Saturday, July 12, 2014

பட்ஜெட் - 2014


   மோடி தலைமையிலான பாஜக அரசின் முதலாவது நிதிநிலை அறிக்கை நேற்று இனிதே நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது.  இரண்டு நாட்களுக்கு முன்னதாக தான் இரயில்வே பட்ஜெட் பாராளுமன்றத்தில் திரு. சதானந்த கவுடாவால்  தாக்கல் செய்யப்பட்டது, மிகப்பெரிய எதிர்ப்புகள் ஏதும் இல்லாமல் ஏற்றுக்கொள்ளப்பட்ட (எங்கே எதிர்ப்பது? ஆளும் கட்சிக்கு மட்டுமே பெரும்பான்மை பலம் இல்லாமல் இருந்த ஒரு நாட்டில், முதல் முறையாக எதிர்கட்சிக்குப் பெரும்பான்மை இல்லாமல் போனது துரதிருஷ்டம்தான், தங்களுக்கு எதிர்கட்சி அந்தஸ்தை தர வேண்டும் என்று முறையிடும் அளவிற்கு ஆகிவிட்டதே.. பாவம்!) இது மிக சிறிய அளவிலான சலசலப்பை மட்டுமே ஏற்படுத்தியது(கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே தூரலோ, சிறு மழையோ...).  முந்தைய ஆட்சியில் பல புதிய இரயில்கள் தமிழகத்திற்கு கிடைத்தபோதும் சிறு சிறு சஞ்சலப்பு இருந்த தமிழகத்தில், இந்தமுறை மொத்தமாக வெறும் 4 இரயில்கள் மட்டுமே கிடைத்திருந்தாலும்(அதிலும் ஓன்றைத்தவிர மற்ற இரயில்கள் அனைத்தும் சென்னையிலிருந்து அப்படியே... அப்படியே வடக்கு நோக்கி சென்றுவிடுகிறது.. Actual-ஆ இந்த டிரெயின்லாம் வடநாட்டுக்காரன் மெட்ராசுக்கு சுலுவா வந்து போகதான்.  மின்சாரம், மருத்துவம், கல்வி போன்றே சென்னையில் இருப்பவர்கள் மட்டுமே மக்கள், மற்றோரெல்லாம் மாக்கள்)திமுக, அதிமுக இரண்டுமே நல்ல கருத்துகளையே உதிர்த்துள்ளது.  போதும் பாஸு, பொது பட்ஜெட்னு சொல்லிட்டு இரயில்கதைய சொல்லிட்டு இருக்கீங்க.... ம்.. வண்டிய நகத்துங்க...

   திரு அருண்ஜேட்லி அவர்கள் தயாரித்த இந்த பட்ஜெட்டில் மிகப்பெரிய சீர்திருத்தங்கள் என்று எதும் இல்லை என்றாலும் மிகப் பாதகமான அம்சங்களும் எதுவும் இல்லை என்பதால், மிகப்பெரிய வரவேற்பு இல்லை என்றாலும் மிகப்பெரிய எதிர்ப்பும் இல்லை (அம்மாடி, எவ்ளோ மிகப்பெரிய).  பட்ஜெட்டுக்குப் பின்னால் அரசின் பொருளாதார சீர்திருத்தங்கள், கொள்கைகள் எப்படி அமையுமோ? நாட்டின் முன்னேற்றத்திற்காக கசப்பு மருந்தைக் கொடுத்துவிடுவார்களோ என்று அஞ்சி சில மாதங்களாக வானம் தொட்டு வளர்ந்துகொண்டிருந்த பங்குச்சந்தைக்கூட ஒரே நாளில் 500த்தி சொச்சம் புள்ளிகள் இறங்கி தரையைத் தடவிக் கொண்டிருந்த்து.  ஊடகங்கள், ஒரே நாளில் இந்திய முதலீட்டார்களின் சொத்து சில ஆயிரம்/லட்சம் கோடிகள் காணாமல் போய்விட்டது என்று பிளிரிக்கொண்டிருந்தன.  ஆனால், நிதிநிலை அறிக்கை நாளான நேற்று(10-7-14) பங்குச்சந்தை அருண்ஜேட்லி அவர்களின் பேச்சைக் கேட்டுக் கேட்டு மெல்ல மேலெழுந்து வந்தது, திறந்த வீட்டிற்குள் வர எட்டிப்பார்க்கும் குட்டிப்பூனை போல.

