Showing posts with label smart watch. Show all posts
Showing posts with label smart watch. Show all posts

Friday, November 8, 2013

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை(27-10-13 முதல் 02-11-13வரை)

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி கோல்டன்(Galaxy Golden) வகை அலைபேசிகளை இந்தியாவில் வெளியிடவுள்ளதாக தெரிவித்துள்ளது.  இதன் விலை சுமார் 52,000 இந்திய ரூபாய்களாக இருக்கும்.

விப்ரோ(Wipro) நிறுவனம் தனது அலைபேசி குறித்தான ஆய்வு மற்றும் உருவாக்கத்திற்கான மையத்தை ஹைதராபாத் நகரத்தில் நிறுவவுள்ளது.

கூகுள் நிறுவனத்தின் முக்கிய சேவைகளில் ஒன்றான யூடியூப் விலையுடன் கூடிய ஒர் இசைச்சேவையை அறிமுகப்படுத்த தயாராகிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வருட இறுதியில் (2014-டிசம்பர்) மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தனது 4ஜி வசதியுடன் கூடிய அலைபேசிகளை/கருவிகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக கூறியுள்ளது.

அமேசான்(Amazon) நிறுவனம் தற்போது ஒரு லட்சத்திற்கும் அதிகமான பணியாளர்களைக் கொண்டுள்ளது.

உலக அளவில் சமூக வலைதளங்களில் செலவிடப்படும் நேரத்தில் 65% அலைபேசிகளின் வாயிலாகவே நடைபெறுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

30% அமெரிக்க மக்கள், செய்திகளை முகநூலின்(Facebook) வாயிலாகவே பெறுவதாக ஒர் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

கனடாவைச் சேர்ந்த பிளாக்பெரி நிறுவனம் தனது புகழ்பெற்ற பிபிஎம்(BBM) பேச்சு செயலியை(Chat Application)  ஆன்ட்ராய்டு, ஐஓஎஸ் போன்ற மற்ற இயங்குதளங்களுக்கும் உருவாக்கியுள்ளது.  மேலும் இந்த செயலி 10 மில்லியனுக்கும் மேலான தடவை தரவிறக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

சேப்(SAP) நிறுவனத்தின் முதன்மை நிதி அதிகாரி, தாங்கள் பிளாக்பெரியை வாங்குவதற்கான போட்டியில் (விருப்பம்) இல்லை என ஜெர்மன் பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

ஆப்பிள் தனது ஐஃபோன்6-ஐ 2014 வேனில் காலத்தில் வெளியிடவுள்ளதாக அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

கூகுளும் நுண்ணறி கைக்கடிகார தயாரிப்பில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை முந்தைய வாரப் பதிவு



Thursday, September 12, 2013

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை(01-09-13 முதல் 07-09-13வரை)


இந்திய தகவல் தொழில்நுட்பத்துறையின் முக்கியப் பெரு நிறுவனமான விப்ரோ, இளங்கலை மாணவர்கள் தங்கள் தொடர்பு மற்றும் மென் திறமைகளை(Communications & Soft skills) வளர்த்துக்கொள்ள ஒரு திட்டத்தினை உருவாக்கியுள்ளது.  விப்ரோ ஒருங்கிணைந்த திறமை வளர்ப்பு திட்டம்(WISEPro - Wipro Integrated Skill Enhancement Programme) எனப்பெயரிடப்பட்டுள்ள இத்திட்டம் ஒரு நாடு தழுவிய திட்டம் ஆகும்.

வங்கியிடம் இருந்து வந்த ஈ-மெயில் போன்ற பொய்யான/போலி மெயில்களுக்கு 30% பேர் பலியாவதாக எதிர்-நச்சுநிரல் தயாரிப்பு நிறுவனமான காஸ்பர்ஸ்கை(Kaspersky) கருத்துக்கணிப்பு தெரிவிட்டுதுள்ளது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முன்னணி(ஓரு காலத்தில் என்று கூட சொல்லலாம் :P )கைப்பேசி தயாரிப்பு நிறுவனமான நோக்கியாவை கையகப்படுத்தியுள்ளது.

