Showing posts with label yahoo. Show all posts
Showing posts with label yahoo. Show all posts

Tuesday, November 19, 2013

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை(24-11-13 முதல் 30-11-13வரை)

சோனி நிறுவனம் தனது எக்சுபீரியா(xperia) வகை நுண்ணறிபேசி வகைகளில் புதியதாக இசட்1எஸ்(Z1S) என்கிற பெயரில் புதியதாக ஒரு அலைபேசியை வெளியிடவுள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது எக்சுபாக்சு ஒன்(Xbox One) விளையாட்டுப் பெட்டியின் அறிமுக நாளன்றே 1 மில்லியன் பெட்டிகளை விற்று சாதனைப் படைத்துள்ளது.

கேரள சுற்றுலாத்துறை, முகநூலுடன் இணைந்து  தனது சுற்றலாதலங்களைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் மேம்படுத்த உள்ளது. Kerala Tourism page in facebook

தனது மின்அஞ்சல் பயனர்களின், மின்னஞ்சல்களை அவர்களில் அனுமதியின்றி படிப்பதாக யாகூ நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இன்போசிஸ் நிறுவனம், அயல்நாட்டில் பணிபுரியும் தனது மூத்த பணியாளர்களின் எண்ணிக்கையை குறைக்க முடிவெடுத்துள்ளது.

போர்ப்ஸ்(Forbes) நிறுவனம் உலகின் மிக மதிப்புடைய வணிக நிறுவனமாக ஆப்பிளைத் தேர்ந்தெடுத்துள்ளது.

ஆப்பிள் நிறுவனம் புகைப்படம் எடுத்தப் பிறகு குவிப்பு மையத்தை மாற்றிப் பார்க்கும்(refocusable) ஒரு புதிய தொழில்நுட்படத்தை உருவாக்கியுள்ளது, மேலும் அதற்கான காப்புரிமையையும் பெற்றுள்ளது.

ஐகேன்(ICANN - Internet Corporation for Assigned Names and Numbers) புதியதாக டொமைன் பெயர்களை இணையப் பயன்பாட்டிற்காக சேர்க்கவுள்ளது.  இதில் .clothing, .guru, .bike போன்றவையும் அடக்கம்.

பிளாக்பெரி நிறுவனம் தனது அலைபேசி செயலியான பிபிஎம்(BBM - BlackBerry Messanger)-ஐ இந்தியாவின் சுதேசி அலைபேசி தயாரிப்பு நிறுவனங்களான மைக்ரோமேக்ஸ், ஸ்பைஸ் மற்றும் ஸென் போன்றவற்றின் நுண்ணறிஅலைபேசிகளுடன் இயல்பிருப்பாக(Pre installed) தரவுள்ளது.

மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை, சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் திரு. கபில்சிபல் ட்விட்டரில் தனது பயனர் கணக்கைத்(@KapilSibal) தொடங்கியுள்ளார்.


இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப மற்றும் மென்பொருள் நிறுவனமான விப்ரோவின் மீது சுமாராக 17 கோடி இந்திய ரூபாய் வரி ஏய்ப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

உலகளவில் மிக அதிக பயனர்களை உடைய அலைபேசி சேவை வழங்கு நிறுவனமான சைனா மொபைல் வரும் டிசம்பர் 18 அன்று 4ஜி சேவையை அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.

டிசிஎஸ் நிறுவனம் தனது மிகப்பெரிய விநியோக மையத்தை ஹைதராபாத்தில் நிறுவவுள்ளதாக தெரிகிறது.

2013-ம் ஆண்டின் 3-வது காலாண்டின் மொத்த அலைபேசிகளின் விற்பனையில் நுண்ணறி அலைபேசிகளின் விற்பனை மட்டுமே 55% இருப்பதாக காட்னர் நிறுவனம் கூறியுள்ளது.
தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை முந்தைய வாரப் பதிவு

Tuesday, April 23, 2013

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை(14-04-13 முதல் 20-04-13வரை)

நோக்கியா நிறுவனம் அதன் லூமியா 720 வகை கைப்பேசிகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது, விலை ரூபாய் 18,999 ஆக இருக்கும்.

