Thursday, November 20, 2014

சிந்துவெளி எழுத்துமுறை திராவிட மொழிக்குடும்ப எழுத்துமுறையே - ஐராவதம் மகாதேவன் உரை.

"ஐராவதம் மகாதேவன்" தொல்லியல், அகழ்வாராய்ச்சி மற்றும் (தமிழ்) கல்வெட்டியல் துறையில் இந்தப்பெயருக்கே ஒரு தனி மரியாதை உண்டு.  ஆம், சமஸ்கிருதமே ஆதிமொழி என்று உரத்து ஒலிக்கும் பல குரல்களுக்கிடையே தமிழைத் தாங்கிப்பிடிக்கும் (உரிய ஆதாரங்களுடன்) ஒரு குரல் இவருடையது.  இதுவரை பல கல்வெட்டு ஆதாரங்களையும், ஆராய்ச்சி கட்டுரைகளையும் வெளியிட்டுள்ள இவர் சமீபத்தில் (14-11-2014 அன்று) சென்னையில் உள்ள ரோசா முத்தையா நூலகத்தில் உரை நிகழ்த்தினார். 

எவ்வளவோ முயன்றும் நிகழ்ச்சி முடிந்த பின்னரே என்னால் சென்று சேர முடிந்தது.  இருந்தாலும் இருந்த கூட்டத்தைப் பார்த்துமே மனதிற்குள் ஒரு சந்தோஷம் பூத்துவிட்டது (நம் தமிழை எப்படியும் வாழவைத்துவிடுவார்கள் என்றுதான் வேறென்ன...).   நிகழ்வில் பல முக்கிய தமிழ் முகங்களை காணமுடிந்தது.  எனக்குப் பரிச்சயமான (என்றால் எனக்கு இவங்கள தெரியும், ஆனா அவங்களுக்கு என்ன தெரியாதுனு அர்த்தம்)  கிழக்கு பதிப்பகம் பத்ரி சேஷாத்ரி, சூழியலாளர் மற்றும் திரைவிமர்சகர் தியடோர் பாஸ்கரன், இந்திய லினக்சு பயனர் குழுமம், சென்னை - இன் ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீனிவாசன் மற்றும் பலர்.

ரிக் வேதத்தின் வழி, சிந்துவெளி எழுத்துவடிவத்திற்கான திராவிட சான்று - ஓர் ஆய்வு (A loose translation of "Dravidian Proof of the Indus Script via Rig Veda A Case Study" தமிழாக்கத்தில் தவறிருந்தால் பொறுத்துக்கொள்ளவும்) என்கிற தலைப்பில் அவர் ஆற்றிய உரையின் நிகழ்படம் (Video) இங்கே இருக்கிறது



1. ஐராவதம் மகாதேவன் அவர்களைப் பற்றிய மேலதிக தகவல்களுக்கு தமிழ் விக்கிப்பீடியாவில் அவரைப் பற்றிய பக்கத்தை இங்கே படிக்கலாம்.

2. தமிழ் பிபிசியில் இந்த உரை குறித்த செய்தி

No comments:

Post a Comment