நண்பனிடம், "நீ வராட்டாலும் நான் கண்டிப்பா குக்கூ படம்பாக்கப் போவேன்டா" என்றேன். "ஏன்?" என்றான். படத்தின் (கதை மற்றும்)இயக்குனர் ராஜுமுருகன் அதனால் என்றேன். அவனுக்கு ராஜுமுருகனைத்தெரியாது, "யார்?" என்றான். "எனக்கு மிகப் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர்(இன்னும் பலர் இருந்தாலும், ராஜுமுருகனினைப் பற்றிக்கூறும் போதே தவிர்க்கமுடியாமல் நினைவுக்கு வரும் மற்றொருவர் எழுத்தாளர் சுகா)" என்றேன்.
ராஜூமுருகனைப் படித்தவர்களுக்குத்("வட்டியும் முதலும்") தெரியும், அவர் எழுத்தின் வலிமை எப்படிப்பட்டதென்று, மனதின் அடி ஆழம்வரை சென்று தொட்டுப்பாரக்கக் கூடியது அவரின் எழுத்து, படித்துக்கொண்டிருக்கும்போதே வாசகனை அழ வைத்துவிடுவார். ஆனால், அவர் எழுத்து முழுவதுமே அவர் பார்த்த/அனுபவித்த/நிகழ்வின் ஒரு பகுதியாய் இருந்த/கேட்ட (குறிப்பாக சாமானிய மனிதர்களின்) அனுபவங்கள் மட்டுமே. "குக்கூ" படத்தின் டிரெய்லரே பலரின் மனதையும் தொட்டுச் சென்றதில் ஆச்சரியம் ஏதுமில்லை.
அலுவலக நண்பர் ஒருவர் இன்று படம் 'பார்த்துக்கொண்டிருக்கும் போதே' அலைபேசியில் அழைத்தார். "படம் அற்புதம், கொஞ்சம் ஸ்லோ... ஆனா அட்டகாசம்... படத்துல ஹீரோ, ஹீரோயின் சேரணும்னு படம் பாக்குற எல்லாரோட மனசும் கிடந்து அலையுது" என்றார். கூடவே படத்தின் கதையை சொல்ல ஆரம்பித்தார். "பாஸ் ப்ளீஸ், தயவு செஞ்சு கதைய எனக்கு சொல்லிடாதீங்க" அப்படியென்று சொல்லிவிட்டேன்.
நண்பன் ஒருவன் இன்போசிஸ் நிறுவனத்தில் பணிபுரிகிறான், பக்காவான ஆள், அற்புதமாக வேலை பார்ப்பான், ஆனால் இந்த மெயில் அனுப்புவது, டைப் அடிப்பது, டாக்குமென்ட் அடிப்பது இதெல்லாம் அவனுக்கு சரிபட்டு வராது. அவன் இருக்கும் புராஜெக்ட் டெட்லைனை நெருங்கிக்கொண்டிருப்பதால் பணிப்பளு அதிகமாயிருப்பதாக கூறியிருக்கிறான்.
ஒருநாள் அவன் கேண்டினுக்கு சாப்பிடப்போயிருக்கும் போது அவனுடைய டீம் லீடரும் அங்கே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்திருக்கிறார், நண்பனை அழைத்து, "பேசாம நீங்க டீம் லீடர் ஆயிடுங்க குருசாமி" என்றிருக்கிறார் (பாவம் அவருக்கு என்ன குடைச்சலோ?). அதன் பிறகான உரையாடலைப் பாருங்கள்/படியுங்கள்.
