Showing posts with label htc. Show all posts
Showing posts with label htc. Show all posts

Tuesday, November 19, 2013

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை(17-11-13 முதல் 23-11-13வரை)

பயனர்களின் தகவல்களைத் தரக்கேட்டு 2013-ம் ஆண்டின் முதல் அரையாண்டில் மட்டும் இந்தியாவிடமிருந்து 2691 கோரிக்கைகள் தங்களுக்கு வைத்துள்ளதாக கூகுள் கூறியுள்ளது.  இவ்வித கோரிக்கைகளில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.

கேண்டி கிரஷ் சாகா விளையாட்டு 1/2 பில்லியன் (500 மில்லியன் அதாவது 50 கோடி) பயனர்களால் தரவிறக்கி/நிறுவப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.  இவ்விளையாட்டானது ஐஓஎஸ், ஆண்ட்ராய்டு இயங்குதளங்கள் மட்டுமின்றி முகநூல்(facebook)-லும் விளையாட ஏதுவான ஒன்றானதால் இது சாத்தியப்பட்டுள்ளது.

கூகுளின் நெக்சஸ் 5, இந்தியாவில் அடுத்த வாரத்தில் கிடைக்கும்.  இதன் விலை இந்திய ரூபாய் சுமார் 30,000 ஆக இருக்கும் என்றும் அறியப்படுகிறது.

சமூக வலைதளமான டிவிட்டரைப் பயன்படுத்துவதில் சவுதி அரேபியா முதலிடத்தில் உள்ளது.  இந்தியா 21-வது இடத்தில் உள்ளது.

சச்சின் டெண்டுல்கர் அனைத்துவிதமான துடுப்பாட்டங்களிலிருந்தும் கடந்த 16 நவம்பரன்று முடிந்த மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான தேர்வுத் துடுப்பாட்டத்தோடு ஓய்வு பெற்றார்.  இதையொட்டி பிசிசிஐ(BCCI) #ThankYouSachin என்கிற அடையாளச் சொல்லோடு கூடிய டிவிட்டர் பரப்புரை ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.  இது 3 மில்லியனுக்கும் அதிகமான கீச்சுகளைப் பெற்றது.

புதிய நுண்ணறி அலைபேசி இயங்குதளங்களில் ஒன்றான டைசன்(Tizen) என்கிற இயங்குதளத்தை சாம்சங் நிறுவனம் பயன்படுத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனாவின் தியான்கே-2 உலகின் மிக வேகமான மீகணினி(Super Computer) என மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.  இதன் வேகம் 33.86 பெடாஃபிளாப்/வினாடி ஆகும்.

இந்தியா, உலளவில் முகநூல் பயனர்களின் எண்ணிக்கையில் 2016-ம் ஆண்டு வாக்கில் முதலிடம் பெறும் என தெரிவிதாக கூறப்பட்டுகிறது.

கூகுள் நிறுவனம் தனது அணிகணினியான கூகுள் கிளாஸ்(Google Glass)-க்கான செயலி உருவாக்க கிட் (App Development Kit)-ஐ வெளியிட்டுள்ளது

இந்திய இரயில்வேயின் ஐஆர்சிடிசி, ஈ-வேலட் எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.  இதன் மூலம் பயனர்கள் தங்கள் முன்பதிவு சீட்டைப் பெறுவது எளிதாகம் என கூறப்படுகிறது.  இதுவரையில் பயனர் தங்கள் பயணச்சீட்டுக்கான பணத்தை கடன் அட்டை(Credit card)/இணைய வங்கி சேவை(internet banking)/பற்று அட்டை(Debit card) மூலமே செலுத்திவந்தனர்.  இப்புதிய திட்டத்தில் பயனர் ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை ஐஆர்சிடிசி-யில் தனது பயனர் கணக்கில்  முன்னரே செலுத்தி அதிலிருந்து பயணச்சீட்டுக்கான பணத்தை கட்டலாம்.

