Showing posts with label android. Show all posts
Showing posts with label android. Show all posts

Wednesday, September 25, 2013

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை(15-09-13 முதல் 21-09-13வரை)

ஆன்ட்ராய்டு நுண்ணறிபேசிகளில் பிளாக்பெரி மெசஞ்சர் (BlackBerry Messenger) செயலி(App)-ஐ செப்டம்பர் 20 தரவுள்ளதாக சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்னணி மின்வெளி பாதுகாப்பியல் நிபுணர்(Cyber security expert) ஒருவர், முன்னணி பங்குச்சந்தையான நாஸ்டாகின்(Nasdaq) இணையதளத்தை hack செய்ய தனக்கு 10 நிமிடங்கள் மட்டுமே ஆனதாக தெரிவித்துள்ளார்.

கூகுள் நிறுவனம் நுண்ணறிபேசிகளுக்கான செயலிகளை உருவாக்கும் நிறுவனமான Bump -ஐ கையகப்படுத்தியுள்ளது.  இந்நிறுவனம் நுண்ணறிபேசிகளை ஒன்றோடொன்று அசைப்பதன்மூலம் தொடர்பிற்கு கொண்டுவந்து தகவல்களைப் பரிமாறிக்கொள்ள உதவும் ஒரு செயலியை Bump(ப(அ)ம்ப்) என்கிற பெயரில் வெளியிட்டுள்ளது.  Bump செயலியை கூகுளின் பிளே ஸ்டோரிலிருந்து பெற இங்கே சொடுக்கவும்.  Bump பயன்பாடு குறித்தான யூடியூப் காணொளி காட்சி



மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தனது கேன்வாஸ் வரிசை குளிகைக்கணினியின் முதலாவதான கேன்வாஸ் குளிகைக் கணினியை(Canvas Tab P650) இந்திய ரூபாய் சுமார் 16,500 விலையில் வெளியிட்டுள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது இணைய உலாவியான இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் இருந்த பாதுகாப்பு ஓட்டைக்கான(இது கொந்தர்களால்(hacker) கண்டறியப்பட்டு தவறான வழிகளில் பயன்படுத்தப்பட்டது) ஒரு புதிய சரிசெய்யும் நிரல் துண்டை(patch) வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய மென்பொருள் சேவை ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸ் நிறுவனம் தனது வங்கிச்சேவை தீர்வு மென்பொருளான ஃபின்னாக்கிளின் புதிய பதிப்பை (Finacle 11E) வெளியிட்டுள்ளது.  இதன்மூலம் பன்னாட்டு வங்கிச்சேவை மென்பொருள் வணிகத்தில் முக்கிய இடத்தை பிடிக்குவுள்ளதாக தெரிவித்துள்ளது.

முன்னணி கேமரா தயாரிப்பு நிறுவனமான நிகான் நீர் புகாத ஒரு புதிய AW1 கேமராவை அறிமுகப்படுத்தியுள்ளது.  இது நீருக்குள் 15 மீட்டர் ஆழம் வரையான அழுத்தத்தை தாங்கி நீர் புகாவண்ணம் தயாரிக்கப்பட்டுள்ளது.  மேலும் 2 மீட்டர் உயரத்திலிருந்து விழுந்தாலும் அதிர்வை தாங்கிக்கொள்ளும் வகையிலும் தயாரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கூகுளின் யூடியுப் இணைய இணைப்பின்றி காணொளிக்காட்சிகளை காணும் வசதியை அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.  மேலும், இந்த வசதி 48 மணிநேரம் பார்க்கக்கூடிய அளவிற்கு(இணைய இணைப்பின்றி) இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

மைன்ட்ரீ நிறுவனம் காணொளி கடுங்கண்காணிப்பு(Video Surveillance) மென்பொருள் ஒன்றை வெளியிட்டுள்ளது.

கூகுள் நிறுவனம் ஆன்ட்ராய்டு நுண்ணறிபேசிகளுக்கென்று பிரத்தியேகமாக ஒரு தேடல் இடைமுகப்பை(Interface) உருவாக்க திட்டமிட்டுள்ளது.

சிக்ஸ்த்சென்ஸ் என்கிற மென்பொருள் உருவாக்கத்தினால் உலகளவில் மிகப்பரவலாக அறியப்பட்ட பிரணவ் மிஸ்ட்ரி தற்போது சாம்சங் அமெரிக்கா நிறுவனத்தின் ஆராய்ச்சிப் பிரிவில் பணியாற்றிவருகிறார்.  மேலும், சாம்சங் நிறுவனத்தின் நுண்ணறி கைக்கடிகாரமான சாம்சங் கியர்(Samsung Gear) தயாரிப்பிலும் தற்போது பங்களித்து வருகிறார்.


தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை முந்தைய வாரப் பதிவு

Thursday, September 12, 2013

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை(01-09-13 முதல் 07-09-13வரை)


இந்திய தகவல் தொழில்நுட்பத்துறையின் முக்கியப் பெரு நிறுவனமான விப்ரோ, இளங்கலை மாணவர்கள் தங்கள் தொடர்பு மற்றும் மென் திறமைகளை(Communications & Soft skills) வளர்த்துக்கொள்ள ஒரு திட்டத்தினை உருவாக்கியுள்ளது.  விப்ரோ ஒருங்கிணைந்த திறமை வளர்ப்பு திட்டம்(WISEPro - Wipro Integrated Skill Enhancement Programme) எனப்பெயரிடப்பட்டுள்ள இத்திட்டம் ஒரு நாடு தழுவிய திட்டம் ஆகும்.

வங்கியிடம் இருந்து வந்த ஈ-மெயில் போன்ற பொய்யான/போலி மெயில்களுக்கு 30% பேர் பலியாவதாக எதிர்-நச்சுநிரல் தயாரிப்பு நிறுவனமான காஸ்பர்ஸ்கை(Kaspersky) கருத்துக்கணிப்பு தெரிவிட்டுதுள்ளது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முன்னணி(ஓரு காலத்தில் என்று கூட சொல்லலாம் :P )கைப்பேசி தயாரிப்பு நிறுவனமான நோக்கியாவை கையகப்படுத்தியுள்ளது.

99.9% சதவீத மால்வேர்(malware)கள் கூகுளின் ஆண்ட்ராய்டு நுண்ணறிபேசி இயங்குதளத்தை குறிவைத்து தயாரிக்கப்படுவதாக காஸ்பர்ஸ்கை தெரிவித்துள்ளது.

சாம்சங் நிறுவனம் அதன் நுண்ணறி கடிகாரமான கேலக்ஸி கியரில் (Galaxy Gear) அனைத்து முக்கிய இந்திய மொழிகளையும் சேர்க்க இருப்பதாக அறிவித்துள்ளது.

நுண்ணறி அலைபேசிச் சந்தையை அடுத்து அனைத்து முன்னணி நிறுவனங்களும் தற்போது நுண்ணறி கைக்கடிகாரம் தயாரிப்பில் முழுமூச்சாக இறங்கியுள்ளன.  அந்த வரிசையில் குவால்காம்(Qualcomm) நிறுவனம்  டாகு(Toq) என்ற பெயரில் ஒரு கடிகாரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

சோனி இந்தியா நிறுவனம் அதன் அலைபேசி மற்றும் புகைப்படக் கருவிகளின் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இந்திய உருவாக்குனர்களுக்காக(developers) ஒரு தனிப்பட்ட இணைய வலைவாசலை(web portal) உருவாக்கியுள்ளது.

சாம்சங் நிறுவனம் 3.25 லட்சம் விலையில் அல்ட்ரா-எச்டி(Ultra-HD) தொலைக்காட்சிப் பெட்டிகளை வெளியிட்டுள்ளது.

கூகுள் குரோம் உலாவியில் செயல்படும் செயலிகள் [ஆப்கள்(Apps)] இனி மேசைக்கணினியின் பணிமேடையிலும் செயல்படும் வகையில் எழுதப்படவுள்ளது. லைப்ஹேக்கர் இணையதளததில் இது குறித்தப் பதிவு

ஆன்ட்ராய்டு இயங்குதளத்தின் புதிய பதிப்பு 4.4 கிட்கேட் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

எச்டிசி நிறுவனம் இந்திய ரூபாய் 52,428 விலையில் பட்டர்பிளை S நுண்ணறி அலைபேசியை அறிமுகப்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் சமூக வலைதளங்களில் நுண்ணறிபேசி மூலம் பங்கெடுக்கும் பயனர்களின் எண்ணிக்கையில் முதலிடத்தில் உள்ளதாக சமூக வலைதள கணக்கெடுப்பு நிறுவனம் ஒன்று கூறியுள்ளது.

பிளாக்பெரி இந்தியாவின் புதிய தலைவராக சுனில் லால்வனி பொறுப்பேற்கிறார்.