   Salaried community எனப்படும் சம்பளக்காரர்களுக்கு ரசகுலா இல்லாவிட்டாலும் ரஸ்தாலி வாழைப்பழம் கொடுத்துள்ளார்.  ஆமாம், ஒட்டு மொத்தமாக இதுவரை இருக்கும் வரிச்சலுகைக்கு மேல் இன்னும் ஒரு லட்ச ரூபாய் வரிச்சலுகைக்குள் வந்திருக்கிறது.  வருமான வரிக்கான பிரிவுகளில்(Slab)-ல் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை என்றாலும் 5 லட்சம் வருமானம் இருப்பவர் 10,000 ருபாயும், 5-க்கு மேல் 10 லட்சம் வரை வருமானம் உள்ளவர் 20,000 ருபாயும், அதற்குமேல் உள்ளவர்கள் 30,000 ரூபாயும் வரி செலுத்துதலில் இருந்து மிச்சம் பிடிக்கலாம்.

                                                                       நடப்பிலிருப்பது        நடைமுறைக்கு வரவிருப்பது
வரி செலுத்துதலில் இருந்து விலக்கு :              2 லட்சம் வரை                    2.5 லட்சம் வரை
                                                                  (முதியோர் ; 2.5 லட்சம்)         (முதியோர் 3 லட்சம்)

80C பிரிவின் கீழான விலக்கு :                        1 லட்சம்                              1.5 லட்சம்
வீட்டுக்கடன் மீதான வரி விலக்கு ;                 1.5 லட்சம்                           2 லட்சம்

நிதிநிலை அறிக்கையில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது, என் கவனத்தை ஈர்த்த(ஆமா, பெரிய இவரு...  உண்மைய சொல்லு மத்த விஷயலாம் ஒனக்கு தெரியாது தானே..) சில புதிய (அ) பழைய திட்டங்கள்/துறைவாரியான நிதி ஒதுக்கீடுகள்/ புதிய அறிவிப்புகளை கீழே தந்துள்ளேன்.

