Friday, March 22, 2013

தோழ(ழி)மைக் கவிதைகள்..


முன்னாள் தோழி
இனி உன்னோடு என்னால்
 உரிமையாக பேச முடியாது
என் சுகத்தையோ, சோகத்தையோ
 பகிர முடியாது
என் சந்தேகத்தை கேட்க
உன் சந்தேகத்தை தீர்க்க முடியாது
ஏனென்றால்
நான் முன்பிருந்த நானில்லை
நீ முன்பிருந்த நீயில்லை
விட்டுச் சென்றுவிட்டன
ஜிவன்கள்
ஏனென்றால்.. நீ
இன்னொருவனுடைய இந்நாள் மனைவியான
என்னுடைய முன்னாள் தோழி..


அழகான அந்த நாள்
உன் திருமணத்திற்குப் பின்
நாம் தொடர்பற்றுப் போனபின்
11 மாதங்கழித்து
ஒரு வழக்கமான என்னுடைய
அவசர காலையில்
என் அறையின்
முகத்தளவு கண்ணாடியில்
தலைவாரிக்கொண்டிருந்த போது
புதிய எண்ணிலிருந்து அழைப்பு
"ஹலோ.." மறுமுனையில்
"களுக்" என்கிற உன் சிரிப்பு..
எனக்கே ஆச்சரியம்தான்
எப்போதுமே தொலைபேசியில் குரலை
அடையாளம் காணமுடியாத நான்
உன் குரலை, சிரிப்பை மட்டும்
எப்படி கண்டுகொண்டேனென்று
உனக்குத் தெரியாது
உன் அழைப்பிற்குப்
பிறகான என்னுடைய அந்தநாள்
எவ்வளவு அழகாயிருந்தென்று... ;)


ஞாபகமிருக்கிறதா...?
உனக்கு என் ஞாபகம்
எப்போதாவது வந்ததுண்டா?
இப்படி நீ கேட்டபோதெல்லாம்
"இல்லை" என்று மட்டும்தான்
நான் சொல்லியிருக்கிறேன்..
இப்பொழுது அடிக்கடி
உன் ஞாபகம் வருகிறது..
சொல்ல முடியவில்லை..
ஏனென்றால்,
நான் உரிமையோடு பேசும் என் தோழி
இன்று இன்னொருவனின் உரிமை மனைவி.

No comments:

Post a Comment