Tuesday, April 22, 2014

தொழில்நுட்ப உலகம் ஒரு பார்வை

முகநூல் நிறுவனம் ஹேக் (Hack) என்கிற புதிய நிரல் மொழியை அறிமுகப்படுத்தவுள்ளது.

டிவிட்டர், தனது இசைக்கான செயலியை நிறுத்தவுள்ளது.

ஆங்கிரி பேர்ட்ஸ் விளையாட்டின் செல்வாக்கு குறைந்து அதன்பிறகு கேன்டி கிரஷ்-ன் சகாப்தம் ஆரம்பித்தது.  தற்போது இவ்விரண்டையும் தாண்டி ஃபிளேப்பி பேர்ட்-ம் 2048 என்கிற எண் விளையாட்டும் மிக வேகமாக தனது பயனர் அளவினை சேர்த்துவருகின்றன.

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி 5 வகை நுண்ணறிபேசிகளை மார்ச் 27 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது.

அமேசான், மைக்ரோசாஃப்ட் போன்ற தொழில்நுட்ப ஜாம்பவான்களைத் தொடர்ந்து தற்போது சிஸ்கோ நிறுவனமும் மேகக் கணிமையில் களமிறங்கவுள்ளதாக அறியப்படுகிறது.


அலைபேசி தயாரிப்பு நிறுவனமான லாவா 2015 மார்ச் வாக்கில் தங்கள் நிறுவனத்தினை பில்லியன் டாலர் மதிப்புடையதாக மாற்ற வேண்டும் என திட்டம் வகுத்துள்ளது.

கூகுள் நிறுவனம் ஒரு நுண்ணறி contact lens -ஐ உருவாக்கி வருவதாக தகவல்கள் கசிந்துள்ளது.  இது, மனிதனின் இரத்த குளுக்கோஸ் அளவை தானாகவே குறிப்பிட்ட இடைவெளிகளில் பதிவுசெய்துகொள்ளும் என்று கூறப்படுகிறது.  இது மட்டும் சாத்தியப்பட்டால் சர்க்கரை வியாதியஸ்தர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும்.

2014-ம் ஆண்டில் உலகளவில் நுண்ணறி அலைபேசி பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 1.75 பில்லியன் அளவிற்கு அதிகரிக்கும் என்று eMarketer எனும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment