என பலரும் அடக்கம்.
  • புதுதில்லி மற்றும் ஹவுராவுக்கு இடையேயான ராஜ்தானி எக்ஸ்பிரஸில் கம்பியில்லா(wi-fi) இணைய அணுக்கம் வழங்கப்பட்டுள்ளது.  மேலும், இந்த ஆண்டின் இறுதிக்குள் இவ்வசதி ராஜ்தானி, சதாப்தி, தூரந்தோ உள்ளிட்ட 50 இரயில்களிலும் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக இரயில்வே அமைச்சர் திரு. பவன் குமார் பன்சால் அறிவித்துள்ளார்.
  • சீனாவைச் சேர்ந்த நுண்ணறிபேசி(SmartPhone) தயாரிப்பு நிறுவனம் ஒன்று 5000 mAh திறனுடைய மின்கலத்துடன்(Battery) கூடிய நுண்ணறிபேசியை அறிமுகப்படுத்தவுள்ளது.  தற்போது மோட்டோரோலாவின் டிராய்டு ரேசர் அதிகபட்சமாக 3300 mAh திறனுடைய மின்கலத்தைக் கொண்டுள்ளது.  5000 என்கிற அளவு இதுவரை குளிகைக் கணினிகளில்தான்(Tablet) பயன்படுத்தப்பட்டு வந்தன.
  • திரு. ரதேஷ் பாலகிருஷ்ணன் ரெட்ஹேட்(Redhat) நிறுவனத்தின் மேகக்கணிமை குழுவிற்கு  தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.  இவர் இதற்கு முன் மைக்ரோசாப்டில்(Microsoft) பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
  • பயர்பாக்ஸ் உலாவி(Firefox browser) நிறுவனமா மோசில்லா(Mozilla)  15 வருடங்களை நிறைவுசெய்துள்ளது.  15 வருடங்களுக்கு முன் நெட்ஸ்கேப்(Netscape) நிறுவனம் தனது நெட்ஸ்கேப் உலாவியின் மூல நிரலை(Sourcecode) பொதுப்பயன்பாட்டிற்கு வெளியிட்டு மோசில்லா திட்டத்தை உருவாக்கியது.
  • ஆன்ட்ராய்டில் இயங்கும் நோட்புக்(Notebook pc) கணினிகளை இந்த வருட இறுதியில் கூகுள் வெளியிடும் எனத் தெரிகிறது.
  • சாம்சங் தனது கேலக்ஸி ஏஸ் 2-க்கு ஆன்ட்ராய்டு 4.1.2 புதுப்பித்தலை(update) வழங்கியுள்ளது.  எப்படி புதுப்பிப்பது?
    விளக்க காணொளி: நன்றி TechFusions Youtube channel
