Showing posts with label கடற்கரய். Show all posts
Showing posts with label கடற்கரய். Show all posts

Wednesday, September 3, 2014

எழுத்தாளுமைகள், நீயா நானா, கல்விக்கூடங்கள் சில சிந்தனைகள்.


மோகன்
நீயா நானா நான் விரும்பிப் பார்க்கும் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒன்று(சில கருத்து முரண்களும், எண்ண வேறுபாடுகளும், தேவையற்ற வணிகநோக்கு தலைப்புகளோடு வேறுபாடுகள் இருந்தாலும் கூட).  நல்ல தகவல்களோடும் கருத்துச்செறிவோடும் இதுபோன்ற ஒரு நிகழ்ச்சி வேறந்த பிராந்திய மொழிகளிலும் (இந்தி, English-ஐ விட்டுவிடுங்கள் அங்கே அர்ணாபும், ரெபக்காவும் 'கத்தி' சண்டை போடுவார்கள், கையில் ஒரு xerox பேப்பரோடு) நடந்துவருவதாக எனக்குத்தெரியவில்லை.  நீயா நானாவின் தகவல்கள் எந்த அளவு மக்களைப் போய் சேர்ந்ததோ எனக்குத் தெரியாது ஆனால், நீயா நானாவின் மிகப்பெரிய சமூக நோக்குச் செயல்பாடு என்று நான் கருதுவது அதன் மூலம் தமிழ்கூறும் நல்லுலகுக்கு பரவலாகச் சென்று சேர்க்கப்பட்ட ஆளுமைகள் தான்.  தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கைகள் போன்று மிகப்பெரிய மக்கள் திரளை சென்றுசேரும் பெரு ஊடகங்கள் (mass media) தங்களின் அந்த சாதகத்தைப் பயன்படுத்தி நல்ல விஷயங்களை எல்லோரிடமும் கொண்டு சேர்த்தல் என்பது மிகவும் பாராட்டப்படவேண்டிய விஷயமாகும்.  அந்த வகையில் விஜய் தொலைக்காட்சி மற்றும் நீயாநானா குழுவினரின் பணி பாராட்டுகுரியது.

  விருத்தாசலத்தில் வசித்து வந்தாலும் விருத்தாசலத்தைச் அதன் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள் இமையத்தையோ, கண்மணி குணசேகரனையோ, கடற்கரயோ, ரத்தின புகழேந்தியையோ(இவர் இன்னும் நீயாநானாவில் வந்ததாக எனக்கு தெரியவில்லை) 98% சதவித விருத்தாசல மக்களுக்கே தெரியாது.  இவர்களைப் போன்ற ஆளுமைகளை குறிப்பாக எழுத்தாளுமைகளை அந்தந்த பகுதிகளில் இருக்கும் கல்விக்கூடங்கள்தான் மாணவர்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும்.  பெரும்பாலான பள்ளிகளும், கல்லூரிகளும் ஆண்டுவிழாக்கள் மட்டும் நடத்தி அதுவும் திரையிசைப் பாடல்களுக்கு ஆட்டம் மட்டும் போட்டு தங்கள் வருடாந்திர கல்விச்சேவையை முடித்துக்கொள்கின்றன.  இதைத்தாண்டி பேச்சரங்கங்கள், விவாத வாய்ப்புகள் போன்றவற்றை கல்விக்கூடங்கள் குறைந்த பட்சம் கல்லூரிகள் மட்டுமாவது இவர்கள் தலைமையில் நடத்தவேண்டும்.   இவர்கள் போன்ற சிந்தனாவாதிகளுடன் சேர்ந்து பழகிப் பேசும் வாய்ப்புகள் மாணவர்களுக்குப் பற்பல திறப்புகளையும், சிந்தனைகளையும் ஏற்படுத்தும் கூடவே அவர்களுக்கு புதிய வாய்ப்புகளையும் அறிமுகங்களையும் உண்டாக்கும்.  அதனால் உண்டாகப்போகும் சமூக விளைவுகள் இன்று தெரியாது ஆனால் அவை எல்லாமே நம் சமுகத்தை, குறைந்தபட்சம் அந்தந்த வட்டார சமூகத்தையாவது சில பல அடிகள் முன்னேற்றும் என்பது உண்மை.

நீயா நானா மக்களிடம் கொண்டு சேர்த்த மிக முக்கியமான ஆளுமைகளாக நான் கருதும் சிலர்.
மோகன்
கடற்கரய்
அபிலாஷ்  (மத்திய அரசின் யுவபுரஸ்கார் விருது வாங்கியவர்)
இமையம்
கண்மணி குணசேகரன் (மனுசன் ஜெயமோகன், நாஞ்சில் நாடன் கூடலாம் நல்ல தொடர்புள இருக்காரு, இவரோட nativity speech ரொம்ப பிரசித்தம் youtube பாருங்க)
இளங்கோ கல்லானை
அராத்து
முத்துகிருஷ்ணன்
ஆறுமுகத் தமிழன்
செந்தில்நாதன்
ஷாலினி
போன்றோர்.   இதிலும் பெரிய பூச்சுகள் மற்றும் மெனக்கெடல்கள் இல்லாமல் பேசும் மோகன் மற்றும் அபிலாஷ் ஆகியோரின் பேச்சானது  நிறைய தகவல்களை தந்தவிட்டு நம் எண்ணத்தையே கூட சில சமயங்கள் மாற்றிவிடும்.

வணிக நோக்கு சார்ந்த அல்லது பளு குறைந்த(light weighted) மற்றும் தரவுகள் அதிகம் தேவைப்படாத தலைப்புகளில் இரண்டு பக்கத்திலும் சாமானியர்களை வைத்துக்கொண்டு, இரண்டு அல்லது மூன்று சிறப்பு விருந்தினர்களையும் பேச வைத்து நிகழ்ச்சியை நடத்துகிறார்கள்.  ஆனால் சிற்சில நீயாநானா நிகழ்ச்சிகளில் அதன் தலைப்பின் தன்மை காரணமாக(பொருளாதாரம், பண்பாடு, கலாச்சாரம் போன்ற ஆழ்ந்த புரிதல் மற்றும் தரவுகளை கோறும் தலைப்புகள்) இரண்டு தரப்புகளிலும் ஒரு கீழ் வரிசையை மட்டும் Intellectuals-ஐ வைத்துக்கொண்டே ஒரு முழு நிகழ்ச்சியையும் ஓட்டி விடுகிறார்கள்.  மீதமுள்ள 3 அ 4 வரிசைகளுக்கு ஆள் மட்டும் நிரப்பி அவ்வப்போது(மொத்த நிகழ்ச்சிக்கும் சேர்த்து ஒரு 10 நிமிடம்) மைக்-ஐ அவர்களிடம் கொடுத்து அல்லது விவாதத்தின் போது அவ்வப்போது ஒரு அழகான பெண் அல்லது ஆணை காட்டுவதற்காகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.  நல்லது நடந்தால் சரி.