Showing posts with label Twitter. Show all posts
Showing posts with label Twitter. Show all posts

Tuesday, September 17, 2013

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை(08-09-13 முதல் 14-09-13வரை)


சாம்சங் தனது கேலக்சி நோட் 3-ஐ இம்மாத இறுதில் இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளது.



இணைய உலகில் கட்டுரைகள், செய்திகள் போன்ற பலவற்றிலும் கமெண்ட்(comment) எழுதும் இணைய பயனர்கள்(இளைஞர்கள்) 40% சதவீதம் பேர் தங்கள் அடையாளங்களை
மறைத்து அனானியாக(Anonymous) தான் எழுதிகிறார்கள் என Pew Research Centre study கூறியுள்ளது.

மத்திய அரசு இந்திய ரூபாய் 9,822 கோடி செலவில், ஏழை எளிய மக்களுக்கு 2.5 கோடி அலைபேசி மற்றும் 90 லட்சம் குளிகைக் கணினிகளை இலவசமாக தரவுள்ளதாக கூறியுள்ளதாக தெரிகிறது. (டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியில் இருந்து)

சோனி நிறுவனம் வளைவான திரையுடன் கூடிய எல்ஈடி டிவியை அறிமுகப்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் நாசா(NASA) நிறுவனம் இன்ஸ்டாகிராமில்(Instagram) ஒரு பயனர் கணக்கைத் தொடங்கி இணைந்துள்ளது.  தனது புகைப்படங்களைப் பதிவேற்றி சில லட்சம் பயனர்கள் பின்தொடர்பவர்களாப் பெற்றுவிட்டது.

பேஸ்புக் நிறுவனம், டிவிட்டர் போல நிஜ நேர(Real Time) தகவல்களைத் தரும்வகையில் தனது வடிவமைப்பை மாற்றி வெற்றி பெற்ற பிறகு, தற்போது லின்க்டுஇன் போன்று தொழில்முறை சார்ந்த(Professional) தகவல்களைக் கொண்டதாக தனது வடிவமைப்பை மேலும் மெருகேற்ற உள்ளதாக தெரிகிறது.

மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது மிக முக்கிய, நீண்ட நாட்களாக புழக்கத்தில் இருந்து வருகிற மற்றும் அதிகம் பயன்படுத்தப்படுகிற தனது விண்டோஸ் எக்ஸ்பி இயங்குதளத்திற்கான support(மற்றும் update)-ஐ அடுத்த ஆண்டிலிருந்து(2014) நிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.  இதற்கு முன்னரே மத்திய அரசு நிறுவனமான சிடாக் தனது பாஸ் குனூ/லினக்சு இயங்குதளத்தை தமிழ்நாட்டின் பல அரசு அலுவலகங்களில் விண்டோசுக்கு மாற்றாக நிறுவிய நிலையில், மைக்ரோசாப்டின் இம்முடிவு பாஸ் லினக்ஸை மேலும் பரவலாக(இந்தியா முழுவதும் கூட) நிறுவ வழிவகுக்கும் எனலாம்.

ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐ-போன்கள் 5s மற்றும் 5c ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது.  இந்தியாவும் சீனாவும் இதன் முக்கிய விற்பனை சந்தைகளாக/மையங்களாக இருக்கும் எனக் கூறியுள்ளது.

எச்பி நிறுவனம் HAVEn என்ற பெயரில் பெருந்தகவல்(BigData) பகுப்பாய்வியல் களம்/தளம்/மேடையை(Platform) அறிமுகப்படுத்தியுள்ளது.

நிசான் நிறுவனம் நிசான் நிஸ்மோ(Nissan Nismo) என்ற பெயரில் நுண்ணறி கைக் கடிகாரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.


ஒலிம்பஸ் நிறுவனம் முதன்முறையாக ஆடிகள்(லென்சுகள்) இல்லாத "OM-D E-M1" என்கிற கேமராவை அறிமுகப்படுத்தியுள்ளது, அத்தோடு இது DSLR கேமராவுக்கு இணையான தரத்துடன் புகைப்படத்தை எடுக்க முடியும் என்றும் கூறியுள்ளது.

ஆப்பிள் நிறுவனம் தனது ஐ-போனில் பயோமெட்ரிக்(Biometric) முறையில் கைரேகையை வைத்து பூட்டவும்(lock) திறக்கவும்(unlock) கூடிய வகையில் வடிவமைக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.


சாம்சங் நிறுவனம் தனது நுண்ணறிபேசிகளில் 64-பிட்டு (64-bit) நுண்செயலிகளை(microprocessor) பயன்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக், குரூப்ஆன் போன்று தற்போது டிவிட்டர் நிறுவனமும் தனது பங்குகளை வெளியிட்டு பங்குச்சந்தைக்கு வர இருப்பதாக தெரிவித்துள்ளது.


தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை முந்தைய வாரப் பதிவு

Wednesday, April 17, 2013

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை(07-04-13 முதல் 13-04-13வரை)

மொபைல் உலகில் மிகப்பிரபலமான வாட்ஸ்ஆப்(WhatsApp) செய்திப் பரிமாற்றியை(Messanger app) சுமார் 1 பில்லியன் அமெரிக்க டாலருக்கு(100 கோடி * 55 இந்திய ரூபாய் மதிப்பிற்கு, அதாவது 5500 கோடி ரூபாய்) கையகப்படுத்த கூகுள் முயன்றுவருவதாக தகவல்கள் கசிகின்றன.  உங்கள் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனுக்கு வாட்ஸ்ஆப்பை பதிவிறக்க

இந்தியாவின் மிகப்பெரிய தகவல்தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ்(TCS) பிரான்ஸைச் சேர்ந்த அல்டி(Alti) என்கிற தகவல்தொழில்நுட்ப நிறுவனத்தை 530 கோடி இந்திய ரூபாய்க்கு கையகப்படுத்த உள்ளது.

