Sunday, May 25, 2014

தகவல் தொழில்நுட்ப உலகம் கடந்தவாரம் (18-5-14 முதல் 24-5-14 வரை)


மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ-ஈ  (Moto-E) என்ற பெயரில் ஒரு புதிய பட்ஜெட் ஃபோனை அறிமுகப்படுத்தியுள்ளது. 

கூகுள் நிறுவனம், ஆப்பிள் நிறுவனத்தைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளதாக ஒரு கருத்துகணிப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

வரும் 2015-ம் ஆண்டில் லெனோவா நிறுவனமும் அணிகணினி தொழில்நுட்பத்தில் நுழையவுள்ளதாக தெரிகிறது.

இணையதளம் மூலம் பொருட்களை விற்பனை செய்யும் ஃபிளிப்கார்ட் நிறுவனம், மியன்தாரா(myntra) என்கிற மற்றொரு நிறுவனத்தை கையகப்படுத்தவுள்ளதாக தெரிகிறது.

ஈ-பே (ebay) நிறுவனத்தின் தரவுதளம் கொந்தர்களால் சமரசம் (compromised) செயப்பட்டதால் இந்நிறுவனம் தனது பயனர்களை தங்கள் கடவுச்சொற்களை மாற்றுமாறு கூறியுள்ளது.

முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஹெச்பி(hp) ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்களை தெரிவிக்கின்றன.

கூகுள் நிறுவனம் முப்பரிமாண புகைப்படங்களை எடுக்கவல்ல பலகை/சிலேட்டு/குளிகை (Tablet) கணினிகளை உருவாக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முந்தைய தகவல் தொழில்நுட்ப உலகம் பதிவு

No comments:

Post a Comment