* வளர்ச்சி 5.4 -லிருந்து 5.9 ஆக இருக்கும், நிதிப் பற்றாக்குறை 4.1 ஆக இருக்கும் இரு ஆண்டுகளில் 3 ஆக குறைக்கப்படும்.
* புதியதாக 5 IIT களும், 5 IIM களும் மேலும் 4 AIIMS மருத்துவமனைகளும் திறக்கப்பட உள்ளது
* அந்தமான் & நிக்கோபார் பகுதியில் தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்த 150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
*  பார்வைச் சவால் உடையோருக்கான புத்தகங்கள் அச்சிடும் பிரையல்(Brail) அச்சகங்கள் 15 புதியதாக மற்றும் இயங்கிவரும் 10 அச்சகங்கள் மேம்படுத்தப்பட உள்ளன.
* 200 கோடி ருபாய் செலவில் சர்தார் வல்லபாய் படேலுக்கு சிலை அமைத்தல். (குஜராத்காரர் அப்டின்றதனாலேயே காங்கிரஸ் இவருக்கு தர வேண்டிய மரியாதய கொடுக்கல, நான் ஆட்சிக்கு வந்தும் இவருக்கு பெரிய செல வப்பேனு மோடி எலக்சனப்ப சொன்னாருள்ள...)
* 2-ம் நிலை மற்றும் 3-ம் நிலை நகரங்களில் தனியாருடன் கூட்டு வைத்து(PPP - Private Public Partnership) விமான நிலையங்கள் அமைத்தல்.  (கொஞ்ச மாசத்துக்கு முன்னாடி கஸ்டமர் கம்மினு பாண்டிச்சேரிக்கு சர்வீஸ் இருந்த கடைசி ஏர்லைன்ஸ் நிறுவனமும் கடைய சாத்துனது ஞாபகம் இருக்கா?  டிரெயின் விலை ஏறுனதுனால இனி கொஞ்சம்பேரு ஃபிளைட் யூஸ் பண்ணா நல்ல சக்ஸஸ் ஆக சான்ஸ் இருக்குற ஒரு திட்டம்)
* காப்பீட்டுதுறை மற்றும் பாதுகாப்புத்துறையில் 26% லிருந்து 49% வரை அன்னிய நேரடி முதலீடு அனுமதிப்பு.  (அப்பாடா, 51%ஆக்கபோறாங்க அவ்ளோதான் நாம, வெளிநாட்டுக்காரன் கையில நம்மள அடகு வச்சிடுவாங்கனு பயமூர்த்திகிட்டே இருந்தாங்க நல்ல வேள..)
* புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல்(New and Renewable Energy) துறையில் முதலீடு 500 கோடி.  (தமிழ்நாடு இந்த லிஸ்ட்ல முக்கியமா சேர்க்கப்பட்டிருக்கு... நாம மின் மிகை மாநிலமா ஆயிடுவோமா... இல்ல சில பல வருஷங்களுக்குப் பிறகு 'அதுவே, பழகிடுமா' பாப்போம்.)
* ஆதி திராவிட நலன் மற்றும் முன்னேற்றத்திற்கு 50548 கோடி ஒதுக்கீடு.
* நீர்வழிப் போக்கு வரத்து (Jal Mark Vikas) மேம்பாட்டுக்கு 4200 கோடி.  (சென்னையில கூவத்துலயும் கால்வாய்லயும் மதராசப்பட்டினம் மாதிரி போட் போகும்னுலாம் எதிர்பாக்காதீங்க... )
* விவசா(யம்)யிகளுக்கான தொலைக்காட்சி சேவை 100 கோடி.
* புதிய விவசாயப் பல்கலைக்கழகங்கள் அமைக்க 200 கோடி.
* 4 AIIMS மருத்துவமனைகள் உருவாக்க 500 கோடி.
* மெட்ரோ இரயில் திட்டத்திற்கு 100 கோடி.
* கிராமப்புறங்களுக்கு இணையம் மற்றும் தொழில்நுட்பத்தை கொண்டு சேர்க்க 500 கோடி.
* பாதுகாப்புத்துறையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர்களுக்கு ஒரு-தகுதி-ஒரு-ஓய்வூதியம் (One rank - one pension) 1000 கோடி.  (இப்ப புரியுதுங்களா ஏன் கவர்மென்ட்டு பென்சன்லாம் இனிமே புச்சா வேலைக்கு(பாதுகாப்புத் துறை தவிர்த்து, இப்பொழுதும் இவர்களுக்கு மட்டும் ஓய்வூதியத்திலிருந்து, மானியம் வரை எல்லா சலுகையும் உண்டு) சேர்ரவங்களுக்கு கெடையாதுனு ஏன் சொல்லிச்சுனு? 1000 கோடி ரூவா... )
* பொதுச் சேம நல நிதியில் முதலீடு செய்யும் தொகைக்கான உச்சவரம்பு 1 லிருந்து 1.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

Sunday, June 8, 2014

தகவல் தொழில் நுட்ப உலகம் கடந்த வாரம் (01-06-14 முதல் 07-06-14 வரை)

ஐபிஎம் நிறுவனம் இணைய உலாவி மூலம் நடைபெறும் தவறுகளைத் தடுக்கும் ஒரு புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கி காப்புரிமை பெற்றுள்ளது.

கூகுளின் பிளேஸ்டோர் பேபால் ஆதரவு மற்றும் எளிமையாக்கப்பட்ட செயலி அனுமதிகளுடன் நடைமுறைக்கு வந்துள்ளது.