"வேணாம் சார்.." "ஏம்பா... வேணாங்கற..?" "சார், நான் இன்னும் ஒரு 3 வருசமாவது இன்போசிஸ்-ல வேலைல இருக்கனும்னு நினைக்கிறேன்..." "புரியலையே, என்னப்பா சொல்ல வர்ற? அதுக்கும் டீம் லீடர் ஆகறத்துக்கும் என்ன சம்பந்தம்?" "இல்ல, என்னோட பழைய கம்பெனில என்ன டீம் லீடர் ஆக்கப்போறேன் சொல்ல ஆரம்பிச்சதுலேர்ந்துதான் நான் புது வேல தேட ஆரம்பிச்சேன்.. அப்ப நான் அந்த கம்பெனில சேந்து 2 வருசம்தான் ஆயிருந்துச்சு. எப்ப, கிட்டதட்ட டீம் லீடர்னு கன்பார்ம் பண்ண முடிவெடுத்தாங்களோ, அப்பதான் இன்னும் வேகமா வேல தேடி இன்போசிஸ்ல வந்து சேர்ந்தேன் அதான்" டீம் லீடர் (சிரித்துக் கொண்டே) "சரி சரி... "
என்று அனுப்பிவிட்டார்.
அப்புறமா விவரம் கேட்டாதான் சொல்றான், அவர் "ஏன்... வேணாங்கற..?" னு கேட்ட உடனே "அது ஒரு மொக்க வேல சார்"-னு பதில் தொண்ட வரைக்கும் வந்துடுச்சி, எப்படியோ கண்ட்ரோல் பண்ணி எச்சிலோட முழுங்கிட்டேன். "மனுசன் பாப்பானாடா இந்த டாக்குமெண்ட அடிக்கிற வேலைய? மொக்க வேலடா அது" அப்படின்னான்.
புத்தகத்தின் அட்டையிலேயே குறிப்பிட்டுவிடுகிறார்கள் 'சமகால அரசியல் நிகழ்வுகளைப் புதிய கோணத்தில் அணுகும் அரசியல் அங்கத நாவல்' என்று.
ஒரு அரசியல்வாதி அவருடைய சுயசரிதையை எழுதும் கோஸ்ட் எழுத்தாளர் (Ghostwriter) ஒருவர், அரசியல்வாதியின் நண்பர், ஒரு கொலை, அரசியல், போலிஸ், துரோகம் இவ்வளவையும் வைத்து சமகால(என்றால் 1980-களில்) அரசியலை விறுவிறு திரில்லராக 136 பக்கங்களில் சித்தரித்து உருவாக்கியுள்ளார் எழுத்தாளர் இபா.
அரசியல்வாதி பிரும்மநாயகம் (சிவஞானம்)
(கோஸ்ட்) எழுத்தாளர் வாசு
அரசியல்வாதியின் நண்பர் தணிகை
போலிஸ் ஆலிவர்
போன்று வெகு சில பாத்திரங்களே கதையில் வந்தாலும் தேவையில்லாத நீட்டல் முழக்கள்கள் இல்லாமல் அதேசமயம் ஒடைபோல தெளிவாக கதை நகர்ந்து கொண்டேயிருக்கிறது.
புத்தகத்தின் சிறப்பு அதன் விறுவிறுப்பும், எளிய நடையுடன் கூடிய யதார்த்தமும்தான் அதனால் புத்தகத்தை கீழே வைக்கவே மனம் வரவில்லை, புத்தகத்தை 2-3 நாட்கள் எல்லாம் வைத்து படிக்க வேண்டியதில்லை.. சேர்ந்தார்போல் ஒரு 1-11/2 மணிநேரம் இருந்தால் போதும் ஒரே மூச்சில் படித்து முடித்துவிடலாம். எழுத்தாளனாய் வாழ்வது, அதுவும் சமூக அங்கீகாரம் இல்லாத எழுத்தாளனாக வாழ்வது எவ்வளவு வேதனையானது என்று ஆங்காங்கே வாசுவின் கதாப்பாத்திரம் குறிப்பால் உணர்த்துகிறது. 10-20 வருடங்களுக்கு முன் வந்த கதையிலேயே கௌரவ டாக்டர் பட்டம் என்ன பாடு படுகிறது என்பது தெரிகிறது. இன்றைய நிலைமையை நினைத்துப் பார்த்துக்கொள்ளுங்கள். அரசியல்வாதிகளுக்கு பணம் டிரஸ்ட் வழியாகப் போவது, அதிகாரமும் பதவி மோகமும் எப்படி ஒரு மனிதனை மாற்றும் என்பதும், சாதரணமாக மிகச்சாதரணமாக வாழ்கையை ஆரம்பக்கும் அரசியல்வாதிகள் பெரிய நிலையை எட்டுவதும் பின்னர் தங்கள் பழைய அடையாளங்களை மறைத்து அல்லது திருத்திக்கொள்வது, கட்சி அரசியல் ஜாதிக்கார வேட்பாளர், இடைத்தேர்தல், கிட்டத்தட்ட இன்றைய பேய்டு நியூஸ் (paid news) களை நினைவுப்படுத்தும் பத்திரிக்கை நிகழ்வுகள், கோப்புகளை திருத்துவது என எல்லாமே இருக்கிறது கதையில் இதில் பலவும் இன்றுவரை மாறவில்லை என்பதும் நிதர்சனமே.