  • கட்டற்ற மற்றும் திறமூல(Free and open source) தரவுதள மேலாண்மை(Database management) மென்பொருள்களில் ஒன்றான போஸ்கிரெஸ்க்யூல்(PostgreSQL), தரவுகளுக்கு ஊறுவிளைவிக்கும் ஒரு முக்கிய வழு அதன் மென்பொருளில் உள்ளதைக் கண்டறிந்துள்ளது.  தற்போது அதை நிவர்த்தி செய்யும் தீர்வினையும் அதன் மூல நிரலில் சேர்த்துள்ளது.  இவ்வழு அதன் 9.0, 9.1, 9.2 ஆகிய பதிப்புகளில் உள்ளதெனவும், அதனால் தரவுதள மேலாளர்களை(DB Administrators) PostgreSQL 9.2.4, 9.1.9 அல்லது 9.0.13 பதிப்புகளைத் தரவிறக்கி பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளது.  கண்டறியப்பட்ட வழு வேறெந்த தீகொந்தர்களாளும்(hackers) பயன்படுத்தப்(exploit) பட்டதாகத் தகவலில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • வீடியோகான் நிறுவனம் தனது VT75C குளிகைக்கணினியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.  இதன் முக்கிய சிறப்பு இது மற்ற சிம் கார்டுடன் கூடியது, மேலும் சிம் கார்டின் வாயிலாக 2G வழியில் இணைய இணைப்பையும் உபயோகப்படுத்தலாம்.  விலை இந்திய ரூபாய் 6,500-ஆக இருக்கும் எனத்தெரிகிறது.
  • ஆன்ட்ராய்டுக்கான குரோம் உலாவியில் அதன் மேசைக்கணினிக்கான பதிப்பில் இருக்கும் கடவுச்சொல்(Password) ஒருங்கிணைப்பு(sync) வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • சாம்சங் நிறுவனமும், மோசில்லாவும் இணைந்து செர்வோ(Servo) என்கிற  நகர்பேசிகளில் பயன்படுத்தப்படும் ஒரு புதிய உலாவி எஞ்சினை(Engine) உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
  • மோசில்லா தனது பயர்பாக்ஸ் உலாவியின் புதிய பதிப்பை வெளியிட்டுள்ளது(பதிப்பு எண் 20).  இப்புதிய பதிப்பில் பல புதிய அம்சங்களும்(features) முக்கியமாக ஒவ்வொரு டேபிலும்(Tab) கூட தனிப்பட்ட உலாவல்(Private browsing) மேற்கொள்ளும் படி மாற்றப்பட்டுள்ளது(முந்தைய பதிப்புகளில் மற்ற சாளரங்கள் மூடப்பட்டு தனிஉலாவலுக்காக ஒரு புதிய சாளரம் திறக்கப்படும், அதில் உள்ள அனைத்து டேப்களுமே தனிஉலாவல் முறையிலேயே இருக்கும்), சில முக்கிய வழு நிவர்த்திகளும்(bug fixes) செய்யப்பட்டுள்ளன.
  • சாம்சங்கும், மோசில்லாவும் இணைந்து ரஸ்ட்(Rust) என்கிற ஒரு புதிய நிரல் மொழியை உருவாக்கியுள்ளன.  இது சி++-க்கு மாற்றாக அமையலாம் எனக்கூறப்படுகிறது.