சாம்சங் நிறுவனம் 7 இன்ச் திரையுடன் கூடிய சாம்சங் கேலக்ஸி டபுள்யு(Galaxy W) என்கிற அதன் (பெரிய) நுண்ணறிபேசியை அறிமுகப்படுத்தவுள்ளது.

மொத்தமுள்ள டிவிட்டர் பயனர்களில் 44% பேர் ஒரு முறைகூட எந்த டிவிட்டும் செய்ததில்லை என்று தரவுகள் தெரிவிக்கின்றன.

அலைபேசி விளையாட்டான டெம்பிள்ரன் இதுவரை 100கோடி முறை தரவிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலைபேசி புகைப்பட திருத்தி செயலியான இன்ஸ்டாகிராம் மேலும் பல புதிய கருவிகளை அதன் செயலியில் சேர்த்துள்ளது.

ஆப்பிள் நிறுவனம் ஸ்விஃப்ட்(swift) என்கிற பெயரில் புதிய கணினி மொழியை உருவாக்கியுள்ளது.

ஐஐடி-கான்பூர் தனது இரண்டாவது மீகணினி(Super Computer)யை அறிமுகப்படுத்தியுள்ளது.

விண்டோஸ் அலைபேசிகளுக்கான வாட்ஸ்ஆப் செயலி புதிய பிழை திருத்தங்கள் மற்றும் சிறப்பம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.

முந்தைய தகவல் தொழில்நுட்ப உலகச் செய்திகள் பதிவு

தகவல் தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் (25-5-14 முதல் 31-5-14)


வருங்காலத்தில் நுண்ணறிபேசிகளில் தரவிறக்கிப் பயன்படுத்தப்படும் வங்கி சம்பந்தப்பட்ட செயலிகள் கொந்தர்களால்(hacker) அதிகம் பாதிக்கப்படும் ஒன்றாக இருக்கும் துறை நிபுணர்கள் கருதுகிறார்கள்.

நுண்ணறிபேசி புகைப்படச் செயலியான இன்ஸ்டாகிராம் ஈரான் நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது.

சேல்ஸ்ஃபோர்ஸ் நிறுவனம் சேல்ஸ்ஃபோர்ஸ்1 என்கிற பெயரில் ஒரு புதிய நுண்ணறிபேசி செயலியை அறிமுகப்படுத்தவுள்ளது.

கூகுள் நிறுவனமானது ஸ்கைபாக்ஸ் இமேஜிங் என்கிற செயற்கைகோள் உருவாக்கம் மற்றும் தரவுமைய நிறுவுதல் துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனத்தை கையகப்படுத்தவுள்ளதாக அறியப்படுகிறது.

பிலிப்ஸ் நிறுவனம் இந்தியாவில் மீண்டும் தனது நுண்ணறி அலைபேசிகளை அறிமுகப்படுத்தி இந்தியச் சந்தையில் நுழையவுள்ளது.

ஃபிளிப்கார்ட் நிறுவனம் $210 மில்லியனை 4 முதலீட்டார்களிடம் பெற்றுள்ளது.

இந்தியாவில் மின்-வணிகம் (E-Commerce) வரும் வருடத்தில் சுமார் 50,000 பணிகளை உருவாக்கும் என கருதப்படுகிறது.

இன்போசிஸ் நிறுவனம் அதன் அடுத்த முதன்மைச் செயலதிகாரிப் பதவிக்கு சரியான நபரை தேர்ந்தெடுக்கவுள்ளது.  முக்கியமான விஷயம் என்னவென்றால் முதன்முறையாக இன்போசிஸ் நிறுவனர்கள் 7 பேர் அல்லாத ஒருவரை அப்பதவிக்கு தேர்ந்தெடுக்கவுள்ளனர்.

ஸ்னாப்டீல் நிறுவனம் தனது தரவுதளத்தை மாங்கோடிபி-க்கு மாற்றவுள்ளது.  இதன்முலம் தனது பயனர்களுக்கு வேகமான, மிகச் சிறப்பான பயன்பாட்டு அனுபவத்தைக் கொடுக்கவுள்ளதாகவும் கூறியுள்ளது.

