Wednesday, June 21, 2017

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பின் மதிப்பும் அதன் மீதான மோகமும் குறைந்தது ஏன்?

கடந்த இரண்டு மூன்று வருடங்களாகவே பொறியியல் படிப்பை புறந்தள்ளும் வாடிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.  ஆண்டுதோறும் குறைந்து வரும் அல்லது கூடாமலே இருக்கும் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வு விண்ணப்ப விற்பனையைப் பாரத்தாலே தெரியும்.  இந்தியாவில் மிக அதிகமாக பொறியாளர்களை உற்பத்தி செய்யும் மாநிலங்களில் தமிழகம் முக்கிய இடம் வகித்து வருகிறது.  இதிலிருந்தே தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கையை (500+) அறிந்துகொள்ளலாம்,  தமிழகம் முழுவதும் பரவியுள்ளா இந்த பொறியியல் கல்லூரிகளை ஒரே பல்கலைக்கழகத்தின் கீழே நிர்வாகம் செய்ய சிரமமாயிருக்கிறது என்று சென்னை அண்ணா பல்கலைக்கழகமானது கோவை, நெல்லை, திருச்சி அண்ணா பல்கலைக்கழகங்களாக பலவாறு பிரிக்கப்பட்டு பின்னர் மீண்டும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்குக் கீழேயே கொண்டு வரப்பட்டது தனிக்கதை.

சரி நாம் பேச வந்த விஷயத்திற்கு வருவோம்.  வணிகத்தில் அடிப்படை விஷயமாக ஒன்று சொல்வார்கள் எந்த ஒரு பொருளின் மதிப்பும் "தேவை மற்றும் கிடைத்தல்"க்கு  (Demand & Supply) இடையேயான இடைவெளியைப் பொறுத்தே பின்வறுமாறு அமையும்,

1. தேவை அதிகம் & கிடைத்தலும் அதிகம்  = சமநிலை நிலவும்
2. தேவை அதிகம் & கிடைத்தல் குறைவு   =  சமநிலை குலையும் (அதாவது பொருளின் மதிப்பு கூடும்)
3. தேவை குறைவு & கிடைத்தல் அதிகம் = சமநிலை குலையும் (அதாவது பொருளின் மதிப்பு குறையும்)
4. தேவை குறைவு & கிடைத்தல் குறைவு = சமநிலை நிலவும்

இதுதான் பொறியியல் படிப்பிலும் நிகழ்ந்தது.  முதலில் தேவைக்கும் கிடைத்தலுக்குமான இடைவெளி மேலே சொல்லப்பட்டவாறு எண் 2-ல் ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக 1-க்கு நகர்ந்து இப்போது 3-ல் இருக்கிறது.  நம் எல்லோருக்கும் தெரிந்த மென்பொருள் துறையைச் சேர்ந்த யாராவது ஒருவர் பெங்களூருவிலோ, ஐதராபாத்திலோ இருப்பார். சென்னையில் எவ்வளவோ பன்னாட்டு, நம்நாட்டு நிறுவனங்கள் இருக்க அவர்கள் காடு கரையை விட்டு, சுற்றம் நட்பை விட்டு பெங்களூருக்கும், ஐதராபாத்திற்கும் ஏன் போக வேண்டும்? இதற்க்கு பல காரணங்கள் இருந்தாலும் தேவை & கிடைத்தலும் ஒரு காரணம்.  சென்னையின் மென்பொறியாளர் தேவை ஓரளவிற்க்கு நிவர்த்தியானதும் அவரின் மதிப்பு குறையும் அது அவரது சம்பளம் முதற்கொண்டு பல விஷயங்களைப் பாதிக்கும்.  அதன் காரணமாக தேவை (அதிகம்) இருக்கும் உள்ள இடத்தை நோக்கி அவர் தள்ளப்படுவார் அல்லது தகுதிக்குக் குறைவான வேலை அல்லது சம்பளத்திற்கு அவர் தள்ளப்படுவார்.  (ஒரு உதாரணத்திற்க்காக மென்பொறியாளர் என்பதை எடுத்துக்கொண்டேன் இது எல்லா துறைக்கும் பொருந்தும்.  மென்பொறியாளர்கள் மன்னிக்க..)

