Showing posts with label smart phone. Show all posts
Showing posts with label smart phone. Show all posts

Tuesday, November 19, 2013

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை(24-11-13 முதல் 30-11-13வரை)

சோனி நிறுவனம் தனது எக்சுபீரியா(xperia) வகை நுண்ணறிபேசி வகைகளில் புதியதாக இசட்1எஸ்(Z1S) என்கிற பெயரில் புதியதாக ஒரு அலைபேசியை வெளியிடவுள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது எக்சுபாக்சு ஒன்(Xbox One) விளையாட்டுப் பெட்டியின் அறிமுக நாளன்றே 1 மில்லியன் பெட்டிகளை விற்று சாதனைப் படைத்துள்ளது.

கேரள சுற்றுலாத்துறை, முகநூலுடன் இணைந்து  தனது சுற்றலாதலங்களைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் மேம்படுத்த உள்ளது. Kerala Tourism page in facebook

தனது மின்அஞ்சல் பயனர்களின், மின்னஞ்சல்களை அவர்களில் அனுமதியின்றி படிப்பதாக யாகூ நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இன்போசிஸ் நிறுவனம், அயல்நாட்டில் பணிபுரியும் தனது மூத்த பணியாளர்களின் எண்ணிக்கையை குறைக்க முடிவெடுத்துள்ளது.

போர்ப்ஸ்(Forbes) நிறுவனம் உலகின் மிக மதிப்புடைய வணிக நிறுவனமாக ஆப்பிளைத் தேர்ந்தெடுத்துள்ளது.

ஆப்பிள் நிறுவனம் புகைப்படம் எடுத்தப் பிறகு குவிப்பு மையத்தை மாற்றிப் பார்க்கும்(refocusable) ஒரு புதிய தொழில்நுட்படத்தை உருவாக்கியுள்ளது, மேலும் அதற்கான காப்புரிமையையும் பெற்றுள்ளது.

ஐகேன்(ICANN - Internet Corporation for Assigned Names and Numbers) புதியதாக டொமைன் பெயர்களை இணையப் பயன்பாட்டிற்காக சேர்க்கவுள்ளது.  இதில் .clothing, .guru, .bike போன்றவையும் அடக்கம்.

பிளாக்பெரி நிறுவனம் தனது அலைபேசி செயலியான பிபிஎம்(BBM - BlackBerry Messanger)-ஐ இந்தியாவின் சுதேசி அலைபேசி தயாரிப்பு நிறுவனங்களான மைக்ரோமேக்ஸ், ஸ்பைஸ் மற்றும் ஸென் போன்றவற்றின் நுண்ணறிஅலைபேசிகளுடன் இயல்பிருப்பாக(Pre installed) தரவுள்ளது.

மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை, சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் திரு. கபில்சிபல் ட்விட்டரில் தனது பயனர் கணக்கைத்(@KapilSibal) தொடங்கியுள்ளார்.


இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப மற்றும் மென்பொருள் நிறுவனமான விப்ரோவின் மீது சுமாராக 17 கோடி இந்திய ரூபாய் வரி ஏய்ப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

உலகளவில் மிக அதிக பயனர்களை உடைய அலைபேசி சேவை வழங்கு நிறுவனமான சைனா மொபைல் வரும் டிசம்பர் 18 அன்று 4ஜி சேவையை அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.

டிசிஎஸ் நிறுவனம் தனது மிகப்பெரிய விநியோக மையத்தை ஹைதராபாத்தில் நிறுவவுள்ளதாக தெரிகிறது.