சீன அரசு, தனது அரசு அலுவலகப் பயன்பாட்டிற்காக வாங்கும் கணினிகளில் இனி விண்டோஸை நிறுவப்போவதில்லை என அறிவித்துள்ளது.

இதுவரை கருத்தளவில் இருந்து வந்த கூகுள் (நுண்ணறி) தானியங்கு மகிழ்வுந்து வெளியீட்டுக்கு தயாராகிவிட்டது.  கூடுதல் தகவல் இந்த மகிழ்வுந்தில் திருப்புவதற்கான சுக்கானோ(steering), வேகம் முடுக்கியோ(accelerator) கிடையாது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது மேகக் கணிமை தொழில்நுட்பத்தினை பரவலாக்குவதற்காக சேல்ஸ்ஃபோர்ஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது.

முந்தைய தகவல் தொழில்நுட்ப உலகச் செய்திகள் பதிவு

Sunday, May 25, 2014

தகவல் தொழில்நுட்ப உலகம் கடந்தவாரம் (18-5-14 முதல் 24-5-14 வரை)


மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ-ஈ  (Moto-E) என்ற பெயரில் ஒரு புதிய பட்ஜெட் ஃபோனை அறிமுகப்படுத்தியுள்ளது. 

கூகுள் நிறுவனம், ஆப்பிள் நிறுவனத்தைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளதாக ஒரு கருத்துகணிப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

வரும் 2015-ம் ஆண்டில் லெனோவா நிறுவனமும் அணிகணினி தொழில்நுட்பத்தில் நுழையவுள்ளதாக தெரிகிறது.

இணையதளம் மூலம் பொருட்களை விற்பனை செய்யும் ஃபிளிப்கார்ட் நிறுவனம், மியன்தாரா(myntra) என்கிற மற்றொரு நிறுவனத்தை கையகப்படுத்தவுள்ளதாக தெரிகிறது.

ஈ-பே (ebay) நிறுவனத்தின் தரவுதளம் கொந்தர்களால் சமரசம் (compromised) செயப்பட்டதால் இந்நிறுவனம் தனது பயனர்களை தங்கள் கடவுச்சொற்களை மாற்றுமாறு கூறியுள்ளது.

முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஹெச்பி(hp) ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்களை தெரிவிக்கின்றன.

கூகுள் நிறுவனம் முப்பரிமாண புகைப்படங்களை எடுக்கவல்ல பலகை/சிலேட்டு/குளிகை (Tablet) கணினிகளை உருவாக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முந்தைய தகவல் தொழில்நுட்ப உலகம் பதிவு

Monday, May 19, 2014

16-வது நாடாளுமன்றத் தேர்தல்

நடந்து முடிந்த 16-வது நாடாளுமன்றத் தேர்தல் பலருக்கும் பலவிதமான எண்ணங்களை உருவாக்கியிருக்கலாம், நானும் விதிவிலக்கல்லவே.. என் மனதில் சிதறலாகத் தோன்றிய எண்ணங்களை சற்றே சரி செய்து இந்தப் பதிவில் எழுதியிருக்கிறேன், நிச்சயாமக ஒரு கோர்வையாக இருக்காது.  எண்ணங்கள் பெரும்பாலும் கோர்வையாக இருக்காது அல்லவா? அதனால அட்ஜஸ்ட் பண்ணி படிச்சிக்கோங்க... (ஆமா, எத்தன பேரு இந்த பிளாக்க படிக்கறாங்கனுலாம் கேக்கக்கூடாது சரியா...)