கதையில் தென்னாற்காடு மாவட்ட (இன்றைய கடலூர் மாவட்டம்) இடைத்தேர்தலும் அதற்கு படையாச்சி(வன்னியர்) வேட்பாளர் நிறுத்துவது குறித்தும் செய்தி வருகிறது. இன்றும் கடலூர், விழுப்புரம் போன்ற வட தமிழக மாவட்டங்களில் இப்படி ஜாதி அரசியல் நடப்பதும், வேற்று கட்சியினரும் குறிப்பிட்ட சாதி வேட்பாளரையே தங்கள் சார்பில் நிற்க வைப்பதும் எல்லோரும் அறிந்ததே.
நறுக்கு தெரிக்கும் வசனங்கள்
1. பிரும்மநாயகம், வாசுவிடம் 'அரசியல்லே நல்லது கெட்டதுன்னு எதுவும் கிடையு எதைப்பத்தியும் உனக்குச் சொந்த அபிப்பிராயம் இருக்கக் கூடாது. நீ என்னோட நிழல். நிழல் ஊமை பேசாது. புரிஞ்சுதா?'
2. பிரும்மநாயகம் வாசுவிடம் ஆராய்ச்சிக் கட்டுரை எழுத பணிக்கும்போது,
'மக்கள் இத நம்புவாங்களா?
நம்பும்படியா எழுதவேண்டியது உன்வேலை. அங்கேயிருக்கிற பாறைக்கு இத்தனை வயசு, பள்ளத்துக்கு அத்தனை வயசுனு ஒருத்தருக்கும் புரியாம நாலைஞ்சு இங்கிலீஷ் வார்த்தகளையெல்லாம் போட்டுக் குழப்பி, மேலெழுத்தும் அடியழித்துமா ஒரு ஆராய்ச்சி கட்டுரை உன்னாலே எழுதவா முடியாது? இது உன் கற்பனைக்கு ஒரு சவால் மாதிரின்னு வச்சுக்க. பின்னாலே என் சுயசரிதை எழுத ஒரு பயிற்சி. அவ்வளவுதானே?
உங்க சுயசரிதையும் என் கற்பனைக்கு ஒரு சவாலுங்களா?'
3. ஆலிவர் வாசுவிடம்
'உங்க சத்தியத்துக்கு இதுதான் சோதனை..
இந்திரா பார்த்தசாரதி - படம் தமிழ் விக்கிப்பீடியாவிலிருந்து
சத்தியத்திலே என் சத்தியம் உன் சத்தியம் வெவ்வேறே இருக்குதா?
இருக்கு. இதுதான் அரசியல்லே முதல் அரிச்சுவடி பாடம். '
இன்னும் நிறைய நறுக்குத் தெரிக்கும் வசனங்கள் இருக்கின்றன, படித்துப் பாருங்கள்.
அலைபேசி தயாரிப்பு நிறுவனமான லாவா(lava) 2015 மார்ச் வாக்கில் தங்கள்
நிறுவனத்தினை பில்லியன் டாலர் மதிப்புடையதாக மாற்ற வேண்டும் என திட்டம்
வகுத்துள்ளது.