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை முந்தைய வாரப் பதிவு 

Monday, April 29, 2013

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை(21-04-13 முதல் 27-04-13வரை)

கூகுளின் street view சேவை தற்போது மேலும் 50 உலக நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இல்லியனாஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் புதிய லித்தியம்-அயன் பேட்டரி தொழில்நுட்பம் ஒன்றை கண்டறிந்துள்ளனர்.  இத்தொழில்நுட்படத்தின் மூலம் அதிக மின்திறனை குறைந்த அளவுடைய மின்கலத்தில் சேமிக்க முடியும் என்றும், இது மிக விரைவாக மின்னேற்றம்(charge) ஆகிவிடுவதோடு, நீண்ட நேரத்திற்கு அதைத் தேக்கி வைத்திருக்கும் திறனுடையதாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அமேசான்.காம் இந்த வருட கடைசியில் ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் TV-க்குப் போட்டியாக ஒரு செட்-டாப் பாக்சை அறிமுகப்படுத்தவுள்ளது.  இது இணைய்யிதிலிருந்து நிகழ்படம்/கணொளியை ஓடை(Streaming) தொழில்நுட்ப முறையில் காட்டும்.

ஆப்பிள் நிறுவனம் அதன் வருடாந்திர் உலகலாவிய உருவாக்குனர்(Developers) கலந்தாய்வு/மாநாட்டை ஜூன் மாதத்தில் சான் பிரான்சிஸ்கோ நகரில் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

பார்தி ஏர்டெலும், மைக்ரோசாஃப்டும் கூட்டாக இணைந்து அதன் வாடிக்கையாளர்களுக்கு எக்ஸ்பாக்ஸ்(Xbox) விளையாட்டு சாதனம் மற்றும் ஏர்டெல்லின் அதிவேக இணைய இணைப்புக்கான சாதனத்தை வாக்குவதில் சலுகை அறிவித்துள்ளது.  இதன்முலம் வாடிக்கையாளர்கள் சுமார் இந்திய ரூபாய் 15000 வரை மிச்சப்படுத்தலாம் எனத் தெரிவித்துள்ளது.

இந்திய மென்பொருள் நிறுவனமான டெக் மகிந்திரா(Tech Mahindra) ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த டைப் அப்ரூவல் லேப்(Type Approval Lab) எனும் நிறுவனத்தை கையகப்படுத்தியுள்ளது. 

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மொபைல்களில் சாம்சங் நிறுவனம் நோக்கியாவைப் பின்னுக்குத் தள்ளி, முதலிடம் பிடித்துள்ளதாக ஜிஎஃப்கே-நீல்சன்(Gfk-Nielsen) கருத்துக்கணிப்பு/மதிப்பீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்டெல் நிறுவனம் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தைக் கொண்டு இயங்கும் குறைந்த விலை மடிக்கணினிகளை உருவாக்கி வருவதாகவும் இவற்றின் விலை சுமார் $200-ஆக இருக்கும்(இந்திய ரூபாயில் சுமார் 10,800) என்றும் இருக்கும் என்றும் அந்நிறுவனத்தின் சிஇஓ பால் ஒடெல்லினி(Paul Otellini) தெரிவித்துள்ளார்.

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி S4 தயாரிப்பு விற்பனைக்கு ஈடு கொடுக்க முடியாமல் பற்றாக்குறையுடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

சாம்சங், ஆப்பிள் நிறுவனத்திற்குப் பிறகு அதிக அளவில் மொபைல் போன்களை உற்பத்தி, ஏற்றுமதி செய்யும் நிறுவனமான ஹூவாய்(Huawei) தன்னுடைய வணிக அடையாளத்தின்(Brand Image) பரவலை அதிகரிக்கும் பொருட்டு சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் செலவிட உள்ளதாகத் தெரிகிறது.

யுனிநார் நிறுவனம் தனது சிம் கார்டுகள், ரீசார்ஜ் வவுச்சர்களை ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுனர்கள், பால் பாக்கேட், செய்தித்தாள் போடுவோர் மூலமாக விற்பனை செய்யும் ஒரு புதிய யோசனை வைத்திருப்பதாகக் கூறியுள்ளது.

சாம்சங் தனது கேலக்ஸி S4 நுண்ணறிபேசியை உற்பத்தி செய்யும் பகுதியைத் இந்தியாவிற்குள் அமைக்கவிருப்பதாகக் கூறியுள்ளது.

மைக்ரோசாப்ட் தனது "Blue screen of death" பிரச்சனையை நிவர்த்தி செய்யும் நிரல் ஒட்டினை(Source code patch) மீண்டும் வெளியிட்டுள்ளது. 

