Showing posts with label பிடித்த கவிதை. Show all posts
Showing posts with label பிடித்த கவிதை. Show all posts

Wednesday, March 27, 2013

கவிதைகள்...


ரகசிய ரகசியங்கள்..

என் பெற்றோரிடமும்
 சொல்லாத ரகசியங்களை
என் சகோதரியிடம்
 சொல்லியிருக்கிறேன்
என் சகோதரியிடமும்
 சொல்லாத ரகசியங்களை
என் நண்பர்களிடம்
 சொல்லியிருக்கிறேன்
என் நண்பர்களிடமும்
 சொல்லாத ரகசியங்களும்
என்னிடம் இன்னுமும்
 ரகசியமாயிருக்கிறது.
மிச்சமிருக்கும் இந்த
 ரகசிய ரகசியங்களை
நினைக்கும்போது சில
சிரிப்பையும், சில அழகையையும்
தருகின்றது..


 பிடித்த கவிதை எது?

கவிஞன் ஒவ்வொருவனும்
 கர்பிணிப் பெண்தான்
மனதில் கருவான கவிதை
 பிரசவம் ஆகும் வரை
அதிலும், தலைபிரசவம்
 அப்பப்பா சொல்லிமாளது
தான் கொண்டது பொய்
 கர்பமா என்று சந்தேகம்
கவிஞனுக்கே இருக்கும்
 தலைக்கவிதை பிரசவமாகும் வரை...
பெற்றெடுத்த தாய் போல்தான்
 கவிஞனும் அவன்
பெற்றக் கவிதைப்
 பிள்ளைகளில் பேதம் பார்ப்பதில்லை
தயவுசெய்து எந்த கவினிடமும்
 கேட்காதீர்கள் உங்கள்
கவிதையில் பிடித்தது எது என்று.