கூகுள் நிறுவனம் ஒரு நுண்ணறி contact lens -ஐ
உருவாக்கி வருவதாக தகவல்கள் கசிந்துள்ளது. இது, மனிதனின் இரத்த குளுக்கோஸ்
அளவை தானாகவே குறிப்பிட்ட இடைவெளிகளில் பதிவுசெய்துகொள்ளும் என்று
கூறப்படுகிறது. இது மட்டும் சாத்தியப்பட்டால் சர்க்கரை
வியாதியஸ்தர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும்.
2014-ம் ஆண்டில்
உலகளவில் நுண்ணறி அலைபேசி பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 1.75 பில்லியன்
அளவிற்கு அதிகரிக்கும் என்று eMarketer எனும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
2013-ம் ஆண்டு செய்யப்பட்ட காப்புரிமைகளில் 6809 காப்புரிமைகளுடன் ஐபிஎம் நிறுவனம் தொடர்ந்து முன்னிநிலையில் உள்ளது. இதைத் தொடர்ந்து சாம்சங், கேனான் போன்ற நிறுவனங்கள் உள்ளன. கூகுள் நிறுவனம் 11வது இடத்தில் உள்ளது.
சீனா தனது சொந்தத் தயாரிப்பாக ஒரு புதிய அலைபேசி இயங்குதளத்தை வெளியிட்டுள்ளது. மேலும் இது ஆன்ட்ராய்டு, ஐபோன் போன்றவற்றைவிட அதிக பாதுக்காப்பானதாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மிகப் பிரபலமான அலைபேசி/உலாவி விளையாட்டான கேண்டி கிரஷ் விளையாட்டின் உருவாக்குனர்கள் கேண்டி என்கிற வார்த்தைக்கு காப்புரிமைப் பெற்றுவிட்டனர்.
அலைபேசி பேச்சு செயலியான வாட்ஸ்ஆப்(Whatsapp) தனது மாதாந்திர இயக்கத்திலுள்ள பயனர்களின் எண்ணிக்கை 450 மில்லியன் என்று அறிவித்துள்ளது. மேலும், இதில் 35 மில்லியன் இந்திய பயனர்கள் ஆவர் என்பது குறிப்பிடத்ததக்கது.
புதிதாக நடத்தப்பட்ட நுகர்வோர் அனுபவத்தின் அடிப்படையிலான கணக்கெடுப்பின்(Consumer Experience Survey) அடிப்படையில் ஆப்பிள் நிறுவனம் மைக்ரோசாப்ட், சாம்சங், சோனி ஆகிய நிறுவனங்களுக்கு அடுத்து 4வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
பெரிய நிறுவனங்கள், இணையதள பாதுகாப்பு(CyberSecurity) வல்லுனர்களின் எண்ணிக்கை போதுமான அளவில் இல்லாமல் தடுமாறிவருவதாக சிஸ்கோ நிறுவனம் அறிவித்துள்ளது.
2013-ம் ஆண்டின் மிக மோசமான 25 கடவுச்சொற்களாக mashable.com அறிவித்துள்ள (Password) (மோசமாக என்றால் மற்றவர்கள் கடவுச்சொல்லை அறிந்துகொள்ளும் வகையில் அமைந்த) அறியப்பட்டுள்ளவற்றில் முதல் 10 இடங்களைப்பெற்றுள்ள கடவுச்சொற்கள்
1. 123456
2. password
3. 12345678
4. qwerty
5. abc123
6. 123456789
7. 111111
8. 1234567
9. iloveyou
10. adobe123
2 முதல் 10 வயதுள்ள குழந்தைகள் பயன்படுத்தும் வண்ணம் எடி(Eddy) என்கிற பெயரில் ஆன்ட்ராய்டு 4.2 உடன் கூடிய ஒரு பலகைக் கணினியை மெடிஸ்(Metis) என்கிற நிறுவனம் வெளியிட்டுள்ளது.
கூகுள் நிறுவனம் தனது பட்ஜெட் நுண்ணறி அலைபசியான மோட்டோ-ஜியை (Moto-G) வரும் பிப்ரவரியில் இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. விலை நிலவரம் சரியாக தெரியாவிட்டாலும் 11,000 ரூபாய் அளவில் இருக்கும் என நம்பப்படுகிறது. இது ஆன்ட்ராய்டு கிட்கேட் பதிப்புடன் வருவுள்ளது.