மேலும் படிக்க:
இதற்கு முந்தைய வார தொழில்நுட்ப செய்திகளைப் படிக்க -> இங்கே சொடுக்கவும்
இதற்கு அடுத்த வார தொழில்நுட்ப செய்திகளை படிக்க ->  இங்கே சொடுக்கவும்


Monday, April 1, 2013

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை(24-03-13 முதல் 30-03-13வரை)

  • டிசிஎஸ் மற்றும் கேப் ஜெமினி இரண்டு நிறுவனங்களும் நார்வே போஸ்ட்டிடமிருந்து(Norway Post) இந்திய ரூபாய் 233 கோடிக்கான திட்டத்தை(project) பெற்றுள்ளன.
  • ஆன்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஐஓஎஸ்க்கு போட்டியாக விரைவில் பல புதிய மொபைல் இயங்குதளங்கள்(Mobile OS) வரவுள்ளன.  ஒன்று நாம் எல்லோரும் முன்பே அறிந்த(?) பயர்பாக்சு மொபைல் ஒஎஸ், லின்க்சை அடிப்படையாகக் கொண்டு உபுண்டு(ubuntu) தயாரித்த நிறுவனமான கனோனிக்கல் உபுண்டு மொபைல் ஒஎஸ்-ஐ வருட இறுதியில் வழங்கவுள்ளது.  இதை தவிர்த்து லினக்சை அடிப்படையாக வைத்து டைசன்(Tizen), செயில்பிஷ்(Sailfish) போன்று பல நகர்பேசி இயங்குதளங்கள் வரவுள்ளன. 
  • இந்தியாவில் கூகுள் நெக்சஸ்(Google Nexus) விற்பனைக்கு வருகிறது(ரூ. 15999), கூகுளின் பிளே ஸ்டோரிலிருந்து வாங்கலாம்.
  • 'குறைந்த விலை ஆகாஷ் டேப்ளட்(Aakash Tablet) திட்டம் நிறுத்தப்படலாம்' வதந்தி என மனிதவளத்துறை அமைச்சர் திரு பள்ளம் ராஜூ மறுப்பு
  • எச்பி(HP) நிறுவனம் கண்ணாடி அணியாமல் காணும் வகையிலான நகர்பேசி முப்பரிமாணத்(3D) (காட்சித்)திரையை உருவாக்கியுள்ளது.
  • ஜக்ஸ்டர் பன்னாட்டு நிறுவனம்(Jaxtr Inc.,) ஒரு பன்னாட்டு சிம் கார்டை(Global SIM card) உருவாக்கியுள்ளது.  இதன் மூலம் எந்த நாட்டிலிருந்தும், எந்த நாட்டிற்கும் தொலைபேசலாம், குறுஞ்செய்தி அனுப்பலாம், இணைய இணைப்பையும் பெறலாம்.  எல்லா பன்னாடு விமானநிலையங்களிலும் இந்த சிம் கார்டை வாங்கலாம் அல்லது இணையத்தில் ஆர்டர் செய்யலாம்.    
    • குறிப்பு: இணையத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்திய ஹாட்மெயில்(Hotmail) உருவாக்குனரான இந்தியர் சபீர்பாட்டியா, யோகேஷ் படேலுடன் தற்போது ஜக்ஸ்டர் நிறுவனத்தை உருவாக்கியுள்ளார்.
  • லினக்சு இயங்குதள பணி(மேடை)சூழல்களில்(Desktop Environment) ஒன்றான கேடிஇ(KDE) அதிர்ஷ்டவசமாக ஒரு மிகப்பெரிய நாசத்திலிருந்து தப்பித்துள்ளது.  கேடிஇ அதன் மூலநிரல் களஞ்சியத்தில(source code repository) ஏற்பட்ட ஒரு சிறு பிழையின் காரணமாக அதன் ஒட்டுமொத்த மூலநிரல்களையும் இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது,  அதிர்ஷ்டவசமாக அதிலிருந்து தப்பித்தது.
  • சில நாட்களுக்கு முன்பு கூகுள் தனது இந்தியப்பகுதியின் கூகுள் மேப்ஸை மேம்படுத்தும் விதமாக, கூகுள் பயனர்களை பங்களிக்கக்கோரி ஒரு காணொளிப்படத்தின் மூலம் பரப்புரை நிகழ்த்தியது(Google Mapathon 2013).
    காணொளியைக் காண இங்கே ->
    இதனால் இந்தியாவின் ஒவ்வொரு சதுர மீட்டரைப்பற்றிய முழுத்தகவல்களும் விபரமும் கூகுளின் அமெரிக்க தரவுதளத்திற்கு செல்லும், இந்தியாவின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட இந்த விஷயத்திற்கு இந்திய அரசின் அனுமதி பெறாமல் எப்படி பரப்பரை நிகழ்த்தினார்கள் என பிஜேபி(BJP) எம்பி(MP) தருண்விஜய் கேட்டுள்ளார்.

  • ரெட்பஸ்(Redbus) நிறுவனர் Phanindra Sama உள்ளிட்ட பெங்களூரைச் சேர்ந்த 7 பேர் MIT புதுமைபடைப்போராக தேர்ந்தெடுப்பு.
  • கூகிளின் கூகுள் கிளாசுக்கு பல்வேறு தரப்புகளிலும் இருந்து தனிமனித அந்தரங்கத்திற்க்கு ஊறு விளைவிக்கும் என்று  தடை செய்யக்கோரி எதிர்ப்பு வலுக்கிறது.
  • கூகுளுக்கும், நோக்கியாவுக்கும் இடையே காணொளி encoding-க்கான VM8 தொழில்நுட்பத்திற்கான பிரச்சனை வலுக்கிறது.

மேலும் படிக்க:
இதற்கு முந்தைய வார தொழில்நுட்ப செய்திகளைப் படிக்க ->
இதற்கு அடுத்த வார தொழில்நுட்ப செய்திகளை படிக்க ->  இங்கே சொடுக்கவும்