Showing posts with label நுண்ணறிபேசி. Show all posts
Showing posts with label நுண்ணறிபேசி. Show all posts

Sunday, June 8, 2014

தகவல் தொழில் நுட்ப உலகம் கடந்த வாரம் (01-06-14 முதல் 07-06-14 வரை)

ஐபிஎம் நிறுவனம் இணைய உலாவி மூலம் நடைபெறும் தவறுகளைத் தடுக்கும் ஒரு புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கி காப்புரிமை பெற்றுள்ளது.

கூகுளின் பிளேஸ்டோர் பேபால் ஆதரவு மற்றும் எளிமையாக்கப்பட்ட செயலி அனுமதிகளுடன் நடைமுறைக்கு வந்துள்ளது.

சாம்சங் நிறுவனம் 7 இன்ச் திரையுடன் கூடிய சாம்சங் கேலக்ஸி டபுள்யு(Galaxy W) என்கிற அதன் (பெரிய) நுண்ணறிபேசியை அறிமுகப்படுத்தவுள்ளது.

மொத்தமுள்ள டிவிட்டர் பயனர்களில் 44% பேர் ஒரு முறைகூட எந்த டிவிட்டும் செய்ததில்லை என்று தரவுகள் தெரிவிக்கின்றன.

அலைபேசி விளையாட்டான டெம்பிள்ரன் இதுவரை 100கோடி முறை தரவிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலைபேசி புகைப்பட திருத்தி செயலியான இன்ஸ்டாகிராம் மேலும் பல புதிய கருவிகளை அதன் செயலியில் சேர்த்துள்ளது.

ஆப்பிள் நிறுவனம் ஸ்விஃப்ட்(swift) என்கிற பெயரில் புதிய கணினி மொழியை உருவாக்கியுள்ளது.

ஐஐடி-கான்பூர் தனது இரண்டாவது மீகணினி(Super Computer)யை அறிமுகப்படுத்தியுள்ளது.

விண்டோஸ் அலைபேசிகளுக்கான வாட்ஸ்ஆப் செயலி புதிய பிழை திருத்தங்கள் மற்றும் சிறப்பம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.

முந்தைய தகவல் தொழில்நுட்ப உலகச் செய்திகள் பதிவு

தகவல் தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் (25-5-14 முதல் 31-5-14)


வருங்காலத்தில் நுண்ணறிபேசிகளில் தரவிறக்கிப் பயன்படுத்தப்படும் வங்கி சம்பந்தப்பட்ட செயலிகள் கொந்தர்களால்(hacker) அதிகம் பாதிக்கப்படும் ஒன்றாக இருக்கும் துறை நிபுணர்கள் கருதுகிறார்கள்.

நுண்ணறிபேசி புகைப்படச் செயலியான இன்ஸ்டாகிராம் ஈரான் நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது.

சேல்ஸ்ஃபோர்ஸ் நிறுவனம் சேல்ஸ்ஃபோர்ஸ்1 என்கிற பெயரில் ஒரு புதிய நுண்ணறிபேசி செயலியை அறிமுகப்படுத்தவுள்ளது.

கூகுள் நிறுவனமானது ஸ்கைபாக்ஸ் இமேஜிங் என்கிற செயற்கைகோள் உருவாக்கம் மற்றும் தரவுமைய நிறுவுதல் துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனத்தை கையகப்படுத்தவுள்ளதாக அறியப்படுகிறது.

பிலிப்ஸ் நிறுவனம் இந்தியாவில் மீண்டும் தனது நுண்ணறி அலைபேசிகளை அறிமுகப்படுத்தி இந்தியச் சந்தையில் நுழையவுள்ளது.

ஃபிளிப்கார்ட் நிறுவனம் $210 மில்லியனை 4 முதலீட்டார்களிடம் பெற்றுள்ளது.

இந்தியாவில் மின்-வணிகம் (E-Commerce) வரும் வருடத்தில் சுமார் 50,000 பணிகளை உருவாக்கும் என கருதப்படுகிறது.

இன்போசிஸ் நிறுவனம் அதன் அடுத்த முதன்மைச் செயலதிகாரிப் பதவிக்கு சரியான நபரை தேர்ந்தெடுக்கவுள்ளது.  முக்கியமான விஷயம் என்னவென்றால் முதன்முறையாக இன்போசிஸ் நிறுவனர்கள் 7 பேர் அல்லாத ஒருவரை அப்பதவிக்கு தேர்ந்தெடுக்கவுள்ளனர்.

ஸ்னாப்டீல் நிறுவனம் தனது தரவுதளத்தை மாங்கோடிபி-க்கு மாற்றவுள்ளது.  இதன்முலம் தனது பயனர்களுக்கு வேகமான, மிகச் சிறப்பான பயன்பாட்டு அனுபவத்தைக் கொடுக்கவுள்ளதாகவும் கூறியுள்ளது.

சீன அரசு, தனது அரசு அலுவலகப் பயன்பாட்டிற்காக வாங்கும் கணினிகளில் இனி விண்டோஸை நிறுவப்போவதில்லை என அறிவித்துள்ளது.

இதுவரை கருத்தளவில் இருந்து வந்த கூகுள் (நுண்ணறி) தானியங்கு மகிழ்வுந்து வெளியீட்டுக்கு தயாராகிவிட்டது.  கூடுதல் தகவல் இந்த மகிழ்வுந்தில் திருப்புவதற்கான சுக்கானோ(steering), வேகம் முடுக்கியோ(accelerator) கிடையாது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது மேகக் கணிமை தொழில்நுட்பத்தினை பரவலாக்குவதற்காக சேல்ஸ்ஃபோர்ஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது.

முந்தைய தகவல் தொழில்நுட்ப உலகச் செய்திகள் பதிவு

Sunday, May 25, 2014

தகவல் தொழில்நுட்ப உலகம் கடந்தவாரம் (18-5-14 முதல் 24-5-14 வரை)


மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ-ஈ  (Moto-E) என்ற பெயரில் ஒரு புதிய பட்ஜெட் ஃபோனை அறிமுகப்படுத்தியுள்ளது. 

கூகுள் நிறுவனம், ஆப்பிள் நிறுவனத்தைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளதாக ஒரு கருத்துகணிப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

வரும் 2015-ம் ஆண்டில் லெனோவா நிறுவனமும் அணிகணினி தொழில்நுட்பத்தில் நுழையவுள்ளதாக தெரிகிறது.

இணையதளம் மூலம் பொருட்களை விற்பனை செய்யும் ஃபிளிப்கார்ட் நிறுவனம், மியன்தாரா(myntra) என்கிற மற்றொரு நிறுவனத்தை கையகப்படுத்தவுள்ளதாக தெரிகிறது.

ஈ-பே (ebay) நிறுவனத்தின் தரவுதளம் கொந்தர்களால் சமரசம் (compromised) செயப்பட்டதால் இந்நிறுவனம் தனது பயனர்களை தங்கள் கடவுச்சொற்களை மாற்றுமாறு கூறியுள்ளது.

முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஹெச்பி(hp) ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்களை தெரிவிக்கின்றன.

கூகுள் நிறுவனம் முப்பரிமாண புகைப்படங்களை எடுக்கவல்ல பலகை/சிலேட்டு/குளிகை (Tablet) கணினிகளை உருவாக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முந்தைய தகவல் தொழில்நுட்ப உலகம் பதிவு