Showing posts with label samsung. Show all posts
Showing posts with label samsung. Show all posts

Monday, December 30, 2013

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை(15-12-13 முதல் 21-12-13வரை)

சாப் நிறுவனம் தனது சப்ளை செயின் தயாரிப்பான கங்கை (Ganges) -ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

கூகுள் நிறுவனம் ரோபோக்களை உருவாக்கும் போஸ்டன் டைனமிக்ஸ் (Boston Dynamics) என்கிற நிறுவனத்தைக் கையகப்படுத்தியுள்ளது.

பேஸ்புக், டிவிட்டர் போன்று இந்தியாவில் இருந்து ஒரு புதிய மைக்ரோ பிளாகுகிங் சமூக வலைதளம் வெப்லர் (vebbler) என்கிற பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது.

2014-ம் வருடம் 16,000 இளநிலைப் பட்டதாரிகளை பணியமர்த்தவுள்ளதாக இன்போசிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சமூக வலைதளங்கள் மற்றும் மைக்ரோ பிளாகுகிங் தளங்களைப் பயன்படுத்தி நிறுவனத்திற்கு ஆட்களை பணியமர்த்தும் முறை அதிகரித்து வருவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

டிவிட்டர் விரைவிலேயே தனது கீச்சுக்களை மாற்றி/திருத்தி எழுதும் சிறப்பம்சத்தை அறிமுகப்படுத்த உள்ளது.  இது போன்ற சிறப்பம்சம் பேஸ்புக் கமெண்டுகளில் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

சாம்சங் மற்றும் எல்ஜி இரண்டு நிறுவனங்களும் 105 இன்ச் உடன் வளைந்த திரையுடைய ஒஎல்இடி(OLED) தொலைகாட்சிப் பெட்டிகளை அறிமுகப்படுத்தவுள்ளது.

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை முந்தைய வாரப் பதிவு

Sunday, December 29, 2013

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை(01-12-13 முதல் 07-12-13வரை)

ஸோலோ நிறுவனம் Q500 என்கிற பெயரில் ஒரு புதிய நுண்ணறி அலைபேசியை அறிமுகப்படுத்தவுள்ளது.

ஸ்னாப்சாட் என்கிற குறுஞ்செய்தி பேச்சுச் செயலி மிகவும் பிரபலமடைந்து வருகிறது.  மற்ற பேச்சு செயலிகளைப் போலின்றி இதில் அனுப்பும் செய்திகள் குறிப்பிட்ட கால அளவுக்குப் பிறகு (சில வினாடிகள்) பெறுநரின் பக்கத்திலிருந்து மறைந்து விடுவதோடு, வழங்கிக் கணினியிலிருந்தும் அழிந்துவிடம்.

இதுவரை கணினிகளைக் குறிவைத்து தாக்கிக் கொண்டிருந்த கொந்தர்கள், தற்போது நுண்ணறி தொலைக்காட்சி, பாதுகாப்பு கேமராக்கள் போன்றவற்றை தங்கள் கட்டளைக்கு ஏற்றவாறு செயல்படவைக்க ஆரம்பித்துள்ளார்கள்.

ஒரு நபர் tag செய்யப்படாத புகைப்படங்களிலும் அவரை அடையாளும் காணும் வகையில் ஒரு புதிய அல்காரிதத்தை (Algorithm)  டோரண்டோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள்/பேராசிரியர்கள் உருவாக்கியுள்ளனர்.

ஃபேஸ்புக் நிறுவனம் இந்தியாவைச் சேர்ந்த பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்ட லிட்டில் ஐ லேப்ஸ் (Litte Eye Labs) நிறுவனத்தை கையகப்படுத்தவுள்ளதாக அறியப்படுகிறது.

