Tuesday, April 22, 2014

தொழில்நுட்ப உலகம் ஒரு பார்வை 26-01-2014 லிருந்து 01-02-2014 வரை

டிவிட்டர் போல முகநூலும் நடப்பு நிகழ்வுப் போக்குகளை(Current Trends) இந்தியாவில் தரவுள்ளது

கொந்தர் ஒருவர் ஸ்னாப் சாட் அலைபேசி செயலியின் புதிய பாதுகாப்பு அம்சத்தை 30 நிமிடங்களில் உடைத்துள்ளார்

ரெட்ஹாட் நிறுவனம் மேகக்கணிமைக்காக பல தயாரிப்புகளை தரவுள்ளது.

டெக் மஹிந்திரா நிறுவனம் ஆள்சேர்ப்பில் ஈடுபட்டுள்ளது.  அதன் பணியாட்களின் எண்ணிக்கையை விரைவில் 1 லட்சம் என்கிற அளவில் உயர்த்தவுள்ளதாக அறியப்படுகிறது.

இந்தியாவில் முதல் முறையாக கர்நாடக மாநிலம் அதன் தலைநகரான பெங்களூருவில் பொதுமக்களுக்கு இலவச வை-பை(Wi-Fi) இணைய இணைப்பைத் தரவுள்ளது.  இது முதலில் எம்.ஜி ரோடு, பிரிகேட் ரோடு, யஷ்வந்த்பூர், சாந்தி நகர் போன்ற இடங்களுக்கும் பிறகு மற்ற இடங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் போல தெரிகிறது.

விக்கிப்பீடியா தனது புதிய முயற்சியாக முக்கிய மனிதர்களைப் பற்றிய அதன் பக்கங்களில் அவர்கள் பேச்சை இணைக்கவுள்ளது.  இதற்கு பிபிசி நிறுவனமும் தனது ஆவணக்கிடங்கில் இருக்கும் ஒலிக்கோப்புகளை கொடுத்து உதவுவதாகவும் தெரிவித்துள்ளது.

தேடல் நிறுவனமான கூகுள் தனது உலாவி அடிப்படையில் அமைந்த இயங்குதளமான குரோம் ஓஎஸ்(Chrome OS) கொந்தர்களைக் கொண்டு பாதுகாப்பு சோதனை(Hack) செய்யவுள்ளது.  இதற்கு பரிசாக 2.7 மில்லியன் அமெரிக்க டாலர்களைப் பரிசாகவும் அறிவித்துள்ளது.  இந்நிகழ்வு வரும் மார்ச் மாதம் Pwnium என்கிற பெயரில் நடைபெறவுள்ளது.

யாஹூ நிறுவனம் உலாவியை அடிப்பைடயாகக் கொண்டு விளையாட்டுகளை உருவாக்கி வரும் தொடக்க கால நிறுவனமான கிளவுட்பார்ட்டி(Cloud Party) என்கிற நிறுவனத்தை கையகப்படுத்தியுள்ளது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது ஸ்கைடிரைவ்(SkyDrive) மேகக் கணிமைச் சார்ந்த நினைவக சேவையின் பெயரை ஒன்டிரைவ்(OneDrive) என்று மாற்றவுள்ளது.

கூகுள் நிறுவனம் லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் செயற்கை நுண்ணறிவு சாரந்த தொடக்ககால நிறுவனமான டீப்மைண்ட்(DeepMind) என்கிற நிறுவனத்தை கையப்படுத்தியுள்ளது.

நோக்கியாவும் ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும் மலிவுவிலை அலைபேசியை நோக்கியா நார்மாண்டி (அ) நோக்கியா எக்ஸ் என்கிற பெயரில் அறிமுகப்படுத்தவுள்ளது.

