Saturday, March 23, 2013

சமூகமும் கவிதையும்..


போராட்டம்...
அந்தக்கால அரசியல்வாதிகள், தியாகிகள்
போராடியதெல்லாம் எம்மாத்திரம்
இன்று நாங்கள் போராடுகிறோம்,
காவிரி தண்ணீருக்காக,
கற்பழிக்கப்பட்ட பெண்ணிற்காக
பசித்திருக்கம் ஜீவன்களுக்காக,
ஈழத்திற்க்காக,
பெண்ணுரிமைக்காக,
அணு உலைக்காக,
என்ன? எப்படியென்று விளக்க வேண்டுமா?
ஐயோ! எனக்கு அதற்கெல்லாம் நேரமில்லை..
இதோ தொடர்ந்து போராட
இன்னொரு புதுப்பிரச்சனை கூட கிடைத்துவிட்டது.
வாருங்கள் போராடுவோம்..
லைக்கும்(like), கமெண்டுமாக(comment)
முகநூல்(facebook) பக்கத்தில்...


என் பெயர்...
எனக்கு ஞாபகமிருக்கிறது
பச்சை வண்ண ஆடைதான்
எனக்கு எப்போதும் விருப்பமானது
அதை அணிந்து சல சலவென
சத்தம்போட்டு ஓடிக்கொண்டிருப்பேன்
அப்பொழுதுதான் அது நடந்தது
ஒருவன் அல்ல, பல பேர்
ஒரு நாள் அல்ல, பல வருடங்கள்
ஒரு நேரமல்ல, எந்நேரமும்
என்னை மாறி மாறி சீரழித்தார்கள்
சிலர் என் அழகை அள்ளிப்போனர்கள்
சிலர் அழுக்கை இட்டு நிரப்பினார்கள்
என்னை விட்டுவிட சொல்லி கதறினேன்
காப்பாற்றச் சொல்லி மன்றாடினேன்
கேட்பாரில்லை..
மேலும், மேலும் சீரழிக்கப்பட்டேன்
கடைசியாக புள்ளிவிபரம் கொடுத்தார்கள்
என் அளவுக்கு சீரழிக்கப்படவர்கள்
யா(ஆ)றும் இல்லையாம்..
என் வனப்பை இழந்து
நாதியற்று கிடக்கிறேன்
என் பெயர் "பாலாறு"

மனதை மிகவும் பாதித்த பாலாறு பாழ்பட்டது குறித்தான ஆவணப்படம் யூடியூபில் https://www.youtube.com/watch?v=mxksl0VgBOY


எங்களையும் சேர்த்துக்கொள்ளு(ல்லு)ங்கள்...
ஏற்கனவே அழித்தொழுத்துவிட்டீர்கள்
சின்ன சிட்டுக்குருவியில் ஆரம்பித்து
பெரிய காட்டுயானை வரை
இனி அழிந்துபோன இனங்களில்
எங்களையும் சேர்த்துக்கொள்ளு(ல்லு)ங்கள்..
இப்படிக்கு,
உங்களுக்காகவே வாழ்ந்த
ஆறு, மலை, ஓடை, ஏரி, குளம், வாய்க்கால்...

மதிப்பெண்...
கல்வி கார்ப்பரேட் தொழிலானது
வாத்தியார்கள் வியாபாரிகளானார்கள்
பள்ளிப்பிள்ளைகள் பிராய்லர் கோழிகளனார்கள்
மதிப்பெண், மதிப்பிழந்தது.


No comments:

Post a Comment