நண்பனிடம், "நீ வராட்டாலும் நான் கண்டிப்பா குக்கூ படம்பாக்கப் போவேன்டா" என்றேன். "ஏன்?" என்றான். படத்தின் (கதை மற்றும்)இயக்குனர் ராஜுமுருகன் அதனால் என்றேன். அவனுக்கு ராஜுமுருகனைத்தெரியாது, "யார்?" என்றான். "எனக்கு மிகப் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர்(இன்னும் பலர் இருந்தாலும், ராஜுமுருகனினைப் பற்றிக்கூறும் போதே தவிர்க்கமுடியாமல் நினைவுக்கு வரும் மற்றொருவர் எழுத்தாளர் சுகா)" என்றேன்.
ராஜூமுருகனைப் படித்தவர்களுக்குத்("வட்டியும் முதலும்") தெரியும், அவர் எழுத்தின் வலிமை எப்படிப்பட்டதென்று, மனதின் அடி ஆழம்வரை சென்று தொட்டுப்பாரக்கக் கூடியது அவரின் எழுத்து, படித்துக்கொண்டிருக்கும்போதே வாசகனை அழ வைத்துவிடுவார். ஆனால், அவர் எழுத்து முழுவதுமே அவர் பார்த்த/அனுபவித்த/நிகழ்வின் ஒரு பகுதியாய் இருந்த/கேட்ட (குறிப்பாக சாமானிய மனிதர்களின்) அனுபவங்கள் மட்டுமே. "குக்கூ" படத்தின் டிரெய்லரே பலரின் மனதையும் தொட்டுச் சென்றதில் ஆச்சரியம் ஏதுமில்லை.
அலுவலக நண்பர் ஒருவர் இன்று படம் 'பார்த்துக்கொண்டிருக்கும் போதே' அலைபேசியில் அழைத்தார். "படம் அற்புதம், கொஞ்சம் ஸ்லோ... ஆனா அட்டகாசம்... படத்துல ஹீரோ, ஹீரோயின் சேரணும்னு படம் பாக்குற எல்லாரோட மனசும் கிடந்து அலையுது" என்றார். கூடவே படத்தின் கதையை சொல்ல ஆரம்பித்தார். "பாஸ் ப்ளீஸ், தயவு செஞ்சு கதைய எனக்கு சொல்லிடாதீங்க" அப்படியென்று சொல்லிவிட்டேன்.
ராஜூமுருகனைப் படித்தவர்களுக்குத்("வட்டியும் முதலும்") தெரியும், அவர் எழுத்தின் வலிமை எப்படிப்பட்டதென்று, மனதின் அடி ஆழம்வரை சென்று தொட்டுப்பாரக்கக் கூடியது அவரின் எழுத்து, படித்துக்கொண்டிருக்கும்போதே வாசகனை அழ வைத்துவிடுவார். ஆனால், அவர் எழுத்து முழுவதுமே அவர் பார்த்த/அனுபவித்த/நிகழ்வின் ஒரு பகுதியாய் இருந்த/கேட்ட (குறிப்பாக சாமானிய மனிதர்களின்) அனுபவங்கள் மட்டுமே. "குக்கூ" படத்தின் டிரெய்லரே பலரின் மனதையும் தொட்டுச் சென்றதில் ஆச்சரியம் ஏதுமில்லை.
அலுவலக நண்பர் ஒருவர் இன்று படம் 'பார்த்துக்கொண்டிருக்கும் போதே' அலைபேசியில் அழைத்தார். "படம் அற்புதம், கொஞ்சம் ஸ்லோ... ஆனா அட்டகாசம்... படத்துல ஹீரோ, ஹீரோயின் சேரணும்னு படம் பாக்குற எல்லாரோட மனசும் கிடந்து அலையுது" என்றார். கூடவே படத்தின் கதையை சொல்ல ஆரம்பித்தார். "பாஸ் ப்ளீஸ், தயவு செஞ்சு கதைய எனக்கு சொல்லிடாதீங்க" அப்படியென்று சொல்லிவிட்டேன்.
No comments:
Post a Comment