அமேசான் தனது கின்டில் ஃபயர் பலகைக் கணினிகளின் விலையைக் குறைத்துள்ளது.  தன்னுடைய 16 GB பலகைக்கணினியை ரூ. 18,000 மற்றும் 32 GB பலகைக்கணினியை ரூ 26,000 -க்கும் விற்கவுள்ளது.  இது அவற்றின் பழைய விலையை விட ரூ. 4000 குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகாஷ் பலகைக்கணினிகளை உருவாக்கும் டேட்டா வைண்டு நிறுவனம் தனது யுபிஸ்லேட் சிலேட்டு கணினிகளுக்கு செயலிகளை உருவாக்குவதற்காக  ஹேப்பியஸ்ட் மைண்ட்ஸ் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது.

அமேசான் நிறுவனம் இந்தியத் தபால் துறையுடன் இணைந்து விநியோகத்தின்போது பணம் பெறுதல் (கேஷ் ஆன் டெலிவரி -Cash on Delivery) முறையில் தனது பொருட்களை விநியோகிக்க முயற்சித்து வருகிறுது.  இது நடைமுறை சாத்தியமானால் அமேசான் இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் தனது எல்லைகளை விரிவுபடுத்தி இந்தியாவில் தனது இருப்பை நிலைநிறுத்தி ஃபிளிப் கார்ட், ஸ்னாப்டீல் போன்ற இந்தியக் நிறுவனங்களுடன் விற்பனையில் மல்லுக்கட்டும்.

நௌக்ரி.காம்(Naukri.com) நிறுவனப் புகழ் இன்ஃபோ எட்ஜ்(InfoEdge) நிறுவனம் 10 கோடி ரூபாயை இணைய வழி கல்வி மற்றும் மதிப்பீட்டு நிறுவனமான ஆப்லெக்ட் லெர்னிங் சிஸ்டம்ஸ் (Applect Learning Systems) நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது.

கூகுள் நிறுவனம் அமேசான் நிறுவனத்துடன் போட்டியிடும் விதமாக தனது மேகக் கணிமைச் சேவைக்கான விலையை குறைத்துள்ளது.  இது அமேசானுக்கு நெருக்கடி தரக்கூடிய நிகழ்வாக தொழில்நுட்ப உலகில் பார்க்கப்படுகிறது.

ஏர்செல் நிறுவனம் அடுத்த 3-6 மாதங்களில் இந்தியாவில் தனது 4G சேவைகளைத் தரவுள்ளதாக அறிவித்துள்ளது.  பார்தி ஏர்டெல் நிறுவனத்திற்கு அடுத்ததாக இந்தியாவில் 4G சேவைகளை இந்தியாவில் வழங்கவுள்ள 2-வது நிறுவனம் இதுவாகும்.

கூகுள் நிறுவனம் தனது குரோம் புக் (சாம்சங் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது) இந்தியாவில் வெளியிடவுள்ளது, இதன்விலை இந்திய ரூபாய் சுமார் 27,000 ஆக இருக்கும் எனத் தெரிகிறது.

சாம்சங் நிறுவனம் தனது இருபுறமும் ஒளிபுகக்கூடிய திரைக்கு(transparent dual side screen) காப்புரிமைப் பெறவுள்ளது.

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை முந்தைய வாரப் பதிவு

Friday, November 8, 2013

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை(13-10-13 முதல் 19-10-13வரை)

இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப, மென்பொருள் நிறுவனமான டிசிஎஸ்(TCS) தனது ஆள்சேர்ப்பு(hiring) முறைமை திட்டங்களை மாற்றியுள்ளதாக தெரிகிறது.

2013-ம் ஆண்டின் இந்தியாவின் மிக கவர்ச்சிகரமான அலைபேசி வணிக நிறுவனமாக "சாம்சங் " உள்ளதாக Trust Research Advisory (TRA) ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.

ஆன்ட்ராய்டு கிட்கேட்(KitKat) அக்டோபர் இறுதியில் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

நுண்ணறி கைக்கடிகார சந்தையில் புதிய போட்டியாளராக அடிடாஸ்(adidas) நிறுவனமும் களமிறங்கியுள்ளது.  சான் பிரான்சிஸ்கோ நகரில் நடந்த ஒரு அலைபேசி மாநாட்டில் இந்த அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுளத்து.

