Showing posts with label கவிஞன். Show all posts
Showing posts with label கவிஞன். Show all posts

Thursday, April 3, 2014

கவிதை

ரசிக்கத் தெரிந்தவனுக்கு
ஞானப்பழம்

ரசிப்பில்லாதவனுக்கு
தெரியாத மாயம்

புரியாதவனுக்குப்
புதிர்

புரிந்தவனுக்கும்
கைவராக் கலை

எழுத்தாளனுக்கும்
எட்டா இமயம்

கவிஞனின்
பரம்பரைச் சொத்து

வளைந்து, நெளிந்து
நின்று, நீண்டு
குறுகி, மீண்டு
விழுந்து எழுந்து
ஆனால் இளமை
குன்றா, இறவா
வார்த்தை சித்து.