2013-ம் ஆண்டின் 3-வது காலாண்டின் மொத்த அலைபேசிகளின் விற்பனையில் நுண்ணறி அலைபேசிகளின் விற்பனை மட்டுமே 55% இருப்பதாக காட்னர் நிறுவனம் கூறியுள்ளது.
தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை முந்தைய வாரப் பதிவு

Thursday, September 12, 2013

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை(01-09-13 முதல் 07-09-13வரை)


இந்திய தகவல் தொழில்நுட்பத்துறையின் முக்கியப் பெரு நிறுவனமான விப்ரோ, இளங்கலை மாணவர்கள் தங்கள் தொடர்பு மற்றும் மென் திறமைகளை(Communications & Soft skills) வளர்த்துக்கொள்ள ஒரு திட்டத்தினை உருவாக்கியுள்ளது.  விப்ரோ ஒருங்கிணைந்த திறமை வளர்ப்பு திட்டம்(WISEPro - Wipro Integrated Skill Enhancement Programme) எனப்பெயரிடப்பட்டுள்ள இத்திட்டம் ஒரு நாடு தழுவிய திட்டம் ஆகும்.

வங்கியிடம் இருந்து வந்த ஈ-மெயில் போன்ற பொய்யான/போலி மெயில்களுக்கு 30% பேர் பலியாவதாக எதிர்-நச்சுநிரல் தயாரிப்பு நிறுவனமான காஸ்பர்ஸ்கை(Kaspersky) கருத்துக்கணிப்பு தெரிவிட்டுதுள்ளது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முன்னணி(ஓரு காலத்தில் என்று கூட சொல்லலாம் :P )கைப்பேசி தயாரிப்பு நிறுவனமான நோக்கியாவை கையகப்படுத்தியுள்ளது.

99.9% சதவீத மால்வேர்(malware)கள் கூகுளின் ஆண்ட்ராய்டு நுண்ணறிபேசி இயங்குதளத்தை குறிவைத்து தயாரிக்கப்படுவதாக காஸ்பர்ஸ்கை தெரிவித்துள்ளது.

சாம்சங் நிறுவனம் அதன் நுண்ணறி கடிகாரமான கேலக்ஸி கியரில் (Galaxy Gear) அனைத்து முக்கிய இந்திய மொழிகளையும் சேர்க்க இருப்பதாக அறிவித்துள்ளது.

நுண்ணறி அலைபேசிச் சந்தையை அடுத்து அனைத்து முன்னணி நிறுவனங்களும் தற்போது நுண்ணறி கைக்கடிகாரம் தயாரிப்பில் முழுமூச்சாக இறங்கியுள்ளன.  அந்த வரிசையில் குவால்காம்(Qualcomm) நிறுவனம்  டாகு(Toq) என்ற பெயரில் ஒரு கடிகாரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

சோனி இந்தியா நிறுவனம் அதன் அலைபேசி மற்றும் புகைப்படக் கருவிகளின் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இந்திய உருவாக்குனர்களுக்காக(developers) ஒரு தனிப்பட்ட இணைய வலைவாசலை(web portal) உருவாக்கியுள்ளது.

சாம்சங் நிறுவனம் 3.25 லட்சம் விலையில் அல்ட்ரா-எச்டி(Ultra-HD) தொலைக்காட்சிப் பெட்டிகளை வெளியிட்டுள்ளது.

கூகுள் குரோம் உலாவியில் செயல்படும் செயலிகள் [ஆப்கள்(Apps)] இனி மேசைக்கணினியின் பணிமேடையிலும் செயல்படும் வகையில் எழுதப்படவுள்ளது. லைப்ஹேக்கர் இணையதளததில் இது குறித்தப் பதிவு

ஆன்ட்ராய்டு இயங்குதளத்தின் புதிய பதிப்பு 4.4 கிட்கேட் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

எச்டிசி நிறுவனம் இந்திய ரூபாய் 52,428 விலையில் பட்டர்பிளை S நுண்ணறி அலைபேசியை அறிமுகப்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் சமூக வலைதளங்களில் நுண்ணறிபேசி மூலம் பங்கெடுக்கும் பயனர்களின் எண்ணிக்கையில் முதலிடத்தில் உள்ளதாக சமூக வலைதள கணக்கெடுப்பு நிறுவனம் ஒன்று கூறியுள்ளது.

பிளாக்பெரி இந்தியாவின் புதிய தலைவராக சுனில் லால்வனி பொறுப்பேற்கிறார்.

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை முந்தைய வாரப் பதிவு