இந்தியாவில் மொத்தம் 543 பாராளுமன்றத் தொகுதிகள் இருக்கின்றன.  இதில் ஒரு கட்சி மத்தியில் ஆட்சி அமைக்கவேண்டுமானால் அதற்கு (மொத்த தொகுதிகள்)/2 + 1 இடங்களைப் பெறவேண்டும்.  1984-ல் இராஜீவ் காந்தியின் ஆட்சிக்குப்பிறகு இந்தியாவில் இன்றுவரை தனிப்பெரும்பான்மையுடன் எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்கவில்லை.  (1984-ல் இந்திராகாந்தியின் படுகொலையின் அனுதாப அலையும், இராஜீவ் காந்திக்கு இயல்பாகவே அமைந்திருந்த மக்கள் வசீகர தன்மையும் இணைந்து 414 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.)  இந்த முறை 30 வருடங்களுக்குப் பிறகு அதுபோன்றதொரு தனிப்பெரும்பான்மையுடன் முதல் முறையாக காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சி (பாஜக) மத்தியில் ஆட்சியமைக்கவுள்ளது.  இதற்கு எந்த அனுதாப அலையும் காரணம் இல்லையென்றாலும், மக்களுக்கு காங்கிரஸின் மீதிருந்த கோபமும், நரேந்திர மோடியின் மக்கள் வசீகரத் தன்மையும் இணைந்து அதை நிறைவேற்றியுள்ளது.  பாஜக சார்பில் அத்வானி பிரதம வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தால் இதுபோன்றதொரு வெற்றி சாத்தியமா என்பது கூட கேள்விக்குறிதான். 

  நரேந்திர மோடியையும் சாதாரணமாக சொல்வதற்கில்லை, இந்த வெற்றிக்காக உண்மையில் மிகவும் பாடுபட்டிருக்கிறார்.  (மோடி எப்படிப்பட்ட மனிதர், மதவாதியா, என்பற்குள் எல்லாம் நான் வரவில்லை.)  இதுவரை நீங்களும், நானும் அறிந்தவரையில் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாடு முழுவதும் சுற்றிச் சுழன்று அதிகமாகப் பிரச்சாரம் செய்தவர் மோடியே என்று செய்தித்தாள்களும், தொலைக்காட்சிகளும் சான்று தருகின்றன.  தமிழ்நாட்டில் பெரிய வாக்கு வங்கி இல்லாத நிலையிலும் கூட பல முறை பிரச்சாரத்திற்காக மோடி வந்துள்ளார் என்றால் பாஜக-வின் வாக்குவங்கிகளாக, கோட்டைகளாக இருக்கும் மற்ற மாநிலங்களில் எத்தனைமுறை சென்றிருப்பார் என்று நீங்களே எண்ணிக் கொள்ளுங்கள்.

சரி நாடுமுழுவதுமான தேர்தல் நிலவரத்திற்கு வருவோம்:
இந்தியாவின் பிரதமரை முடிவுசெய்யும் மாநிலங்கள் என்று 6 மாநிலங்களை சொல்லலாம் [அடைப்புக்குள் (மாநிலத்தின் மொத்த நாடாளுமன்றதொகுதிகள் - பாஜக வெற்றிபெற்ற தொகுதிகள்)] அவை உத்திரப்பிரதேசம்(80-71), மாகாராஷ்டிரா(48-23), ஆந்திரப்பிரதேசம்(42-4), மேற்குவங்காளம்(42-2), பீகார்(40-22), தமிழ்நாடு(39-1) மொத்தம்(291-123).  ஆம், நீங்கள் கிட்டத்தட்ட இந்த 6 மாநிலங்களிலிருந்து மட்டுமே பாஜக அதன் மொத்த இடங்களில் கிட்டத்தட்ட 40% இடங்களைப் பெற்றுள்ளது. 