இந்திய அலைபேசி தயாரிப்பு நிறுவனமான மைக்ரோமேக்ஸ் தனது பிராண்டை(Brand) மேலும் பிரபலபடுத்துவதற்காக ஹாலிவுட் நடிகரான ஹக் ஜேக்மேனை(Hugh Jackman) தனது வணிகத் தூதராக(Brand Ambassador) நியமித்துள்ளது.  இவர் X-Men series திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசு நிறுவனமான சிடாக்(CDAC - Centre for Development of Advanced Computing) ஐகேன்(ICANN - Internationl Corporation for Assigned Names and Numbers) உடன் இணைந்து இணைய வழி தாக்குதல்களை எதிர்கொள்ளும் தொழில்நுட்பத்தை வளர்க்க ஒரு மையத்தை உருவாக்கவுள்ளது.


தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை முந்தைய வாரப் பதிவு


Monday, April 29, 2013

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை(21-04-13 முதல் 27-04-13வரை)

கூகுளின் street view சேவை தற்போது மேலும் 50 உலக நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இல்லியனாஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் புதிய லித்தியம்-அயன் பேட்டரி தொழில்நுட்பம் ஒன்றை கண்டறிந்துள்ளனர்.  இத்தொழில்நுட்படத்தின் மூலம் அதிக மின்திறனை குறைந்த அளவுடைய மின்கலத்தில் சேமிக்க முடியும் என்றும், இது மிக விரைவாக மின்னேற்றம்(charge) ஆகிவிடுவதோடு, நீண்ட நேரத்திற்கு அதைத் தேக்கி வைத்திருக்கும் திறனுடையதாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அமேசான்.காம் இந்த வருட கடைசியில் ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் TV-க்குப் போட்டியாக ஒரு செட்-டாப் பாக்சை அறிமுகப்படுத்தவுள்ளது.  இது இணைய்யிதிலிருந்து நிகழ்படம்/கணொளியை ஓடை(Streaming) தொழில்நுட்ப முறையில் காட்டும்.

ஆப்பிள் நிறுவனம் அதன் வருடாந்திர் உலகலாவிய உருவாக்குனர்(Developers) கலந்தாய்வு/மாநாட்டை ஜூன் மாதத்தில் சான் பிரான்சிஸ்கோ நகரில் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

பார்தி ஏர்டெலும், மைக்ரோசாஃப்டும் கூட்டாக இணைந்து அதன் வாடிக்கையாளர்களுக்கு எக்ஸ்பாக்ஸ்(Xbox) விளையாட்டு சாதனம் மற்றும் ஏர்டெல்லின் அதிவேக இணைய இணைப்புக்கான சாதனத்தை வாக்குவதில் சலுகை அறிவித்துள்ளது.  இதன்முலம் வாடிக்கையாளர்கள் சுமார் இந்திய ரூபாய் 15000 வரை மிச்சப்படுத்தலாம் எனத் தெரிவித்துள்ளது.

இந்திய மென்பொருள் நிறுவனமான டெக் மகிந்திரா(Tech Mahindra) ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த டைப் அப்ரூவல் லேப்(Type Approval Lab) எனும் நிறுவனத்தை கையகப்படுத்தியுள்ளது. 

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மொபைல்களில் சாம்சங் நிறுவனம் நோக்கியாவைப் பின்னுக்குத் தள்ளி, முதலிடம் பிடித்துள்ளதாக ஜிஎஃப்கே-நீல்சன்(Gfk-Nielsen) கருத்துக்கணிப்பு/மதிப்பீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்டெல் நிறுவனம் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தைக் கொண்டு இயங்கும் குறைந்த விலை மடிக்கணினிகளை உருவாக்கி வருவதாகவும் இவற்றின் விலை சுமார் $200-ஆக இருக்கும்(இந்திய ரூபாயில் சுமார் 10,800) என்றும் இருக்கும் என்றும் அந்நிறுவனத்தின் சிஇஓ பால் ஒடெல்லினி(Paul Otellini) தெரிவித்துள்ளார்.