2013-ம் ஆண்டு அலைபேசிகளை குறிவைத்து உருவாக்கப்பட்ட மால்வேர்களில் 99% ஆன்ட்ராய்டு அலைபேசிகளையே கருத்தில்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக சிஸ்கோவின் அறிக்கை தெரிவிக்கிறது.
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது விண்டோஸ் 9 -ன் உருவாக்கத்தை இந்த ஆண்டில் ஆரம்பித்து, 2015 ஏப்ரல் வாக்கில் வெளியிடவுள்ளதாக அறியப்படுகிறது.
மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தனது இரட்டை இயங்குதளங்களை உடைய லேட்டேபை $500 -க்கும் குறைந்த விலைக்கு சந்தையில் கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
காதொலிப்பான்(ear phone) மற்றும் தலையோடு காதொலிப்பான் (Head phone - சரியான தமிழாக்கம் தானா?) தயாரிப்பு நிறுவனமான பீட்ஸ்(Beats) தனது இசை ஒடை (Music Streaming) சேவையை இந்த ஜனவரி 21-ல் தொடங்கவிருக்கிறது. இந்தச் சேவைக்கு ஏதுவான ஆன்டிராய்டு, ஐஓஎஸ் செயலிகளுக்கும், உலாவிகளுக்கும் ஆதரவோடு இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் நிறுவனம் நியுயார்க்கைச் சேர்ந்த ஒரு தொடக்க கால நிறுவனமான(Strart-up) பிரான்ச் என்கிற நிறுவனத்தை கையகப்படுத்தியுள்ளது. இந்நிறுவனம் பல்வேறு சமூகவலைதளங்களில் பேச்சுக்கான பலவிதமான கருவிகளை உருவாக்கியுள்ளது.
கோடாடி(GoDaddy), மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் இணைந்து சிறு வணிகர்களுக்கு ஆஃபிஸ் 365-ஐ தரவுள்ளதாக தகவல் வந்துள்ளது.
இணைய வணிக/விற்பனை
நிறுவனமான ஈபே(EBay) தனது கட்டணம் செலுத்தும் சேவையை(Payment service)
புதிதாக சீரமைத்துள்ளது. இதன்மூலம், பயனர்கள் தங்கள் கட்டணத்தை பேபால் (PayPal) தளத்திற்கு செல்லாமல் தாங்கள் இருக்கம் தளத்திலிருந்தே செலுத்தலாம்.
வோடஃபோன்
இந்தியா செயலிகளை உருவாக்கி விற்பதற்கான தளம் ஒன்றினை உருவாக்கியுள்ளது,
இதன் மூலம் பெறப்படும் செயலிகளுக்கான தொகை அலைபேசி கட்டண ரசீதுடன் சேர்ந்து
வரும்.
வெரிசான்(Verizon) மற்றும் ஆரக்கிள்(Oracle) நிறுவனங்கள் ஒன்றிணைந்து
ஆரக்கிள் தரவுதளம் மற்றும் ஆரக்கிள் ஃபியூசன் மிடில்வேர் இரண்டையும்
வெரிசான் மேகக்கணிமை வாயிலாக தர முடிவு செய்துள்ளன.
ஃபேஸ்புக் நிறுவனம் வரும் மாதத்தில் படிப்பான் (facebook reader) ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிகிறது.
ஆப்பிள்,
கூகுள் போன்ற தொழில்நுட்ப ஜாம்பவான்களைத் தொடர்ந்து தற்போது மைக்ரோசாஃப்ட்
நிறுவனமும் பேச்சின் மூலம் தேடல் முறையை பிங் தேடுபொறியுடன் இவ்வருடத்தின்
ஏப்ரல் மாதத்தில் இருந்து தரவுள்ளது. மேலும், இவ்வசதியை அதன்
அலைபேசிகளுக்கும் கொண்டுவரவுள்ளதாக அறியப்படுகிறது.