பாஜக கோவா(2), இமாச்சலப் பிரதேசம்(4), இராஜஸ்தான்(25), குஜராத்(26), உத்ராகண்ட்(5), சண்டிகர்(1), தாத்ரா ஹவேலி(1), டாமன் டையூ(1), டெல்லி(7), அந்தமான் நிக்கோபார்(1)  ஆகிய மாநிலங்களில் மொத்த இடங்களையும் கைப்பற்றியுள்ளது.  கேரளாவில் மட்டும் இன்றுவரை(ஆம், இன்றுவரை கேரளாவிலுள்ள எந்த நாடளுமன்றத் தொகுதியிலும், எப்போது நடந்த தேர்தலிலும்.  இந்தமுறை தொடக்கத்தில் திருவனந்தபுரத்தில் பாஜக வேட்பாளருக்கும் சசிதரூருக்கும் ஆரம்பத்தில் இருந்து இழுபறி இருந்தாலும் கடைசியில் சசிதரூர் வென்றுவிட்டார்) பாஜக தனது கணக்கைத் தொடங்கவில்லை.

டெல்லிக்கு நடந்த மாநிலத்தேர்தலில் சிறப்பாக செயல்பட்டு நல்ல எண்ணிக்கையில் இடங்களைப்பெற்ற பாஜக அதை அப்படியே முன்னேற்றி டெல்லியின் மொத்த 7 இடங்களையும் கைப்பற்றி ஆம் ஆத்மி கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது.  மொத்தம் 4 இடங்களைப் பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சி 4-ம் பஞ்சாபிலிருந்தே பெற்றுள்ளது, ஆச்சர்யப்படும் வகையில் டெல்லியில் மாநில ஆட்சியைப் பிடிக்கும் வரை சென்ற ஆம் ஆத்மி அங்கு ஒரு இடத்தைக்கூட பிடிக்கவில்லை.

நம்பினால் நம்புங்கள் இந்தியாவிலேயே தற்போது 3-வது பெரிய கட்சி(எம்பி-களின் எண்ணிக்கை அடிப்படையில்) அதிமுகதான்.  ஆம்,
பாஜக - 283 (கூட்டணி கட்சிகளின் இடங்களில்லாமல்)
காங் - 44 (கூட்டணி கட்சிகளின் இடங்களில்லாமல்)
அதிமுக - 37
திரிணமுல் காங். - 34

இத்தனைக்கும் அதிமுக தேசிய கட்சி இல்லை ஒரு மாநிலக் கட்சிதான்.  (இந்தியாவின் தேசிய கட்சிகளாக அங்கீகாரம் பெற்றவை காங்கிரஸ், பாஜக, தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ், மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஆகியவை மட்டுமே).  தேசிய கட்சிகளில் ஒன்றான பகுஜன் சமாஜ் இந்தமுறை ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை.  ஒன்று மட்டும் தெளிவு என்னதான் நாடு முழுவதும் மோடி அலையடித்தாலும்  தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களை அது ஒரு சிறிதும் பாதிக்கவில்லை.  பாஜக தென் மாநிலங்களில் தனது இருப்பை இன்னும் நிலைபடுத்திக்கொள்ள வேண்டும்.

தேசிய அளவில் முக்கியத் தலைவர்களான ஜஸ்வந்த்சிங், கபில்சிபல், அருண் ஜேட்லி, அரவிந்த் கேஜ்ரிவால் போன்றோரின் தோல்வி பலருக்கும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

தமிழ்நாடு:
பெரும்பாலான கருத்துக் கணிப்புகளையெல்லாம் தவிடுபொடியாக்கி அதிமுக மொத்தமுள்ள 39 இடங்களில் 37 கைப்பற்றி விஸ்வரூப வெற்றி பெற்றுள்ளது, அதுவும் கூட்டணி ஏதும் இன்றி தனியாகவே.  பெரும்பாலான தொகுதிகளில் திமுகதான் இரண்டாவது இடம் அதுவும் முதல் இடத்தைப்போல 3/4 பங்கு வாக்குகளைப் பெற்றுள்ளது.  இருந்தாலும் எந்தவொரு தொகுதியிலுமே வெற்றி பெறாமல் பூச்சியமாகிப்போனது துரதிஷ்டம் தான்.  தமிழ்நாட்டில் ஆம் ஆத்மி கட்சி ஒரு சிறு சலனத்தையாவது ஏற்படுத்தும் என்று எதிர்பார்த்தேன் கூடங்குளம் உதயகுமார் கூட ஒன்றும் செய்யமுடியவில்லையே வருத்தமாகத்தான் இருக்கிறது. பதிவான மொத்த வாக்குகளில் 1-4% வாக்குகளையாவது பெறுவார்கள் என்று எதிர்பார்த்தேன் ஆனால் 0.5% உடன் திருப்தி அடைந்துவிட்டது.  பராவாயில்லை கட்சியின் முதல் நாடாளுமன்றத்தேர்தல் தானே. 