2ல் ஆரம்பித்த விஷயம் மெல்ல எல்லோர் மனதிலும் நிறைந்து பொறியியல் படித்தால் போதும் கைநிறைய சம்பாதிக்கலாம் காலத்திற்கும் சுகமாயிருக்கலாம் என்று நினைக்க வைத்தது.  அடுத்த பத்து வருடங்களுக்கு கூட்டங்கூட்டமாக திருப்பதி கோயில் மொட்டை போல எல்லோரும் அ(ப)டித்தோம். 

1-ஐ நோக்கி நகர்ந்தபோதும் பெரிய வித்தியாசம் இல்லை காடு கரை விற்று, கறவை மாட்டை விற்று, நில புலன்களை விற்று, வங்கிக் கடன் பெற்று என மீண்டும் தொடர்ந்தோம்.  மெல்ல NASSCOM போன்ற அமைப்புகள் தமிழகத்திலிருந்து வெளிவரும் மென்பொறியாளர்களில் கிட்டத்தட்ட 25% பேர் கூட மென்பொறியாளராக தேவையான தகுதிகளோடு இல்லை (குறிப்பாக மென் திறன்கள் - soft skills) என ஆரம்பித்தன.  அதில் பெரும் உண்மையும் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

3-ல் இருக்கும்போது திடீரென பார்த்தால் திருப்பதி மொட்டை போல தெருவெல்லாம் பொறியாளர்கள் சொல்லப்போனால் வீட்டிற்கு 2 பொறியாளர்கள்.  தகுதிக்கேற்ற வேலை கிடைக்கவில்லை  அல்லது வேலைக்கேற்ற தகுதியில்லை என்கிற நிலை.  எத்தைத் தின்றால் பித்தம் தீரும் என்று யோசித்து VAO ஆரம்பித்து வங்கி clerk தொடங்கி கலை அறிவியல், பள்ளி படிப்பு மட்டும் முடித்தோரே பெரும்பாலும் விண்ணப்பிக்கும் எல்லா பணிக்கும் வரும் விண்ணப்பங்களில் பேர் பாதி பொறியாளர்கள் என்கிற நிலை வந்துவிட்டது. 

கடந்த மூன்று வருடங்களில் ஒரு பாடப்பிரிவில் 10 பேர் கூட நிரம்பாத பல பொறியியல் கல்லூரிகள் இருந்தன.  மூடவா, விற்கவா பள்ளியாக திருமணமண்டமாக மாற்றவா என கல்வித் தந்தைகள் யோசிக்கும் நிலையும் வந்துவிட்டது.  

4-ஐ எட்டும் வரை அடுத்த சில வருடங்கள் இப்படியேத்தான் போகும் பிறகு 4ல் சொன்னது போல் சமநிலை நிலவும்.  மீண்டும் இந்த சுழற்சி தொடங்கும். 

தற்போது மேற்சொன்ன 4 வித முறைகள் தாண்டி 'கிடைத்தல் அதிகமாகி பொருளின் தரமும் குறைந்தால்' என்கிற புதியதோர் சூழலில்தான் சிக்குண்டுள்ளோம்.   இச்சூழல் 4-ஐ எட்டி 2-ற்குப் போகும் வரை பொறியியலின் மீதான மதிப்பும், மோகமும் குறைந்தேதான் அல்லது இப்படியேதான் இருக்கும்.