ஆன்ட்ராய்டு, ஆப்பிள், விண்டோஸ் போன்ற நுண்ணிறி பேசிகளில் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வரும் வாட்ஸ்ஆப் எனும் பேச்சு செயலி தற்போது நோக்கியாவின் ஆஷா 501 அலைபேசிகளிலும் பயன்படுத்தமுடியும்

எச் டி சி நிறுவனம் தனது ஒன் மேக்ஸ் (One Max) வகை நுண்ணறிபேசியை இந்தியரூபாய் சுமார் 61,490 -க்கு வெளியிட்டுள்ளது.

டேனியல் மோரெல் எனும் புகைப்பட பத்திரிக்கையாளர், தனது அனுமதியின்றி தன் புகைப்படங்களைப் பயன்படுத்திய இரண்டு நிறுவனங்களின் மீது வழக்கு தொடர்ந்து சுமார் $1.2 மில்லியன் நஷ்ட ஈடாகப் பெற்றுள்ளார்.

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை முந்தைய வாரப் பதிவு

Friday, November 8, 2013

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை(20-10-13 முதல் 26-10-13வரை)

இணையவழி வணிகச்சேவை அளித்துவரும் ஸ்னாப்டீல்(snapdeal), 30% பொருள் கேட்பு ஆணைகள் (orders) அலைபேசி வாயிலாக நடைபெறுவதாக தெரிவித்துள்ளது.

மைக்ரோசாப்ட்(Microsoft) நிறுவனம் ஆன்ட்ராய்டு போலவே தனது விண்டோஸ் மொபைல் இயங்குதளத்துடன் கூடிய அலைபேசிகளை உருவாக்க எச்டிசி(HTC)  போன்ற அலைபேசி உற்பத்தியாளர்களிடம் கேட்டுவருவதாக அறியப்படுகிறது.

விண்டோஸ் மொபைல் இயங்குதளத்துடன் கூடிய நுண்ணறி அலைபேசிகள் விற்பனையில் 90% சதவீதம் நோக்கியாவின்(Nokia) தயாரிப்புகள் மட்டுமே என அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

மைக்ரோமேக்ஸ்(Micromax) நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி திரு. தீபக் மல்ஹோத்ரா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் சேவை ஏற்றுமதி நிறுவனமான டிசிஎஸ்(TCS) புதிய மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களான பெருந்தகவல்(big data), மேகக்கணிமை(Cloud Computing), அலைபேசி தொழில்நுட்பங்கள் போன்றவற்றில் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்யவுள்ளதாக அந்நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக மேலாளர் திரு. என். சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

இன்போசிஸ் நிறுவனம் தனது பணியாளர்களில் நட்சத்திர திறமையாளர்களுக்கு(Star Performers) போனஸ் வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

நுண்ணறி கைக்கடிகார(Smart Watch) தயாரிப்புப் போட்டியில் ஈடுபட்டுள்ள பல்வேறு பெருநிறுவனங்களைத் தொடர்ந்து தற்போது எச்டிசி நிறுவனம் இப்போட்டியில் இணைந்துள்ளது.  இதன் நுண்ணறி கைகடிகாரம் மற்ற நிறுவனங்களைப் போன்றே ஆன்ட்ராய்டு இயங்குதளத்துடன் இருந்தாலும், கூடவே கேமராவையும் உள்ளிணைத்து வரவிருக்கிறது.

நச்செதிர்நிரல்(Anti-Virus) தயாரிப்பு நிறுவனமான சிமேன்டெக்(symantec), இந்தியா 2013-ம் ஆண்டில் மட்டும் இணைய வழி ஏமாற்றாளர்களால் சுமார் 4 பில்லியன் அமெரிக்க டாலர்களை (கிட்டத்தட்ட இந்திய ரூபாய் 24,630 கோடிகள்) இழந்திருப்பதாக தெரிவிக்கிறது.