தென்கொரிய கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை 1.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை 5ஜி வலையமைப்பை உருவாக்க முதலீடாக தரவுள்ளதாக அறிவித்துள்ளது.  இந்த 5G தொழில்நுட்பமானது 4G தொழில்நுட்பத்தைவிட 1000 மடங்கு வேகமாக இருக்கும் என்றும் அறியப்படுகிறது.  இத்தொழில்நுட்பம் மட்டும் சாத்தியாமானால் ஒரு அதி தெளிவான திரைப்படங்களை(HD movie) உங்கள் அலைபேசியிலிருந்து சில நொடிகளில் தரவிறக்கலாம்.

இன்டெக்ஸ் நிறுவனம் 12,500 ருபாய் விலையில் வளைவான திரையுடைய நுண்ணறி அலைபேசியை வெளியிடவுள்ளது.  இது அதன் அக்வா(Aqua) வரிசையில் வரும் ஒரு அலைபேசியாகும்.

டிவிட்டர் தனது ஆன்ட்ராய்டுக்கான செயலியை மேலும் மேம்படுத்தியுள்ளது.  இப்போது இந்த மேம்பாடுகளின் மூலம் நீங்கள் பகிரும் புகைப்படங்களை திருப்புதல்(Rotate) மற்றும் வெட்டுதல்(Crop) போன்ற செயல்களையும் செய்ய முடியும்.

ஆப்பிள் சூரிய ஒளியில் மின்னேற்றம் அடையும், இரண்டு பக்கமும் திரையையுடைய ஒரு கணினி/தொழில்நுட்பத்திற்கான காப்புரிமையை வாங்கியுள்ளதாக தகவல்கள் அறியப்படுகிறது.

2013 உற்பத்தி/விற்பனை செய்யப்பட்ட 3 அலைபேசிகளில் ஒன்று சாம்சங் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது என்று கருத்துகணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இணைதளத்தின் ஈற்றுப் பெயர்களான டொமைன்கள்(Domains)  பெயரில் புதிதாக .guru, .bike போன்றவை சேர்க்கப்பட்டுள்ளன.

2013-ம் ஆண்டில் மொத்த நுண்ணறி அலைபேசிகளின் விழுக்காட்டில் 79% ஆன்ட்ராய்டினுடையது என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன்.

டிவிட்டர் ஐபிஎம் நிறுவனத்துடன் 900 காப்புரிமைகளுக்கான ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டுள்ளது.

சிஸ்கோ பொருட்களின் இணையத்தை(Internet of Things) மேகக்கணிமை தரவுதளங்களுடன் இசைவாக இணைக்கும் ஒரு தொழில்நுட்பத்தில் முதலீடு செய்து பணியாற்றிவருகிறது.  இதற்கு பனிமூட்ட கணிமை(fog computing - தமிழாக்கம் சரியா?) என்று பெயரிட்டுள்ளது.

கூகுள் நிறுவனம் தான் கையகப்படுத்திய மோட்டோரோலா நிறுவனத்தை லெனோவா நிறுவனத்திடன் விற்றுள்ளது.

ஆஸ்பைரிங் மைண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வரிக்கையின் படி புதுடெல்லி, பீகார் போன்ற மாநிலங்கள் திறமையான தகவல் தொழில்நுட்ப பொறியாளர்களை உருவாக்குவதாகவும், தமிழ்நாடு மற்றம் ஆந்திரப்பிரதேச மாநிங்களின் மாணவர்கள் வேலைவாய்ப்புக்கு தகுதியற்றவர்களாகவும் இருப்பதாக கூறியுள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது மேகக்கணிமை சேவையான அஷூரை(Azure) மேம்படுத்த/விரிவுபடுத்த பெங்களூருவைச் சார்ந்த சிலௌடுமன்ச்(CloudMunch) என்ற தொடக்ககால நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது.

ஃபேஸ்புக் நுண்ணறிபேசிகளுக்கான ஒரு கட்டுரைகளைப் படிக்கும் செயலியை வெளியிட்டுள்ளது.  பேப்பர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த செயலி சமூக தளங்களிலிருந்து செய்திகளை சேகரித்து தொகுத்து வழங்கும் என்று கூறியுள்ளது.

ஃபிளிப்கார்ட் நிறுவனம் மைய்ன்டாரா நிறுவனத்துடன் இணையவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

No comments:

Post a Comment