ரஷ்ய தேடுபொறியான யான்டெக்ஸ்(Yandex) (ரஷ்யாவில் கூகுளை விஞ்சி 60% தேடல் சந்தையை தன் வசம் வைத்துள்ளது, சீனாவிலும் இதே கதைதான் பெய்டு(Baidu) என்கிற சீன தேடுபொறிதான் அங்கும் ஆள்கிறது) ஃபேஸ்புக்கிடம் இருந்து தகவல்களைப் பெற்றுக்கொள்ள ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.
கூகுள் கடைசியாக மேற்கொண்ட கையகப்படுத்தல் நடவடிக்கையோடு(நெஸ்ட் நிறுவனத்தை 3.2 பில்லியன் டாலருக்கு கையகப்படுத்தியுள்ளது) கடந்த 2 ஆண்டுகளில் மேற்கொண்ட கையகப்படுத்தலின் மதிப்பு 17 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். இது கூகுளின் முதல் 5 போட்டி நிறவனங்களும்(ஆப்பிள், மைக்ரோசாஃப்ட், ஃபேஸ்புக், அமேசான் யாஹூ) சேர்ந்து மேற்கொண்ட கையகப்படுத்தலைவிட மிக அதிகம் என புளும்பெர்க் நிறுவனம் (bloomberg) தெரிவித்துள்ளது.
கூகுள் தனது குரோம் உலாவியின் விண்டோஸ் பதிப்பை விண்டோஸ் 8 இயங்குதளத்திற்காக மேம்படுத்தியுள்ளது.
அலைபேசி செயலிகளின் பயன்பாடு 2013-ம் ஆண்டில் 115% அதிகரித்துள்ளதாக Flurry Analytics நிறுவனம் தெரிவித்துள்ளது.
டிவிட்டர் துணை நிறுவனர்களில் ஒருவரான பிஸ் ஸ்டோன்(Biz Stone) கேள்வி-பதில் அடிப்படையில் அமைந்த ஒரு சமூக வலைதளம் ஒன்றை ஜெல்லி(Jelly)
என்கிற பெயரில் உருவாக்கியுள்ளார். ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்குப் பெற இங்கே சொடுக்கவும்
எச்பி நிறுவனம் 3G வசதி மற்றும் பேசும் வசதியுடன் கூடிய சிலேட்டு கணினிகளை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளது.
கூகுள் நிறுவனம் இணைய பாதுகாப்பு தொடக்க நிறுவனமான(startup) இம்பீரியத்தை(Impermium) கையகப்படுத்தியுள்ளது
அலைபேசி செயலியான பாக்ஸ்(Box) தனது செயலியை ஐஓஎஸ் இயங்குதளத்தில் தரவிறக்கி பயன்படுத்துபவர்களுக்கு 50 ஜிபி மேக சேமிப்பகத்தை (cloud storage) இலவசமாக தருகிறது.
ஆன்ட்ராய்டு அலைபேசிகளுக்குப் பெற இங்கே சொடுக்கவும்,
ஐஓஎஸ் இயங்குதளத்திற்குப் பெற இங்கே சொடுக்கவும்
கூகுள் நிறுவனம் அலைபேசிகளில் செயல்படும் குரோம் உலாவிக்கு ஒரு புதிய மேம்பாட்டினை தரவுள்ளது. இதன் மூலம் உலாவியைப் பயன்படுத்தும்போது ஏற்படும் தரவுப் பரிமாற்றம் 50% சதவீதம் அளவிற்கு குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அலைபேசி பேச்சு செயலிகளில் ஒன்றான வீசாட் தற்போது அதன் இயங்குபரப்பிற்குள்ளாகவே விளையாடும் விளையாட்டுகள் சிலவற்றையும், இருப்பிடத்தை அறிந்த அதன்அடிப்படையில் வகைப்படுத்தப்பட்ட சேவைகளையும் தரவுள்ளது(ஆஸ்க்மீ - Askme நிறுவனத்துடன் இணைந்து). இதன்மூலம் வாட்ஸ்ஆப் போன்ற செயலிகளுக்கு ஒரு உறுதியான சவாலாக மாறவுள்ளது.