ஆப்பிளின் ஆப் ஸ்டோர்(App Store) 1 மில்லியன் (10 லட்சம்) செயலிகளுடன் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

(தொழில்முறை) சமூக வலைதளமான லின்க்டுஇன்(LinkedIn), இந்தியாவில் மிகுதியாக விரும்பப்படும் தொழில்நிறுவனங்களாக அக்சென்சர்(Accenture), விப்ரோ(Wipro), இன்போசிஸ்(Infosys) ஆகிய நிறுவனங்களைக் குறிப்பிட்டுள்ளது.

யாஹூ நிறுவனம் புகைப்படங்களை அடையாளம் (Image recognition) காணும் தொழில்நுட்ப நிறுவனமான லுக்ஃபுளோ(LookFlow) என்கிற புதிய நிறுவனத்தை(startup) தனது புகைப்பட சேவையான ஃபிளிக்கருக்காக(Flickr) கையகப்படுத்தியுள்ளது.


தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை முந்தைய வாரப் பதிவு



தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை(06-10-13 முதல் 12-10-13வரை)

இணையதளத்தில் வெளியிடப்படும், எளிதில் விளைவுகளை ஏற்படுத்தும்(sensitive) தகவல்களை கவனிப்பதற்காக சீனா சுமார் 2 மில்லியன் நபர்களை நியமித்துள்ளதாக அறியப்படுகிறது.

தகவல் பரிமாற்ற செயலியான லைன்(Line) 2013-ம் ஆண்டில் தனது இந்திய பயனர்களின் எண்ணிக்கை 20 மில்லியனைத் தாண்டும் என்று கூறியுள்ளது.

எல்ஜி(LG) நிறுவனம் தனது முதல் குளிகைக் கணினியை(Tablet pc) 8.3 இன்ச் அளவில் ஜி பேட்(G Pad) என்கிற பெயரில் அறிமுகப்படுத்தவுள்ளது.

கூகுள் நிறுவனம் தனது நிகழ்பட சேவையான யூ-டியூப்-ஐ மேலும் பிரபலப்படுத்தும் விதமாக டிடிஎச்(DTH) வாயிலாக இந்திய தொலைக்காட்சி பயனர்களிடம் யூடியூபை(Youtube) கொண்டு சேர்க்க முயன்று வருகிறது.

கூகுள் தனது குரோம் இயங்குதளத்தின் மூலம் இயங்கும் மடிக்கணிகளை எச்பி நிறுவனத்துடன் சேர்ந்து தரவிருக்கிறது.  இது எச்பி குரோம்புக் 11 என்று பெயரிடப்பட்டுள்ளது.

கூகுளின் ஹேங்அவுட்(Hangout) தனது புதிய மேம்பட்ட பதிப்பில் குறுஞ்செய்தி, பல்லூடக செய்தி(MMS) போன்ற சேவைகளையும் தரவுள்ளது.

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ரவுண்ட்(Galaxy Round) அலைபேசியை வளையக்கூடிய திரையுடன் தயாரித்துள்ளது.

இன்போசிஸ் நிறுவனம் தனது ஆராய்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவில் பணிபுரியும் நபர்களின் எண்ணிக்கையை குறைக்க திட்டமிட்டுள்ளது.  மேலும், அப்பணியாளர்களை சேவைத்துறைக்கு மாற்றவுள்ளதாகவும் தெரிகிறது.

சாம்சங் இந்திய ரூபாய் சுமார் 28 லட்சத்தில் தனது 85 இன்ச் அல்ட்ரா எச்டி தொலைக்காட்சியை அறிமுகப்படுத்தியுள்ளது.  இவ்வகை தொலைக்காட்சிகள் சாதாரண எச்டி தொலைக்காட்சிகளைவிட 4 மடங்கு சிறந்த காட்சிகளைத் தரவல்லது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எச்டிசி(HTC) லெனோவா(lenovo) நிறுவனத்தால் கையகப்படுத்தப்படலாம் என தகவல்கள் கசிகிறது.


தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை முந்தைய வாரப் பதிவு