99.9% சதவீத மால்வேர்(malware)கள் கூகுளின் ஆண்ட்ராய்டு நுண்ணறிபேசி இயங்குதளத்தை குறிவைத்து தயாரிக்கப்படுவதாக காஸ்பர்ஸ்கை தெரிவித்துள்ளது.

சாம்சங் நிறுவனம் அதன் நுண்ணறி கடிகாரமான கேலக்ஸி கியரில் (Galaxy Gear) அனைத்து முக்கிய இந்திய மொழிகளையும் சேர்க்க இருப்பதாக அறிவித்துள்ளது.

நுண்ணறி அலைபேசிச் சந்தையை அடுத்து அனைத்து முன்னணி நிறுவனங்களும் தற்போது நுண்ணறி கைக்கடிகாரம் தயாரிப்பில் முழுமூச்சாக இறங்கியுள்ளன.  அந்த வரிசையில் குவால்காம்(Qualcomm) நிறுவனம்  டாகு(Toq) என்ற பெயரில் ஒரு கடிகாரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

சோனி இந்தியா நிறுவனம் அதன் அலைபேசி மற்றும் புகைப்படக் கருவிகளின் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இந்திய உருவாக்குனர்களுக்காக(developers) ஒரு தனிப்பட்ட இணைய வலைவாசலை(web portal) உருவாக்கியுள்ளது.

சாம்சங் நிறுவனம் 3.25 லட்சம் விலையில் அல்ட்ரா-எச்டி(Ultra-HD) தொலைக்காட்சிப் பெட்டிகளை வெளியிட்டுள்ளது.

கூகுள் குரோம் உலாவியில் செயல்படும் செயலிகள் [ஆப்கள்(Apps)] இனி மேசைக்கணினியின் பணிமேடையிலும் செயல்படும் வகையில் எழுதப்படவுள்ளது. லைப்ஹேக்கர் இணையதளததில் இது குறித்தப் பதிவு

ஆன்ட்ராய்டு இயங்குதளத்தின் புதிய பதிப்பு 4.4 கிட்கேட் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

எச்டிசி நிறுவனம் இந்திய ரூபாய் 52,428 விலையில் பட்டர்பிளை S நுண்ணறி அலைபேசியை அறிமுகப்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் சமூக வலைதளங்களில் நுண்ணறிபேசி மூலம் பங்கெடுக்கும் பயனர்களின் எண்ணிக்கையில் முதலிடத்தில் உள்ளதாக சமூக வலைதள கணக்கெடுப்பு நிறுவனம் ஒன்று கூறியுள்ளது.

பிளாக்பெரி இந்தியாவின் புதிய தலைவராக சுனில் லால்வனி பொறுப்பேற்கிறார்.

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை முந்தைய வாரப் பதிவு 

Tuesday, April 23, 2013

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை(14-04-13 முதல் 20-04-13வரை)

நோக்கியா நிறுவனம் அதன் லூமியா 720 வகை கைப்பேசிகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது, விலை ரூபாய் 18,999 ஆக இருக்கும்.

ஆப்பிள் மற்றும் சாம்சங்கைத் தொடர்ந்து தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனமும் ஸ்மார்ட் வாட்ச் தயாரிப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

ஆஷ்டன் விருது வென்ற இந்திய விஞ்ஞானியான சன்டிபாடா கோன்சௌத்ரி, மத்திய அரசிடம் சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும்(சிறிய சோலார் பேனல்களின் உதவியால்) சட்டையை உருவாக்குவதற்கான ஆராய்ச்சி முன்மொழிவைக்(Research proposal) கொடுத்துள்ளார்.  இச்சட்டை மூலமாக 400 வாட் மின்சாரம் வரை தயாரிக்கலாம் என்று கூறியுள்ளார்.