கட்சி ஆரம்பித்த சில வருடங்களிலேயே திமுக-வையும் விஞ்சி தமிழ்நாட்டில் எதிர்கட்சி என்கிற நிலை வரை உயர்ந்த தேமுதிக அதை சரியாக பயன்படுத்தவில்லை.  போதாத குறைக்கு 6 கட்சிகளுடன் பாஜக போன்ற தேசியகட்சிகளுடன் கூட்டணியில் இருந்தாலும் அதன் வாக்கு வங்கி பாதியாக சரிந்துவிட்டது.

நானறிந்த வரையில் ராமசுப்பு  நல்ல மனிதர்.  சில மாதங்களுக்கு முன்பு கூட செய்திதாள்களில் எல்லாம் பாராளுமன்றத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டோருக்கு விருது வழங்கப்பட்டதைக் குறித்தான செய்திகள் வந்திருந்தன.  அதில் ராமசுப்பு அவர்கள் 1000 மேற்பட்ட கேள்விகள் கேட்டதற்காகவும் பாராளுமன்ற வருகை அதிகம் இருந்ததற்காகவும் விருதுகூட வாங்கினார் என்று குறிப்பிட்டிருந்தது..  ஆனால் இதே நெல்லையில் 2009 தேர்தலில் 2,74,000+ வாக்குகள் பெற்றவருக்கு இந்தத் தேர்தலில்   நாம் தந்திருப்பது வெறும் 64,000+ வாக்குகள், 4ல் ஒரு பங்கு கூட கிடையாது.  என்ன சொல்வது?
என்று நம் மக்கள் தங்கள் கட்சி அடையாளலங்களைத் தாண்டி நல்ல மனிதரை ஆதரிக்கத் தொடங்குகிறார்களோ அன்று தான் விடியும். 
நோட்டா:
இந்தமுறை தமிழகத்தின் பல தொகுதிகளிலும் 3-வது இடத்தைப் நோட்டா பிடத்துவிட்டது.   நீலகிரியில் நோட்டா மட்டும் 40,000+ வாக்குகளை அள்ளிக் குவித்துள்ளது.  மக்களிடம் நல்ல விழிப்புணர்வு வந்தவிட்டதைத்தான் இது காட்டுகிறது. ஆனாலும் நோட்டா முதல் இடத்தைப் பிடித்தாலும் இரண்டாவதாக வரும் வேட்பாளர் நாடளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் படுவார் என்கிற தேர்தல் ஆணையத்தின் முடிவுதான் குழப்பமாகவே இருக்கிறது.  பாதிபேர் இதனாலே "யாரையும் புடிக்கிலனு நோட்டாவுல போட்டு என்னா புண்ணியம், எப்படியும் திரும்பவும் ஒரு ஃப்ராடுதான் வருவான்னா நான் வோட்டு போடாமலே இருப்பனே" என்கிறார்கள் அவர்கள் சொல்வதும் சரியாகத்தான் படுகிறது.

30 வருடங்களுக்கு பிறகு எதிர்கட்சி இல்லாத( = சக்திவாய்ந்த - ஒரு தனியான) ஒரு பாராளுமன்ற அமைச்சரவை இதுதான்.  ஆளும் கட்சி நினைத்ததை செய்யலாம், அவர்கள் நல்லதே நினைக்கவேண்டும் என்பதே நம் பிராரத்தனை. 

எண்ணிய முடிதல் வேண்டும்; நல்லவே எண்ணல் வேண்டும் - பாரதி