Wednesday, August 21, 2013

எங்கள் சென்னை.... ஆகஸ்ட் 22-2013 -- 374 வது சென்னை தினம் இன்று


 எங்கள் சென்னை....

Chennai montage
Image By Nashcode (Transfered by RaviC/Original uploaded by Nashcode) [CC-BY-3.0], via Wikimedia Commons

வாழ்வு வளம்பெற
  வையம் உயர்வுற
ஏற்றத் தாழ்விலா
  சமான சமூகமாய்
பழமையும் மாறிவிடாமல்
  புதுமையும் விட்டுவிடாமல்
பொலிவுடன் விளங்கும்
   எங்கள் சென்னை

வைணவ வைதீகர்க்கு
   வல்லிக்கேணி பார்த்தனும்
சைவ சமயத்தோர்க்கு
   மயிலை கபாலீசனும்
கிறித்தவ அன்பர்க்கு
    சாந்தோமும், பரங்கிமலையும்
முசுலீம் நண்பர்களுக்கு
    ஆயிரம் விளக்குமாய்
பொலிவுடன் விளங்கும்
     எங்கள் சென்னை.

வண்டலூரில் வன விலங்கும்
  பள்ளிக்கரணையில் பன்னாட்டு பறவைகளும்
முட்டுக்காட்டில் முதலைப் பண்ணையும்
  வேடந்தாங்களில் வெளிநாட்டுப் பறவையுமாக
இறையும் இயற்கையும்
  ஒன்றெனப் போற்றிப்
பொலிவுடன் விலங்கும்
   எங்கள் சென்னை.

பழையோர்க்கு மயிலையில்
 அறுபத்து மூவர் உலா
புதியோர்க்கு தி.நகரில்
  ஆடைவாங்க வீதி உலா
பழையோர்க்கு கன்னி மாறா
 கன்னிமாரா நூலகம்
புதியோர்க்கு எண்ணில் அடங்கா
  நூலோடு அண்ணா நூலகமென்று
பொலிவுடன் விளங்கும்
  எங்கள் சென்னை.

கற்க ஐஐடி
  சுற்ற தி.நகர்
கலைக்கு கலாக்ஷேத்திரா
 கானத்திற்கு சங்கீத அகாடமி
காண கோளரங்கம்
  கால்நனைக்க மெரினாவென
இன்னும் இன்னும்
 எத்தனையோ பெற்று
பொலிவுடன் விளங்கும்
  எங்கள் சென்னை.

வாழ்வு வளம்பெற
  வையம் உயர்வுற
ஏற்றத் தாழ்விலா
  சமான சமூகமாய்
பழமையும் மாறிவிடாமல்
  புதுமையும் விட்டுவிடாமல்
பொலிவுடன் விளங்கும்
   எங்கள் சென்னை.

No comments:

Post a Comment