சாம்சங் 20 புதிய ஸ்மார்ட் டிவிக்களை இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளது.

பிஎஸ்என்எல்(BSNL) தனது 4G இணைய சேவையை இந்தூரில் தொடங்கவுள்ளது.

லிங்க்டுஇன் நிறுவனம் 90 மில்லியன் அமெரிக்க டாலருக்கு கைபேசிகளில் பயன்படும் செயிலிகளை உருவாக்கும் மின்படிப்பான்(E-Reader) நிறுவனமான பல்ஸ்-ஐ(Pulse) கையகப்படுத்தவுள்ளது.

டிவிட்டர் இந்த வார இறுதியில் ஒரு இசை அப்ளிகேசனை வெளியிட உள்ளதாக தெரிகிறது.

கூகுளின் நிரலெழுதும் போட்டியான கூகுள் கோட் ஜாம் 2013(Google Code Jam-2013) ஏப்ரல் 12 அன்று துவங்கியுள்ளது.  பரிசுத்தோகை 15000 அமெரிக்க டாலர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாஸ்காம் (National Association of Software and Services Companies (NASSCOM)) 25 லட்சத்திலிருந்து 2 கோடி ரூபாய் வரை 500 புதிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு(Tech Start-ups) ஏஞ்சல் இன்வெஸ்டார்கள்(Angel investors) மூலமாக நிதியுதவி அளிக்கத் திட்டமிட்டுள்ளது.  மேலதிக தகவல்களுக்கு பார்க்கவும் www.10000startups.com.

மைக்ரோசாப்ட் நிறுவனம் கூகுளின் நெக்ஸஸ், ஆப்பிளின் ஐபாட் மினி போன்றவற்றிற்குப் போட்டியாக சிறிய திரையுடைய(7 இன்ச்) சர்பேஸ் குளிகைக் கணிணிகளை உருவாக்க திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

4 கார்னகி மெல்லன் பல்கலைக்கழக மாணவர்களால் தொடங்கப்பட்ட பேடேங்கோ(PayTango) எனும் நிறுவனம், பண அட்டைகளான கடன் அட்டை(Credit Card), டெபிட் கார்டுகளுக்குப் பதிலாக கைரேகை மூலம் பணப்பரிமாற்றம், தொகை, கட்டணம் செலுத்தும் முறை ஒன்றை உருவாக்கியுள்ளது.  இம்முறை ஏற்றுக்கொள்ளப்பட்டால் விரைவில் நடைமுறைக்கு வந்துவிடும்.

மேலும் படிக்க:
இதற்கு முந்தைய வார தொழில்நுட்ப செய்திகளைப் படிக்க -> இங்கே சொடுக்கவும்
இதற்கு அடுத்த வார தொழில்நுட்ப செய்திகளை படிக்க ->  இங்கே சொடுக்கவும்




Saturday, January 12, 2013

டிவிட்டரின் தரமுயர்த்தப்பட்ட புகைப்பட பகிரல்..



  கடந்த மாதம் டிவிட்டர் தனது கைப்பேசி செயலியில்(Mobile App) உள்ள புகைப்பட பகிரும் பாகத்தை தரமுயர்த்தியுள்ளது.  முன்பு ஒரு புகைப்படத்தை உள்ளது உள்ளபடி மட்டுமே பகிரமுடியும் என்றிருந்த(வேறு செயலிகளின் மூலம் புகைப்படத்தை மேம்படுத்தி பின்பு பகிர்வதல்ல) நிலை இப்போது மாறியுள்ளது.  ஆம், தற்போது நீங்கள் ஒரு புகைப்படத்தை பகிர்வதற்கு முன் அதில் இன்ஸ்டாகிராம் போன்று பல்வேறு விளைவுகளை(effects) அதில் செய்யலாம்.  மொத்தமாக 8(+1 எந்த விளைவுகளும் இல்லாமல் உள்ளது உள்ளபடி) வெவ்வேறு தாக்கங்கள்/விளைவுகள்(Effects) தரப்பட்டுள்ளன.  அவை முறையே
1. Vignette
2. Black & White
3. Warm
4. Cool
5. Vintage
6. Cinematic
7. Happy
8. Gritty

 இத்தோடு, படத்தின் பிரகாசத்தை(brightness) அதிகப்படுத்தல் மற்றும் தேவையானதை மட்டும் தனியாக வெட்டி எடுத்தல்(Crop) ஆகிய இரண்டு வசதிகளும் கூட சேர்க்கப்பட்டுள்ளது.  இதையெல்லாம் செயல்படுத்த உங்கள் Smart Phone-ல் உள்ள டிவிட்டர் செயலி அதன் இன்றைய மேம்பாட்டுடன் ஒத்து புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆகவே இனி டிவிட்டரில் புகைப்படம் பகிர்தல் முன் எப்போதும் போல சாதரணமாக இருக்கப்போவதில்லை... தரமுயர்த்தப்பட்டதாக இருக்கும்.