Tuesday, November 19, 2013

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை(17-11-13 முதல் 23-11-13வரை)

பயனர்களின் தகவல்களைத் தரக்கேட்டு 2013-ம் ஆண்டின் முதல் அரையாண்டில் மட்டும் இந்தியாவிடமிருந்து 2691 கோரிக்கைகள் தங்களுக்கு வைத்துள்ளதாக கூகுள் கூறியுள்ளது.  இவ்வித கோரிக்கைகளில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.

கேண்டி கிரஷ் சாகா விளையாட்டு 1/2 பில்லியன் (500 மில்லியன் அதாவது 50 கோடி) பயனர்களால் தரவிறக்கி/நிறுவப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.  இவ்விளையாட்டானது ஐஓஎஸ், ஆண்ட்ராய்டு இயங்குதளங்கள் மட்டுமின்றி முகநூல்(facebook)-லும் விளையாட ஏதுவான ஒன்றானதால் இது சாத்தியப்பட்டுள்ளது.

கூகுளின் நெக்சஸ் 5, இந்தியாவில் அடுத்த வாரத்தில் கிடைக்கும்.  இதன் விலை இந்திய ரூபாய் சுமார் 30,000 ஆக இருக்கும் என்றும் அறியப்படுகிறது.

சமூக வலைதளமான டிவிட்டரைப் பயன்படுத்துவதில் சவுதி அரேபியா முதலிடத்தில் உள்ளது.  இந்தியா 21-வது இடத்தில் உள்ளது.

சச்சின் டெண்டுல்கர் அனைத்துவிதமான துடுப்பாட்டங்களிலிருந்தும் கடந்த 16 நவம்பரன்று முடிந்த மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான தேர்வுத் துடுப்பாட்டத்தோடு ஓய்வு பெற்றார்.  இதையொட்டி பிசிசிஐ(BCCI) #ThankYouSachin என்கிற அடையாளச் சொல்லோடு கூடிய டிவிட்டர் பரப்புரை ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.  இது 3 மில்லியனுக்கும் அதிகமான கீச்சுகளைப் பெற்றது.

புதிய நுண்ணறி அலைபேசி இயங்குதளங்களில் ஒன்றான டைசன்(Tizen) என்கிற இயங்குதளத்தை சாம்சங் நிறுவனம் பயன்படுத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனாவின் தியான்கே-2 உலகின் மிக வேகமான மீகணினி(Super Computer) என மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.  இதன் வேகம் 33.86 பெடாஃபிளாப்/வினாடி ஆகும்.

இந்தியா, உலளவில் முகநூல் பயனர்களின் எண்ணிக்கையில் 2016-ம் ஆண்டு வாக்கில் முதலிடம் பெறும் என தெரிவிதாக கூறப்பட்டுகிறது.

கூகுள் நிறுவனம் தனது அணிகணினியான கூகுள் கிளாஸ்(Google Glass)-க்கான செயலி உருவாக்க கிட் (App Development Kit)-ஐ வெளியிட்டுள்ளது

இந்திய இரயில்வேயின் ஐஆர்சிடிசி, ஈ-வேலட் எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.  இதன் மூலம் பயனர்கள் தங்கள் முன்பதிவு சீட்டைப் பெறுவது எளிதாகம் என கூறப்படுகிறது.  இதுவரையில் பயனர் தங்கள் பயணச்சீட்டுக்கான பணத்தை கடன் அட்டை(Credit card)/இணைய வங்கி சேவை(internet banking)/பற்று அட்டை(Debit card) மூலமே செலுத்திவந்தனர்.  இப்புதிய திட்டத்தில் பயனர் ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை ஐஆர்சிடிசி-யில் தனது பயனர் கணக்கில்  முன்னரே செலுத்தி அதிலிருந்து பயணச்சீட்டுக்கான பணத்தை கட்டலாம்.

ஆன்ட்ராய்டு, ஆப்பிள், விண்டோஸ் போன்ற நுண்ணிறி பேசிகளில் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வரும் வாட்ஸ்ஆப் எனும் பேச்சு செயலி தற்போது நோக்கியாவின் ஆஷா 501 அலைபேசிகளிலும் பயன்படுத்தமுடியும்

எச் டி சி நிறுவனம் தனது ஒன் மேக்ஸ் (One Max) வகை நுண்ணறிபேசியை இந்தியரூபாய் சுமார் 61,490 -க்கு வெளியிட்டுள்ளது.

டேனியல் மோரெல் எனும் புகைப்பட பத்திரிக்கையாளர், தனது அனுமதியின்றி தன் புகைப்படங்களைப் பயன்படுத்திய இரண்டு நிறுவனங்களின் மீது வழக்கு தொடர்ந்து சுமார் $1.2 மில்லியன் நஷ்ட ஈடாகப் பெற்றுள்ளார்.

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை முந்தைய வாரப் பதிவு

No comments:

Post a Comment