ஜாவா நிரல்மொழியின் 8வது பதிப்பு வெளிவருவது மீண்டும் தள்ளிப்போடப் பட்டுள்ளது.  தற்போதைக்கு இப்புதியப் பதிப்பு 2014-ம் ஆண்டு வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:
இதற்கு முந்தைய வார தொழில்நுட்ப செய்திகளைப் படிக்க -> இங்கே சொடுக்கவும்
இதற்கு அடுத்த வார தொழில்நுட்ப செய்திகளை படிக்க ->

Tuesday, April 23, 2013

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை(14-04-13 முதல் 20-04-13வரை)

நோக்கியா நிறுவனம் அதன் லூமியா 720 வகை கைப்பேசிகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது, விலை ரூபாய் 18,999 ஆக இருக்கும்.

ஆப்பிள் மற்றும் சாம்சங்கைத் தொடர்ந்து தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனமும் ஸ்மார்ட் வாட்ச் தயாரிப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

ஆஷ்டன் விருது வென்ற இந்திய விஞ்ஞானியான சன்டிபாடா கோன்சௌத்ரி, மத்திய அரசிடம் சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும்(சிறிய சோலார் பேனல்களின் உதவியால்) சட்டையை உருவாக்குவதற்கான ஆராய்ச்சி முன்மொழிவைக்(Research proposal) கொடுத்துள்ளார்.  இச்சட்டை மூலமாக 400 வாட் மின்சாரம் வரை தயாரிக்கலாம் என்று கூறியுள்ளார்.

1,20,000 ஆண்ட்ராய்டு செல்பேசிகளுக்கான இலவச App-களில் பாதுகாப்பு வழு இருப்பதாக கலிபோர்னியா பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கண்டறிந்துள்ளார்.  இந்த இலவச App-களை கிட்டதட்ட 50 கோடி பயனர்கள் பயன்படுத்துகிறார்களாம்.

யாகூ நிறுவனம் புதிதாக வானிலையை கூறும் ஒரு App-ஐ வெளியிட்டுள்ளது.  மேலும், அதன் மின்அஞ்சல் App-ஐயும் மேம்படுத்தியுள்ளது.

வாட்ஸ்ஆப்(WhatsApp), க்கிக்(kik) போன்று ஒரு தகவல்/செய்தி பரிமாறும் App-ஐ just.me நிறுவனம் வெளியிட்டுள்ளது.  இதன் முக்கிய சிறப்பு மற்ற App-கள் போலில்லாமல், இதில் செய்தி அனுப்புபவரிடம் மட்டும் இந்த App இருந்தால் போதுமானது, இருவரிடமும் இருந்தேயாக வேண்டும் என்கிற அவசிமில்லை.

ஃபேஸ்புக் ஐஓஎஸ்-க்கான(iOS) புதிய SDK-ஐ(Software Development Kit) வெளியிட்டுள்ளது.  புகுபதிகை(login) வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது, உள்ளார்ந்த வரைபட(graph) வசதி சேர்க்கப்பட்டுள்ளது.  இதனால் ஐஓஎஸ்-க்கான ஃபேஸ்புக் App உருவாக்கும் நிரலர்கள் எளிதாக செய்து முடிக்கலாம் என கூறப்படுகிறது.

இந்தியாவைச் சேர்ந்த சுமித் தாகர் என்பவர் பார்வைத்திறன் இல்லாதோர்/குறைபாடுடையோர்களுக்கான ஒரு நுண்ணறிபேசி(Smartphone)யை உருவாக்கியுள்ளார்.  இதனுடைய தொடுதிரை இதற்கு வரும் செய்திகளை பிரெய்லி முறையில் படிக்கும் விதமாக திரையை மேடு பள்ளம் கொண்டதாக(தொட்டு உணரும் பிரெய்லி எழுத்துருக்களாக) மாற்றிவிடும் புதிய தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் சிரி(siri) பேச்சு தொழில்நுட்பம், ஐபோன் பயனர்கள் அதற்கு அளிக்கும் பேச்சுக் கட்டளைகளை(Voice Commands) 2 வருடம் வரை பதித்து/சேமித்து வைத்துக்கொள்ளும் என அந்நிறவனத்தின் தகவல் தொடர்பாளர் கூறியுள்ளார்.  சேமிக்கப்படும் இத்தகவல்கள் சிரி தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்காக மட்டுமே என கூறப்பட்டாலும், பயனர்களிடையே இது சிறு சலனத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஃபேஸ்புக் அதன் App-ல் இருந்து உங்கள் ஃபேஸ்புக் நண்பர்களுக்கு இலவசமாக அ(தொ)லைபேசும் வசதியை தந்துள்ளது.  தற்போதைக்கு இவ்வசதி அமெரிக்கா, கனடாவில் மட்டும் நடைமுறையில் உள்ளது.  விரைவில் மற்ற பகுதிகளுக்கும் அறிமுகப்படுத்தப்படும் என நம்பப்படுகிறது.