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி S4 தயாரிப்பு விற்பனைக்கு ஈடு கொடுக்க முடியாமல் பற்றாக்குறையுடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

சாம்சங், ஆப்பிள் நிறுவனத்திற்குப் பிறகு அதிக அளவில் மொபைல் போன்களை உற்பத்தி, ஏற்றுமதி செய்யும் நிறுவனமான ஹூவாய்(Huawei) தன்னுடைய வணிக அடையாளத்தின்(Brand Image) பரவலை அதிகரிக்கும் பொருட்டு சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் செலவிட உள்ளதாகத் தெரிகிறது.

யுனிநார் நிறுவனம் தனது சிம் கார்டுகள், ரீசார்ஜ் வவுச்சர்களை ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுனர்கள், பால் பாக்கேட், செய்தித்தாள் போடுவோர் மூலமாக விற்பனை செய்யும் ஒரு புதிய யோசனை வைத்திருப்பதாகக் கூறியுள்ளது.

சாம்சங் தனது கேலக்ஸி S4 நுண்ணறிபேசியை உற்பத்தி செய்யும் பகுதியைத் இந்தியாவிற்குள் அமைக்கவிருப்பதாகக் கூறியுள்ளது.

மைக்ரோசாப்ட் தனது "Blue screen of death" பிரச்சனையை நிவர்த்தி செய்யும் நிரல் ஒட்டினை(Source code patch) மீண்டும் வெளியிட்டுள்ளது. 

ஜாவா நிரல்மொழியின் 8வது பதிப்பு வெளிவருவது மீண்டும் தள்ளிப்போடப் பட்டுள்ளது.  தற்போதைக்கு இப்புதியப் பதிப்பு 2014-ம் ஆண்டு வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:
இதற்கு முந்தைய வார தொழில்நுட்ப செய்திகளைப் படிக்க -> இங்கே சொடுக்கவும்
இதற்கு அடுத்த வார தொழில்நுட்ப செய்திகளை படிக்க ->

Tuesday, April 23, 2013

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை(14-04-13 முதல் 20-04-13வரை)

நோக்கியா நிறுவனம் அதன் லூமியா 720 வகை கைப்பேசிகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது, விலை ரூபாய் 18,999 ஆக இருக்கும்.

ஆப்பிள் மற்றும் சாம்சங்கைத் தொடர்ந்து தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனமும் ஸ்மார்ட் வாட்ச் தயாரிப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

ஆஷ்டன் விருது வென்ற இந்திய விஞ்ஞானியான சன்டிபாடா கோன்சௌத்ரி, மத்திய அரசிடம் சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும்(சிறிய சோலார் பேனல்களின் உதவியால்) சட்டையை உருவாக்குவதற்கான ஆராய்ச்சி முன்மொழிவைக்(Research proposal) கொடுத்துள்ளார்.  இச்சட்டை மூலமாக 400 வாட் மின்சாரம் வரை தயாரிக்கலாம் என்று கூறியுள்ளார்.

1,20,000 ஆண்ட்ராய்டு செல்பேசிகளுக்கான இலவச App-களில் பாதுகாப்பு வழு இருப்பதாக கலிபோர்னியா பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கண்டறிந்துள்ளார்.  இந்த இலவச App-களை கிட்டதட்ட 50 கோடி பயனர்கள் பயன்படுத்துகிறார்களாம்.

யாகூ நிறுவனம் புதிதாக வானிலையை கூறும் ஒரு App-ஐ வெளியிட்டுள்ளது.  மேலும், அதன் மின்அஞ்சல் App-ஐயும் மேம்படுத்தியுள்ளது.

வாட்ஸ்ஆப்(WhatsApp), க்கிக்(kik) போன்று ஒரு தகவல்/செய்தி பரிமாறும் App-ஐ just.me நிறுவனம் வெளியிட்டுள்ளது.  இதன் முக்கிய சிறப்பு மற்ற App-கள் போலில்லாமல், இதில் செய்தி அனுப்புபவரிடம் மட்டும் இந்த App இருந்தால் போதுமானது, இருவரிடமும் இருந்தேயாக வேண்டும் என்கிற அவசிமில்லை.