1,20,000 ஆண்ட்ராய்டு செல்பேசிகளுக்கான இலவச App-களில் பாதுகாப்பு வழு இருப்பதாக கலிபோர்னியா பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கண்டறிந்துள்ளார்.  இந்த இலவச App-களை கிட்டதட்ட 50 கோடி பயனர்கள் பயன்படுத்துகிறார்களாம்.

யாகூ நிறுவனம் புதிதாக வானிலையை கூறும் ஒரு App-ஐ வெளியிட்டுள்ளது.  மேலும், அதன் மின்அஞ்சல் App-ஐயும் மேம்படுத்தியுள்ளது.

வாட்ஸ்ஆப்(WhatsApp), க்கிக்(kik) போன்று ஒரு தகவல்/செய்தி பரிமாறும் App-ஐ just.me நிறுவனம் வெளியிட்டுள்ளது.  இதன் முக்கிய சிறப்பு மற்ற App-கள் போலில்லாமல், இதில் செய்தி அனுப்புபவரிடம் மட்டும் இந்த App இருந்தால் போதுமானது, இருவரிடமும் இருந்தேயாக வேண்டும் என்கிற அவசிமில்லை.

ஃபேஸ்புக் ஐஓஎஸ்-க்கான(iOS) புதிய SDK-ஐ(Software Development Kit) வெளியிட்டுள்ளது.  புகுபதிகை(login) வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது, உள்ளார்ந்த வரைபட(graph) வசதி சேர்க்கப்பட்டுள்ளது.  இதனால் ஐஓஎஸ்-க்கான ஃபேஸ்புக் App உருவாக்கும் நிரலர்கள் எளிதாக செய்து முடிக்கலாம் என கூறப்படுகிறது.

இந்தியாவைச் சேர்ந்த சுமித் தாகர் என்பவர் பார்வைத்திறன் இல்லாதோர்/குறைபாடுடையோர்களுக்கான ஒரு நுண்ணறிபேசி(Smartphone)யை உருவாக்கியுள்ளார்.  இதனுடைய தொடுதிரை இதற்கு வரும் செய்திகளை பிரெய்லி முறையில் படிக்கும் விதமாக திரையை மேடு பள்ளம் கொண்டதாக(தொட்டு உணரும் பிரெய்லி எழுத்துருக்களாக) மாற்றிவிடும் புதிய தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் சிரி(siri) பேச்சு தொழில்நுட்பம், ஐபோன் பயனர்கள் அதற்கு அளிக்கும் பேச்சுக் கட்டளைகளை(Voice Commands) 2 வருடம் வரை பதித்து/சேமித்து வைத்துக்கொள்ளும் என அந்நிறவனத்தின் தகவல் தொடர்பாளர் கூறியுள்ளார்.  சேமிக்கப்படும் இத்தகவல்கள் சிரி தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்காக மட்டுமே என கூறப்பட்டாலும், பயனர்களிடையே இது சிறு சலனத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஃபேஸ்புக் அதன் App-ல் இருந்து உங்கள் ஃபேஸ்புக் நண்பர்களுக்கு இலவசமாக அ(தொ)லைபேசும் வசதியை தந்துள்ளது.  தற்போதைக்கு இவ்வசதி அமெரிக்கா, கனடாவில் மட்டும் நடைமுறையில் உள்ளது.  விரைவில் மற்ற பகுதிகளுக்கும் அறிமுகப்படுத்தப்படும் என நம்பப்படுகிறது.

இந்தியாவில் சாம்சங் S4 ஏப்ரல் 26 முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.


மேலும் படிக்க:
இதற்கு முந்தைய வார தொழில்நுட்ப செய்திகளைப் படிக்க -> இங்கே சொடுக்கவும்
இதற்கு அடுத்த வார தொழில்நுட்ப செய்திகளை படிக்க -> இங்கே சொடுக்கவும்