இதெல்லாம் பொது விதிகள்...  ஆனால் எப்போதுமே தகுதியானவற்றிற்றுக் தரமானவற்றிக்கு அதற்கான மதிப்பு இருந்துகொண்டேதான் இருக்கும்.  வணிக வெற்றிக்கு ஒன்று சொல்வார்கள் 'ஒன்றை முதலில்  செய்ய வேண்டும் அல்லது சிறப்பாகச்/தரமாகச் செய்ய வேண்டும்'.  ஒன்றை முதலிலோ அல்லது சிறப்பாகவோச் செய்ய வேண்டும் என்றால் அது மனதிற்குப் பிடித்ததாக இருக்கவேண்டும் அதாவது மனதிற்குப் பிடித்ததைச் செய்ய வேண்டும்.  என்ன சொல்ல வருகிறேன் என்றால் பொறியியல் தான் உங்கள் மிகு விருப்பம்(passion) என்றால் இப்போதும் கூட அதையே தேர்ந்தெடுங்கள் யார் பேச்சையும் கேட்க வேண்டாம்.  இது போன்றதொர் பொன்னான வாய்ப்பு கிடைப்பது அரிது ஆமாம் உண்மையாகத்தான் சொல்கிறேன்.  பலரும் வேண்டாம் என்று ஓதுக்கும்போது உங்கள் மதிப்பெண் குறைவாய் இருந்தாலும்  நீங்கள் விரும்பிய பாடப்பிரிவு நீங்கள் விரும்பிய கல்லூரியில் கிடைப்பதற்கான வாய்ப்பு மிக அதிகம்.  அதை விடாமல் பற்றிக்கொண்டு மேலேறுவது உங்கள் திறம்.  இவ்வளவு கல்லூரிகள் (சில/பல தரமற்ற) தோன்றியதும் அதனால் ஊரெல்லாம் பொறியாளர்களாய் மாறியதும் அவர் சொன்னார், இவர் சொன்னார் என்றும், பிள்ளைகளின் விருப்பத்தை அறியாமல் பெற்றோர் பொறியியலில் சேர்த்து விட்டதும் தான் காரணம்.  பிள்ளைகளின் விருப்பம் அறியுங்கள் அவர்களுக்குத் தேவையான தகவல்களை பெற்றுக்கொடுங்கள் ஆனால் மேற்படிப்பிற்கான முடிவை அவர்களை எடுக்க விடுங்கள் அவர்கள் முடிவெடுக்கத் தடுமாறினால் உதவுங்கள் ஆனால் திணிக்காதீர்கள், நல்லதோர் தலைமுறை நாளை அல்ல நாள்தோறும் உருவாகும்.

அடுத்தப் பதிவு -> பொறியியல் தவிர்த்து என்ன படிக்கலாம்?

1 comment:

  1. Five Do’s For Writing An Essay
    Students use paraphrasing tools, Database assignment help and multiple other ways to check their writing content. Yet, there is a particular general guideline which they fail to flow due to which they end up losing marks. So today, we are going to state some significant Do's which should be included in every essay to get the best grades find Project Management assignment help.
    include transition
    Including transition sentences at the end and beginning of each paragraph helps to connect the two. Often due to lack of proper outline, the matter becomes very confusing without the correct presentation. Hence, all mini sections should be appropriately titled with statements that interconnect them with the previous matter. Transition sentences are helpful to enhance readability and keep it relevant. Even accounting assignment help experts use these tricks in their papers.
    use present tense
    Most experts in cheap assignment help service always use the present tense of writing. Writing in the current tense or active essay always shows higher engagement. Talking in the past tense while mentioning history is accepted, but try to keep it in present form for the rest of the essay. This feels like an interaction that keeps the readers hooked till the end.
    Advanced terms
    Using sophisticated terms help in showcasing knowledge. You can quickly lookup a thesaurus or online to find synonyms of similar words. Advanced terms can impress your teacher and show how professional you are with writing. Keep it readable by using simple sentences; however, make your knowledge by using high need terms here and there. When you go for  specialist, you will observe that experts use specific vocabulary, making their writing different from the basic ones.
    Answer what, when and how
    Content should be informational, which excites readers.
    Gear up your researching skills and provide information from credible sources. Gather exclusive data which makes your paper different from the rest. Provide insightful data in your article. An easy way to do it is by answering what, when and how in your paper. While proofreading, experts always lookout if their content is answering the essential questions that may arise.
    good presentation
    Apart from only taking care of the literature part, take care of the presentation too. Some generalized guidelines are followed for writing assignments. Like proper margin, readable font, not using too many bright colours and following instructions of teachers. A good presentation will always attract more eyeballs which aromatically class for more marks. Lookup for ideas or discuss innovative presentation ideas with known ones to get creative. Related service- Do my homework

    Students always want to get good grades through their writing. But often, it seems unachievable. Correct knowledge and a little information about the proper tactics can help students write the best essay.
    Source by- http://ketopialife.com/blogs/2426/5095/five-do-s-for-writing-an-essay

    ReplyDelete