ஃபேஸ்புக் ஐஓஎஸ்-க்கான(iOS) புதிய SDK-ஐ(Software Development Kit) வெளியிட்டுள்ளது.  புகுபதிகை(login) வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது, உள்ளார்ந்த வரைபட(graph) வசதி சேர்க்கப்பட்டுள்ளது.  இதனால் ஐஓஎஸ்-க்கான ஃபேஸ்புக் App உருவாக்கும் நிரலர்கள் எளிதாக செய்து முடிக்கலாம் என கூறப்படுகிறது.

இந்தியாவைச் சேர்ந்த சுமித் தாகர் என்பவர் பார்வைத்திறன் இல்லாதோர்/குறைபாடுடையோர்களுக்கான ஒரு நுண்ணறிபேசி(Smartphone)யை உருவாக்கியுள்ளார்.  இதனுடைய தொடுதிரை இதற்கு வரும் செய்திகளை பிரெய்லி முறையில் படிக்கும் விதமாக திரையை மேடு பள்ளம் கொண்டதாக(தொட்டு உணரும் பிரெய்லி எழுத்துருக்களாக) மாற்றிவிடும் புதிய தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் சிரி(siri) பேச்சு தொழில்நுட்பம், ஐபோன் பயனர்கள் அதற்கு அளிக்கும் பேச்சுக் கட்டளைகளை(Voice Commands) 2 வருடம் வரை பதித்து/சேமித்து வைத்துக்கொள்ளும் என அந்நிறவனத்தின் தகவல் தொடர்பாளர் கூறியுள்ளார்.  சேமிக்கப்படும் இத்தகவல்கள் சிரி தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்காக மட்டுமே என கூறப்பட்டாலும், பயனர்களிடையே இது சிறு சலனத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஃபேஸ்புக் அதன் App-ல் இருந்து உங்கள் ஃபேஸ்புக் நண்பர்களுக்கு இலவசமாக அ(தொ)லைபேசும் வசதியை தந்துள்ளது.  தற்போதைக்கு இவ்வசதி அமெரிக்கா, கனடாவில் மட்டும் நடைமுறையில் உள்ளது.  விரைவில் மற்ற பகுதிகளுக்கும் அறிமுகப்படுத்தப்படும் என நம்பப்படுகிறது.

இந்தியாவில் சாம்சங் S4 ஏப்ரல் 26 முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.


மேலும் படிக்க:
இதற்கு முந்தைய வார தொழில்நுட்ப செய்திகளைப் படிக்க -> இங்கே சொடுக்கவும்
இதற்கு அடுத்த வார தொழில்நுட்ப செய்திகளை படிக்க -> இங்கே சொடுக்கவும்

Monday, April 8, 2013

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை(31-03-13 முதல் 06-04-13வரை)