இந்தியாவில் சாம்சங் S4 ஏப்ரல் 26 முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.


மேலும் படிக்க:
இதற்கு முந்தைய வார தொழில்நுட்ப செய்திகளைப் படிக்க -> இங்கே சொடுக்கவும்
இதற்கு அடுத்த வார தொழில்நுட்ப செய்திகளை படிக்க -> இங்கே சொடுக்கவும்

Wednesday, April 17, 2013

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை(07-04-13 முதல் 13-04-13வரை)

மொபைல் உலகில் மிகப்பிரபலமான வாட்ஸ்ஆப்(WhatsApp) செய்திப் பரிமாற்றியை(Messanger app) சுமார் 1 பில்லியன் அமெரிக்க டாலருக்கு(100 கோடி * 55 இந்திய ரூபாய் மதிப்பிற்கு, அதாவது 5500 கோடி ரூபாய்) கையகப்படுத்த கூகுள் முயன்றுவருவதாக தகவல்கள் கசிகின்றன.  உங்கள் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனுக்கு வாட்ஸ்ஆப்பை பதிவிறக்க

இந்தியாவின் மிகப்பெரிய தகவல்தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ்(TCS) பிரான்ஸைச் சேர்ந்த அல்டி(Alti) என்கிற தகவல்தொழில்நுட்ப நிறுவனத்தை 530 கோடி இந்திய ரூபாய்க்கு கையகப்படுத்த உள்ளது.

சாம்சங் 20 புதிய ஸ்மார்ட் டிவிக்களை இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளது.

பிஎஸ்என்எல்(BSNL) தனது 4G இணைய சேவையை இந்தூரில் தொடங்கவுள்ளது.

லிங்க்டுஇன் நிறுவனம் 90 மில்லியன் அமெரிக்க டாலருக்கு கைபேசிகளில் பயன்படும் செயிலிகளை உருவாக்கும் மின்படிப்பான்(E-Reader) நிறுவனமான பல்ஸ்-ஐ(Pulse) கையகப்படுத்தவுள்ளது.

டிவிட்டர் இந்த வார இறுதியில் ஒரு இசை அப்ளிகேசனை வெளியிட உள்ளதாக தெரிகிறது.

கூகுளின் நிரலெழுதும் போட்டியான கூகுள் கோட் ஜாம் 2013(Google Code Jam-2013) ஏப்ரல் 12 அன்று துவங்கியுள்ளது.  பரிசுத்தோகை 15000 அமெரிக்க டாலர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாஸ்காம் (National Association of Software and Services Companies (NASSCOM)) 25 லட்சத்திலிருந்து 2 கோடி ரூபாய் வரை 500 புதிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு(Tech Start-ups) ஏஞ்சல் இன்வெஸ்டார்கள்(Angel investors) மூலமாக நிதியுதவி அளிக்கத் திட்டமிட்டுள்ளது.  மேலதிக தகவல்களுக்கு பார்க்கவும் www.10000startups.com.

மைக்ரோசாப்ட் நிறுவனம் கூகுளின் நெக்ஸஸ், ஆப்பிளின் ஐபாட் மினி போன்றவற்றிற்குப் போட்டியாக சிறிய திரையுடைய(7 இன்ச்) சர்பேஸ் குளிகைக் கணிணிகளை உருவாக்க திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

4 கார்னகி மெல்லன் பல்கலைக்கழக மாணவர்களால் தொடங்கப்பட்ட பேடேங்கோ(PayTango) எனும் நிறுவனம், பண அட்டைகளான கடன் அட்டை(Credit Card), டெபிட் கார்டுகளுக்குப் பதிலாக கைரேகை மூலம் பணப்பரிமாற்றம், தொகை, கட்டணம் செலுத்தும் முறை ஒன்றை உருவாக்கியுள்ளது.  இம்முறை ஏற்றுக்கொள்ளப்பட்டால் விரைவில் நடைமுறைக்கு வந்துவிடும்.

மேலும் படிக்க:
இதற்கு முந்தைய வார தொழில்நுட்ப செய்திகளைப் படிக்க -> இங்கே சொடுக்கவும்
இதற்கு அடுத்த வார தொழில்நுட்ப செய்திகளை படிக்க ->  இங்கே சொடுக்கவும்