Showing posts with label thamizh. Show all posts
Showing posts with label thamizh. Show all posts

Monday, December 16, 2013

மினி கதைகள்-2 - பேங்க் லோன்

"டேய், பிரகாஷ் எப்படிடா இருக்க...? தொப்பலாம் போட்டுடிச்சி... ஹூம் கல்யாணம் பண்ணிட்டியாடா?" ஏழு வருட இடைவெளிக்குப் பின்னால் நண்பனைக் கண்ட சந்தோஷத்தில் கண்ணடித்து கேட்டான் நாகராஜன்.

"மாப்ள.. நல்லாருக்கேன் டா..., நீ எப்டி இருக்க?" என்றான் பிரகாஷ் கையிலருந்த பைலை பின்னால் மறைத்தபடியே..

"அப்றம், பேங்குக்கு வந்திருக்க..."

"ஆமான்டா ஒரு லோன் விஷயமா வந்தேன்.."

"நான் தான்.." என்ற நாகராஜன் முடிப்பதற்குள்..

பிரகாஷ் தொடர்ந்து.. " என்னடா பேங்கு இது... ஒரு A.C இல்ல.. எப்டி sweat ஆகுது பாரு..  சென்னைல எங்க ஆபிஸ்ல பாத்ரூம் கூட A.C"

"விடுடா இது என்ன சென்னையா? இல்ல உன் ஆபீஸா? நம்மூருதான... ஆமா நீ ஏன் இப்டி feel-பண்ற... நாமலாம் ஸ்கூல் கிரவுண்டல லீவுநாள்ல மதியமானா 12, 1 மணினு கூட பாக்காம வேகாத வெயில்ல.." என்று நாகராஜன் முடிப்பதற்குள்,

"டேய் நாகு, உன் கலர் பாரு என் கலர் பாரு,  இப்ப நான் போட்ருக்க சட்ட arrow brand.. 1600 Rupees தெரியுமா? இதுல (இவன் வேற.. )இந்த sweating வேற.."

நாகராஜன், "சரி விடு அது என்ன கைல? Form 16.. Gross Total Inco.."

"டேய் அதுலாம் உனக்கு புரியாது... நீ என்ன பணம் எடுக்க வந்தியா.. ? உனக்கு எப்படியும் ஏடிஎம் கார்டு இருக்காது... செல்லான் ஃபில் பண்ணிட்டு போய் க்யூல நில்லு...
ஆமா, ஸ்கூல் அப்புறம் நான் B.E முடிச்சிட்டு சென்னைல Software Engineer ஆயிட்டேன்.. நீ என்ன BA தமிழா? B.Sc பாட்டனியா? இல்ல +2 வோட நின்டியா?" நக்கலாக கேட்டான் பிரகாஷ்.

சிரித்துக்கொண்ட நாகராஜன், "ஏன்டா Enginnering படிச்சு Software Engineer ஆனவன் மட்டுந்தான் மனுசனா? இல்ல BA தமிழ், பாட்டனிலாம் படிப்பே இல்லேங்கறியா...?"

"அப்டி இல்லடா... நான் என்ன சொல்ல.." என்று பிரகாஷ் முடிப்பற்குள்.

"சரிடா வீட்ல எல்லாரையும் விசாரிச்சதா சொல்லு, வரேன்" என்று சொல்லிவிட்டு நாகராஜன் பேங்குக்குள் நுழைந்தான்.

AC இல்லாத வங்கியையும், வியர்வையையும் சில நிமிடம் சபித்துவிட்டு, தன் Arrow brand சட்டையை சரிசெய்து கொண்டு பிரகாஷும் உள்ளே நுழைந்தான். காலியாக இருந்த "May I Help You " டெஸ்கில் சிறிது நேரத்தில் ஒரு நடுத்தர வயது பெண்மணி வந்து உட்கார்ந்தாள்.

"Excuse me, I am Prakash.  I want to meet Manager regarding Home Loan"

"Yes, Please.  ஆங்.. மேனேஜர் இப்ப தான் வந்தாரு, நீங்க மீட் பண்ணலாம் போங்க.... First right then stright" விரலில் அபிநயம் பிடித்தாள்.

"டொக் டொக்.. May I come in sir?"

"Yes, come in.." கதவு திறுந்து உள்ளே நுழைந்தான் பிரகாஷ்...

டேபிள் மேலிருந்த போர்டு
" நாகராஜன் M.Com.,
  மேலாளர்.  "  என்று வரவேற்றது.



Wednesday, August 21, 2013

எங்கள் சென்னை.... ஆகஸ்ட் 22-2013 -- 374 வது சென்னை தினம் இன்று


 எங்கள் சென்னை....

Chennai montage
Image By Nashcode (Transfered by RaviC/Original uploaded by Nashcode) [CC-BY-3.0], via Wikimedia Commons

வாழ்வு வளம்பெற
  வையம் உயர்வுற
ஏற்றத் தாழ்விலா
  சமான சமூகமாய்
பழமையும் மாறிவிடாமல்
  புதுமையும் விட்டுவிடாமல்
பொலிவுடன் விளங்கும்
   எங்கள் சென்னை

வைணவ வைதீகர்க்கு
   வல்லிக்கேணி பார்த்தனும்
சைவ சமயத்தோர்க்கு
   மயிலை கபாலீசனும்
கிறித்தவ அன்பர்க்கு
    சாந்தோமும், பரங்கிமலையும்
முசுலீம் நண்பர்களுக்கு
    ஆயிரம் விளக்குமாய்
பொலிவுடன் விளங்கும்
     எங்கள் சென்னை.

வண்டலூரில் வன விலங்கும்
  பள்ளிக்கரணையில் பன்னாட்டு பறவைகளும்
முட்டுக்காட்டில் முதலைப் பண்ணையும்
  வேடந்தாங்களில் வெளிநாட்டுப் பறவையுமாக
இறையும் இயற்கையும்
  ஒன்றெனப் போற்றிப்
பொலிவுடன் விலங்கும்
   எங்கள் சென்னை.

பழையோர்க்கு மயிலையில்
 அறுபத்து மூவர் உலா
புதியோர்க்கு தி.நகரில்
  ஆடைவாங்க வீதி உலா
பழையோர்க்கு கன்னி மாறா
 கன்னிமாரா நூலகம்
புதியோர்க்கு எண்ணில் அடங்கா
  நூலோடு அண்ணா நூலகமென்று
பொலிவுடன் விளங்கும்
  எங்கள் சென்னை.

கற்க ஐஐடி
  சுற்ற தி.நகர்
கலைக்கு கலாக்ஷேத்திரா
 கானத்திற்கு சங்கீத அகாடமி
காண கோளரங்கம்
  கால்நனைக்க மெரினாவென
இன்னும் இன்னும்
 எத்தனையோ பெற்று
பொலிவுடன் விளங்கும்
  எங்கள் சென்னை.

வாழ்வு வளம்பெற
  வையம் உயர்வுற
ஏற்றத் தாழ்விலா
  சமான சமூகமாய்
பழமையும் மாறிவிடாமல்
  புதுமையும் விட்டுவிடாமல்
பொலிவுடன் விளங்கும்
   எங்கள் சென்னை.