  • ஃபேஸ்புக்(Facebook) ஆன்ட்ராய்டை அடிப்படையாகக் கொண்டு ஃபேஸ்புக்கின் அம்சங்கள் நிறைந்த ஒரு செல்பேசியை தயாரித்து வெளியிட திட்டமிட்டுள்ளதாக செய்திகள் கசிகின்றன.
  • இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப துறையைச் சார்ந்த இணையதளங்களே, இணையத் திருடர்களின் முக்கிய இலக்காக இருப்பதாக நச்சு நிரல் எதிர் மென்பொருள் தயாரிக்கும் நிறுவனமான சிமேன்டெக்(Symentec) கூறுகிறது.
  • ஏற்கனவே ஸ்கைப்(skype) போன்ற இணையச் சேவைகளை முடக்க முடிவெடுத்திருந்த சவூதிஅரேபியா(அவர்கள் கேட்ட கட்டுப்பாடுகளை, வரம்புகளை நிறைவேற்றாத பட்சத்தில்), தற்போது அரேபியாவில் மிகப்பிரபலமாக இருக்கும் டிவிட்டர் சேவையிலும் சில முக்கிய முடிவுகளாக, டிவிட்டர் பயனர்கள் தங்கள் அடையாளச் சான்றுகளை(இன்னாருடைய டிவிட்டர் கணக்கு இதுதான் என அவர்கள் அறிய) அரசுக்கு அளிக்கவேண்டும் எனக்கூறியுள்ளது.  இந்த முடிவு டிவிட்டர் அனானிகளைத்(anonymous) தவிர்ப்பதற்காக எடுக்கப்பட்டுள்ளது.
  • முட்டாள்கள் தினத்தன்று தேடுபொறி முன்னோடியான கூகுள் பல காமெடி கலாட்டாக்களை ஏப்ரல் 1-ம் தேதி அரங்கேற்றியது.  1. வாசனை அடிப்படையாகக் கொண்ட தேடல் வசதி(Google nose beta), 2. கூகிளின் வரைபடத்தை(map) அடிப்படையாகக் கொண்ட புதையல் வேட்டை 3. கூகுள் பைபர்(fiber) அதி வேக இணைய இணைப்பிற்கான இலவச வசதி என பட்டியல் நீளுகிறது.  பாவம், எத்தனை பேர் ஏமாந்தார்கள் என்று தெரியவில்லை.. ;)
  • ஒரு சாம்பிள் கூகுள் வாசனைத் தேடல்
  • கூகுள் கிளாஸ்(google glass) 8000 தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களால் பரிசோதிக்கப்படவுள்ளதாக தெரிகிறது.  இதில்  புகழ்பெற்ற முக்கியப் பிரமுகர்கள், தொழில்நுட்பம் சார்ந்து எழுதும் நபர்கள், தொழில்நுட்ப விமர்சகர்கள் என பலரும் அடக்கம்.
  • புதுதில்லி மற்றும் ஹவுராவுக்கு இடையேயான ராஜ்தானி எக்ஸ்பிரஸில் கம்பியில்லா(wi-fi) இணைய அணுக்கம் வழங்கப்பட்டுள்ளது.  மேலும், இந்த ஆண்டின் இறுதிக்குள் இவ்வசதி ராஜ்தானி, சதாப்தி, தூரந்தோ உள்ளிட்ட 50 இரயில்களிலும் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக இரயில்வே அமைச்சர் திரு. பவன் குமார் பன்சால் அறிவித்துள்ளார்.
  • சீனாவைச் சேர்ந்த நுண்ணறிபேசி(SmartPhone) தயாரிப்பு நிறுவனம் ஒன்று 5000 mAh திறனுடைய மின்கலத்துடன்(Battery) கூடிய நுண்ணறிபேசியை அறிமுகப்படுத்தவுள்ளது.  தற்போது மோட்டோரோலாவின் டிராய்டு ரேசர் அதிகபட்சமாக 3300 mAh திறனுடைய மின்கலத்தைக் கொண்டுள்ளது.  5000 என்கிற அளவு இதுவரை குளிகைக் கணினிகளில்தான்(Tablet) பயன்படுத்தப்பட்டு வந்தன.
  • திரு. ரதேஷ் பாலகிருஷ்ணன் ரெட்ஹேட்(Redhat) நிறுவனத்தின் மேகக்கணிமை குழுவிற்கு  தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.  இவர் இதற்கு முன் மைக்ரோசாப்டில்(Microsoft) பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