ஆப்பிள் மற்றும் சாம்சங்கைத் தொடர்ந்து தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனமும் ஸ்மார்ட் வாட்ச் தயாரிப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

ஆஷ்டன் விருது வென்ற இந்திய விஞ்ஞானியான சன்டிபாடா கோன்சௌத்ரி, மத்திய அரசிடம் சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும்(சிறிய சோலார் பேனல்களின் உதவியால்) சட்டையை உருவாக்குவதற்கான ஆராய்ச்சி முன்மொழிவைக்(Research proposal) கொடுத்துள்ளார்.  இச்சட்டை மூலமாக 400 வாட் மின்சாரம் வரை தயாரிக்கலாம் என்று கூறியுள்ளார்.

1,20,000 ஆண்ட்ராய்டு செல்பேசிகளுக்கான இலவச App-களில் பாதுகாப்பு வழு இருப்பதாக கலிபோர்னியா பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கண்டறிந்துள்ளார்.  இந்த இலவச App-களை கிட்டதட்ட 50 கோடி பயனர்கள் பயன்படுத்துகிறார்களாம்.

யாகூ நிறுவனம் புதிதாக வானிலையை கூறும் ஒரு App-ஐ வெளியிட்டுள்ளது.  மேலும், அதன் மின்அஞ்சல் App-ஐயும் மேம்படுத்தியுள்ளது.

வாட்ஸ்ஆப்(WhatsApp), க்கிக்(kik) போன்று ஒரு தகவல்/செய்தி பரிமாறும் App-ஐ just.me நிறுவனம் வெளியிட்டுள்ளது.  இதன் முக்கிய சிறப்பு மற்ற App-கள் போலில்லாமல், இதில் செய்தி அனுப்புபவரிடம் மட்டும் இந்த App இருந்தால் போதுமானது, இருவரிடமும் இருந்தேயாக வேண்டும் என்கிற அவசிமில்லை.

ஃபேஸ்புக் ஐஓஎஸ்-க்கான(iOS) புதிய SDK-ஐ(Software Development Kit) வெளியிட்டுள்ளது.  புகுபதிகை(login) வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது, உள்ளார்ந்த வரைபட(graph) வசதி சேர்க்கப்பட்டுள்ளது.  இதனால் ஐஓஎஸ்-க்கான ஃபேஸ்புக் App உருவாக்கும் நிரலர்கள் எளிதாக செய்து முடிக்கலாம் என கூறப்படுகிறது.

இந்தியாவைச் சேர்ந்த சுமித் தாகர் என்பவர் பார்வைத்திறன் இல்லாதோர்/குறைபாடுடையோர்களுக்கான ஒரு நுண்ணறிபேசி(Smartphone)யை உருவாக்கியுள்ளார்.  இதனுடைய தொடுதிரை இதற்கு வரும் செய்திகளை பிரெய்லி முறையில் படிக்கும் விதமாக திரையை மேடு பள்ளம் கொண்டதாக(தொட்டு உணரும் பிரெய்லி எழுத்துருக்களாக) மாற்றிவிடும் புதிய தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் சிரி(siri) பேச்சு தொழில்நுட்பம், ஐபோன் பயனர்கள் அதற்கு அளிக்கும் பேச்சுக் கட்டளைகளை(Voice Commands) 2 வருடம் வரை பதித்து/சேமித்து வைத்துக்கொள்ளும் என அந்நிறவனத்தின் தகவல் தொடர்பாளர் கூறியுள்ளார்.  சேமிக்கப்படும் இத்தகவல்கள் சிரி தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்காக மட்டுமே என கூறப்பட்டாலும், பயனர்களிடையே இது சிறு சலனத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஃபேஸ்புக் அதன் App-ல் இருந்து உங்கள் ஃபேஸ்புக் நண்பர்களுக்கு இலவசமாக அ(தொ)லைபேசும் வசதியை தந்துள்ளது.  தற்போதைக்கு இவ்வசதி அமெரிக்கா, கனடாவில் மட்டும் நடைமுறையில் உள்ளது.  விரைவில் மற்ற பகுதிகளுக்கும் அறிமுகப்படுத்தப்படும் என நம்பப்படுகிறது.

இந்தியாவில் சாம்சங் S4 ஏப்ரல் 26 முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.


மேலும் படிக்க:
இதற்கு முந்தைய வார தொழில்நுட்ப செய்திகளைப் படிக்க -> இங்கே சொடுக்கவும்
இதற்கு அடுத்த வார தொழில்நுட்ப செய்திகளை படிக்க -> இங்கே சொடுக்கவும்