  • பயர்பாக்ஸ் உலாவி(Firefox browser) நிறுவனமா மோசில்லா(Mozilla)  15 வருடங்களை நிறைவுசெய்துள்ளது.  15 வருடங்களுக்கு முன் நெட்ஸ்கேப்(Netscape) நிறுவனம் தனது நெட்ஸ்கேப் உலாவியின் மூல நிரலை(Sourcecode) பொதுப்பயன்பாட்டிற்கு வெளியிட்டு மோசில்லா திட்டத்தை உருவாக்கியது.
  • ஆன்ட்ராய்டில் இயங்கும் நோட்புக்(Notebook pc) கணினிகளை இந்த வருட இறுதியில் கூகுள் வெளியிடும் எனத் தெரிகிறது.
  • சாம்சங் தனது கேலக்ஸி ஏஸ் 2-க்கு ஆன்ட்ராய்டு 4.1.2 புதுப்பித்தலை(update) வழங்கியுள்ளது.  எப்படி புதுப்பிப்பது?
    விளக்க காணொளி: நன்றி TechFusions Youtube channel
  • கட்டற்ற மற்றும் திறமூல(Free and open source) தரவுதள மேலாண்மை(Database management) மென்பொருள்களில் ஒன்றான போஸ்கிரெஸ்க்யூல்(PostgreSQL), தரவுகளுக்கு ஊறுவிளைவிக்கும் ஒரு முக்கிய வழு அதன் மென்பொருளில் உள்ளதைக் கண்டறிந்துள்ளது.  தற்போது அதை நிவர்த்தி செய்யும் தீர்வினையும் அதன் மூல நிரலில் சேர்த்துள்ளது.  இவ்வழு அதன் 9.0, 9.1, 9.2 ஆகிய பதிப்புகளில் உள்ளதெனவும், அதனால் தரவுதள மேலாளர்களை(DB Administrators) PostgreSQL 9.2.4, 9.1.9 அல்லது 9.0.13 பதிப்புகளைத் தரவிறக்கி பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளது.  கண்டறியப்பட்ட வழு வேறெந்த தீகொந்தர்களாளும்(hackers) பயன்படுத்தப்(exploit) பட்டதாகத் தகவலில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • வீடியோகான் நிறுவனம் தனது VT75C குளிகைக்கணினியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.  இதன் முக்கிய சிறப்பு இது மற்ற சிம் கார்டுடன் கூடியது, மேலும் சிம் கார்டின் வாயிலாக 2G வழியில் இணைய இணைப்பையும் உபயோகப்படுத்தலாம்.  விலை இந்திய ரூபாய் 6,500-ஆக இருக்கும் எனத்தெரிகிறது.
  • ஆன்ட்ராய்டுக்கான குரோம் உலாவியில் அதன் மேசைக்கணினிக்கான பதிப்பில் இருக்கும் கடவுச்சொல்(Password) ஒருங்கிணைப்பு(sync) வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • சாம்சங் நிறுவனமும், மோசில்லாவும் இணைந்து செர்வோ(Servo) என்கிற  நகர்பேசிகளில் பயன்படுத்தப்படும் ஒரு புதிய உலாவி எஞ்சினை(Engine) உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
  • மோசில்லா தனது பயர்பாக்ஸ் உலாவியின் புதிய பதிப்பை வெளியிட்டுள்ளது(பதிப்பு எண் 20).  இப்புதிய பதிப்பில் பல புதிய அம்சங்களும்(features) முக்கியமாக ஒவ்வொரு டேபிலும்(Tab) கூட தனிப்பட்ட உலாவல்(Private browsing) மேற்கொள்ளும் படி மாற்றப்பட்டுள்ளது(முந்தைய பதிப்புகளில் மற்ற சாளரங்கள் மூடப்பட்டு தனிஉலாவலுக்காக ஒரு புதிய சாளரம் திறக்கப்படும், அதில் உள்ள அனைத்து டேப்களுமே தனிஉலாவல் முறையிலேயே இருக்கும்), சில முக்கிய வழு நிவர்த்திகளும்(bug fixes) செய்யப்பட்டுள்ளன.
  • சாம்சங்கும், மோசில்லாவும் இணைந்து ரஸ்ட்(Rust) என்கிற ஒரு புதிய நிரல் மொழியை உருவாக்கியுள்ளன.  இது சி++-க்கு மாற்றாக அமையலாம் எனக்கூறப்படுகிறது.

மேலும் படிக்க:
இதற்கு முந்தைய வார தொழில்நுட்ப செய்திகளைப் படிக்க -> இங்கே சொடுக்கவும்
இதற்கு அடுத்த வார தொழில்நுட்ப செய்திகளை படிக்க ->  இங்கே சொடுக்கவும்